ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட் நிறுவனத்தின் போயிங் 737-800 விமானம் ஓமான் தலைநகர் மஸ்கட்டில் இருந்து மேலே கிளம்ப ஆயத்தமானபோது அதன் ஓர் இயந்திரத்தில் தீ கிளம்பியது.
இதனால் அந்த விமானத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக விமானத்தை விட்டு கீழே இறக்கப்பட்டனர்.
எல்லாரும் பத்திரமாக தரையிறங்கியதாக இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் தலைவர் அருண்குமார் கூறினார். இந்த இயக்குநரகம் சம்பவம் பற்றி புலன்விசாரணை நடத்தி வருகிறது என்றும் குறுஞ்செய்தியில் அவர் தெரிவித்தார்.
கொச்சி நகருக்குப் புறப்பட்ட அந்த விமானத்தில் 141 பயணிகள் இருந்தனர். அது மஸ்கட்டில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 11.20க்கு புறப்படவிருந்தது என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
அந்த விமானத்தின் ஓர் இயந்திரத்தில் இருந்து புகை கிளம்பியதை மற்றொரு விமானத்தில் இருந்த ஊழியர்கள் பார்த்ததாக அது மேலும் தெரிவித்தது.
சில பயணிகளுக்கு இலேசான காயம் ஏற்பட்டதாகவும் யாரும் பெரியளவில் பாதிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் கூறின.