ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான இயந்திரத்தில் தீ மூண்டது: 141 பயணிகளும் உயிர் தப்பினர்

ஏர் இந்­தியா எக்ஸ்­பி­ரஸ் லிமிடெட் நிறு­வ­னத்­தின் போயிங் 737-800 விமா­னம் ஓமான் தலை­ந­கர் மஸ்­கட்­டில் இருந்து மேலே கிளம்ப ஆயத்­த­மா­ன­போது அதன் ஓர் இயந்­திரத்தில் தீ கிளம்பியது.

இத­னால் அந்த விமா­னத்­தில் இருந்த 100க்கும் மேற்­பட்ட பய­ணிகள் உட­ன­டி­யாக விமானத்தை விட்டு கீழே இறக்கப்பட்டனர்.

எல்­லா­ரும் பத்­தி­ர­மாக தரை­யிறங்­கி­ய­தாக இந்­தி­யா­வின் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து இயக்­கு­ந­ர­கத்­தின் தலை­வர் அருண்­கு­மார் கூறி­னார். இந்த இயக்­கு­ந­ர­கம் சம்­ப­வம் பற்றி புலன்­வி­சா­ரணை நடத்தி வரு­கிறது என்­றும் குறுஞ்­செய்­தி­யில் அவர் தெரி­வித்­தார்.

கொச்சி நக­ருக்­குப் புறப்­பட்ட அந்த விமா­னத்­தில் 141 பய­ணி­கள் இருந்­த­னர். அது மஸ்­கட்­டில் இருந்து உள்­ளூர் நேரப்­படி காலை 11.20க்கு புறப்­ப­ட­வி­ருந்­தது என்று ஏர் இந்­தியா எக்ஸ்­பி­ரஸ் அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

அந்த விமா­னத்­தின் ஓர் இயந்­தி­ரத்­தில் இருந்து புகை கிளம்­பியதை மற்­றொரு விமா­னத்­தில் இருந்த ஊழி­யர்­கள் பார்த்­த­தாக அது மேலும் தெரி­வித்­தது.

சில பயணிகளுக்கு இலேசான காயம் ஏற்பட்டதாகவும் யாரும் பெரியளவில் பாதிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் கூறின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!