கட்டுமானத் துறையில் ஆக அதிக வேலையிட மரணங்கள்

கட்டுமானத் துறையில் ஆக அதிக வேலையிட மரணங்கள்

3 mins read

வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றத்தின் அரையாண்டு அறிக்கை

சிங்­கப்­பூ­ரில் இந்த ஆண்­டின் முதல் பாதி­யில் வேலை இடங்­களில் நிகழ்ந்த மர­ணங்­கள், கடும் காயங்­கள் ஆகி­ய­வற்­றைப் பொறுத்­த­வரை கட்­டு­மா­னத் துறை­ மு­த­லி­டம் வகிக்­கிறது.

அந்­தத் துறை­யைச் சேர்ந்த வேலை இடங்­களில் நிகழ்ந்த விபத்­து­களில் பத்து பேர் மாண்டு­விட்­ட­னர். கட்­டு­மான வேலை இடங்­களில் கடும் காயம் விளை­வித்த 84 விபத்­து­கள் நிகழ்ந்­தன.

இவ்­வாண்டு ஜன­வரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை வேலை­யி­டங்­களில் 28 மர­ணங்­கள் ஏற்­பட்­டன. இதுவே கடந்த ஆண்­டின் இதே கால­கட்­டத்­தில் ஏற்­பட்ட மரண எண்­ணிக்கை 23 ஆகும்.

மனி­த­வள அமைச்­சும் வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார மன்­ற­மும் நேற்று வேலை­யி­டப் பாது­காப்பு பற்­றிய அரை­யாண்டு புள்ளி­வி­வ­ரங்­களை வெளி­யிட்­டன. கட்­டு­மா­னத்­து­றை­யில் அம­லாக்க நட­வ­டிக்­கை­களை மனி­த­வள அமைச்சு முடுக்கி விட்­டுள்­ள­தாக அறிக்கை கூறி­யது.

இந்த ஆண்டு ஜன­வரி முதல் செப்­டம்­பர் நடுப்­ப­குதி வரை­யி­லான கால­கட்­டத்­தில் கட்­டு­மானத்­து­றை­யைச் சேர்ந்த வேலை இடங்­க­ளுக்கு 63 வேலை நிறுத்த உத்­த­ர­வு­கள் பிறப்­பிக்­கப்­பட்­டன.

அவற்­றில் ஊழி­ய­ருக்கு ஆபத்து விளை­விக்­கக்­கூ­டிய பாது­காப்பு இல்­லாத நில­வ­ரங்­களும் நடை­மு­றை­களும் காணப்­பட்­டன.

வேலை நிறுத்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்ட நிறு­வ­னங்­கள், வெளி தணிக்கை அதி­கா­ரி­களை நிய­மித்து தங்­கள் வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார நிர்­வாக முறை­களை மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டும். குறை­பா­டு­க­ளைச் சரி செய்த பிறகே வேலை நிறுத்த உத்­த­ரவு மீட்­டுக்­கொள்­ளப்­படும்.

சிங்­கப்­பூ­ரில் இந்த ஆண்­டில் வேலை இட மர­ணங்­கள் அதி­க­ரித்­த­தை­ய­டுத்து வேலை­யி­டப் பாது­காப்பு முக்­கிய அம்­ச­மாகி இருக்­கிறது.

கிராப் விநி­யோக வாகன ஓட்­டு­நர் ஒரு­வர், வேலை­யி­டத்­தில் செப்­டம்­பர் 1ஆம் தேதி மாண்­டார். அதை­ய­டுத்து இந்த ஆண்­டில் இது­வரை வேலை­யி­டத்­தில் மாண்­டோர் எண்­ணிக்கை 37 ஆனது.

சென்ற ஆண்டு முழு­வ­தி­லும்­ ப­தி­வான எண்­ணிக்­கை­யை­விட இது அதி­கம். வேலை இடங்­களில் உய­ரத்­தி­லி­ருந்து கீழே விழு­வது, வாக­னங்­கள் தொடர்­பான விபத்­து­களில் சிக்­கு­வது ஆகி­யவை மர­ணங்­க­ளுக்கு முக்­கி­யக் கார­ணங்­கள்.

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லால் கட்­டு­மா­னத்­துறை ஆள் பற்­றாக்­கு­றை­யைச் சந்­தித்­ததை தேசி­ய தொழிற்­சங்­கக் காங்­கி­ர­சின் உதவித் தலை­மைச் செய­லா­ளர் மெல்­வின் யோங் சுட்­டி­னார். கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டதை அடுத்து கட்­டு­மான நிறு­வ­னங்­கள் கூடு­த­லான வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைப் பணி­ய­மர்த்­தத் தொடங்­கி­யுள்­ளன. புதிய ஊழி­யர்­கள் வேலைக்­குப் பழக நேரம் தேவை என்­ப­தா­லும், தேங்­கிக் கிடந்த வேலை­களை முடிக்­கும் அவ­ச­ரத்­தில் செயல்­பட்­ட­தா­லும் வேலை­யிட விபத்­து­கள் அதி­க­ரித்­தி­ருக்­கக்­கூ­டும் என்றார் அவர்.

கிரு­மிப்­ப­ர­வ­லுக்­குப் பிந்­திய பொரு­ளி­யல் மீட்சி நிலை­யில், இத்­த­கைய போக்கு உல­கின் மற்ற நாடு­க­ளி­லும் பதி­வா­கி­யி­ருப்­பதை வல்­லு­நர்­கள் சுட்­டி­னர். ஊழி­யர்­களி­டம் பாது­காப்பை வலி­யு­றுத்­த­வும் அபாய மதிப்­பீடு, சோத­னை­களில் பங்­கு­கொள்ள வைக்­க­வும் மேலா­ளர்­கள் பொறுப்­பேற்­றுக்­கொள்ளவேண்­டும் என்­ற­னர் அவர்­கள்.

இவ்வாண்டு போக்­கு­வ­ரத்து, சேமிப்­புக்­கிடங்கு சார்ந்த வேலை­யி­டங்­களில் ஐவரும் உற்­பத்­தித்­து­றை­யில் நால்­வ­ரும் கடல்­து­றை­யில் நால்­வ­ரும் பலி­யா­யி­னர்.

இத­னி­டையே, வேலை இடங்­களில் காயம் ஏற்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்ட சம்­ப­வங்­கள் குறைந்து உள்­ளன. இந்த ஆண்­டின் முதல் பாதி­யில் இத்­த­கைய சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 10,401. இது சென்ற ஆண்டு இதே கால­கட்­டத்­தில் 11,248 ஆக இருந்­தது.

வேலை­யி­டப் பாது­காப்பை மேம்­ப­டுத்த இம்­மா­தத் தொடக்­கத்­தில் மனி­த­வள அமைச்சு புதிய பல நட­வ­டிக்­கை­களை நடை­முறைப்­ப­டுத்­தி­யுள்­ளது.