இந்திய-சிங்கப்பூர் அமைச்சர்நிலை வட்டமேசை மாநாட்டில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்

2 mins read

துணைப் பிர­த­ம­ரும் நிதி­ய­மைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங் ஐந்து நாள் அதி­கா­ரத்­து­வப் பய­ணம் மேற்­கொண்டு இன்று இந்­தியா செல்­கி­றார். சிங்­கப்­பூ­ரின் துணைப் பிர­த­ம­ராக அவர் மேற்­கொள்­ளும் முதல் அதி­கா­ரத்­துவ இந்­தி­யப் பய­ணம் இது.

புது­டெல்­லி­யில் நடை­பெ­றும் முதல் இந்­திய-சிங்­கப்­பூர் அமைச்­சர்நிலை வட்­ட­மேசை மாநாட்­டில் அவர் கலந்­து­கொள்­கி­றார்.

இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்­து­வ­தும் கூட்டு முயற்­சி­களில் இரு நாடு­க­ளுக்­கு­மான புதிய வாய்ப்­பு­களை அடை­யா­ளம் காண்­ப­தும் மாநாட்­டின் நோக்­கம் என்று சிங்­கப்­பூர் பிர­த­மர் அலு­வ­ல­கம் தெரி­வித்­தது.

திரு வோங்­கு­டன் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன், வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங், போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ரும் வர்த்­தக உறவு­ க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரு­மான எஸ். ஈஸ்­வ­ரன் ஆகி­யோர் இந்த மாநாட்­டில் கலந்து­கொள்­கின்­ற­னர்.

இந்­தியா சார்­பில் அந்நாட்டு நிதி­ய­மைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன், வெளி­யு­றவு அமைச்­சர் எஸ். ஜெய்­சங்­கர், வர்த்­த­கம், தொழில், உணவு, பொது விநி­யோ­கம் போன்­ற­வற்­றுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரான பியுஷ் கோயல் ஆகி­யோர் கலந்­து­கொள்­வர்.

புதிய அமைச்­சர்­நிலை மாநாட்­டில் மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல், நிதி, திறன் மேம்­பாடு, நீடித்த நிலைத்­தன்மை ஆகிய அம்­சங்­கள் குறித்து முக்­கி­ய­மான கலந்­து­ரை­யா­டல்­கள் இடம்­பெ­றும் என்று தெரிவிக்கப்பட்டது.

துணைப் பிர­த­மர் வோங் நாளை இந்­தி­யா­வின் குஜ­ராத் மாநிலத்­திற்­குப் பய­ணம் மேற்­கொள்­வார். அம்மாநில முதல்­வர் பூபேந்­தி­ர­பாய் பட்­டே­லைச் சந்­திப்­ப­து­டன் குஜ­ராத் அனைத்­து­லக நிதித் தொழில்­நுட்ப நக­ரத்­தை­யும் அவர் பார்வை­ இடு­வார்.

சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடையே வலு­வான, விரி­வான பொரு­ளி­யல் உற­வு­கள் நில­வி­வருகின்­றன. சென்ற ஆண்­டுக்­கான இரு­த­ரப்பு வர்த்­த­கத்­தின் மதிப்பு 26.8 பில்­லி­யன் வெள்ளி.

பொரு­ளி­யல், நிதித்­துறை ஒத்­து­ழைப்பு ஆகியவை இரு நாடு­களுக்­கும் இடை­யி­லான உறவில் முக்­கி­யத்­து­வம் பெறு­கின்றன.

இரு நாட்­டி­லும் கட்­டண முறை­களை இணைப்­பது தொடர்­பான முயற்சி சென்ற ஆண்டு தொடங்­கப்­பட்­டது. வரும் நவம்­பர் மாதம் அந்­தப் பணி நிறை­வ­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இந்­தத் திட்­டம் நடப்­புக்கு வரும்­போது சிங்­கப்­பூ­ரில் இருந்து இந்­தி­யா­விற்கு கைத்­தொ­லை­பேசி எண்­களைக் கொண்டு பணம் அனுப்ப இய­லும்.

ஆசி­யான் நாடு­க­ளுக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடை­யி­லான கலந்­து­ரை­யா­டல்­கள் தொடங்கி இந்த ஆண்­டு­டன் 30 ஆண்­டு­கள் நிறைவு­பெற்­றுள்­ளன. தற்­போது இதன் ஒருங்­கி­ணைப்­பா­ள­ராக சிங்­கப்­பூர் செயல்­ப­டு­கிறது.

மேலும், விரை­வில் ஜி-20 நாடு­களின் குழு­விற்­குப் பொறுப்­பேற்­க­ இருக்­கும் இந்­தியா, அடுத்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் புது­டெல்­லி­யில் நடை­பெ­ற­வி­ருக்­கும் ஜி-20 தலை­வர்­கள் உச்சநிலை மாநாட்­டில் கலந்­து­கொள்ள சிங்­கப்­பூ­ருக்கு அழைப்பு விடுத்­து இருக்கிறது.

கொவிட்-19 சூழ­லி­லும் இந்­தி­யா­வில் ஆக அதிக நேரடி முத­லீடு செய்த நாடாக சிங்­கப்­பூர் விளங்­கி­யது. அப்­போது சிங்­கப்­பூர் இந்­தி­யா­வில் செய்த நேரடி முத­லீட்­டின் மதிப்பு 17.42 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர்­.

இரு தரப்­பை­யும் சேர்ந்த பல நிறு­வ­னங்­கள் இரு நாட்­டி­லும் பதிவு­ செய்­யப்­பட்டு இயங்­கி­ வருகின்­றன.

இந்­தி­யா­வுக்­கும் குறிப்­பாக தமிழ்­நாட்­டுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடையே கலா­சார ரீதி­யாக நெருங்­கிய தொடர்பு பல நூறு ஆண்டு ­க­ளா­கவே இருந்து வந்­துள்­ளது.