பல இணக்கங்களைக் கண்ட முதல் வட்டமேசை கூட்டம்

பல இணக்கங்களைக் கண்ட முதல் வட்டமேசை கூட்டம்

2 mins read
a6fc521a-200a-4531-972c-7d7eccc36e2c
இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்நிலை வட்டமேசை கூட்டம் நேற்று இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்றது. படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

புதுடெல்லியில் இந்தியா-சிங்கப்பூர் முதலாவது அமைச்சர்நிலை சந்திப்பு

இந்­தி­யா­வின் சார்­பில் நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன், வெளி­யு­றவு அமைச்­சர் எஸ்.ஜெய்சங்­கர், வர்த்­தக தொழில் அமைச்­சர் பியுஷ் கோயல் ஆகி­யோ­ரும் சிங்­கப்­பூ­ரின் சார்­பில் துணைப் பிர­த­ம­ரும் நிதி­ய­மைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங், வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன், வர்த்­தக தொழில் அமைச்­சர் கான் கிம் யோங், போக்­கு­வ­ரத்து அமைச்­சரும் வர்த்­தக உற­வு­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரு­மான எஸ்.ஈஸ்­வ­ரன் ஆகி­யோரும் முதலாவது வட்டமேசை கூட்­டத்­தில் நேற்று கலந்து­கொண்­ட­னர்.

இந்­தி­யா­வுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடையே வளர்ந்து வரும் எதிர்­கால அம்­சங்­களில் ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்த இரு­நாட்டு அமைச்­சர்­களும் வலி­யுறுத்­தி­னர் என்று இந்­திய நிதி­ அமைச்சு தனது டுவிட்­டர் பக்கத்தில் தெரி­வித்­தது.

புதுடெல்லியில் நடந்த இந்தக் கூட்­டம் பற்றி தமது ஃபேஸ்புக்­கில் கருத்­து­ரைத்த துணைப் பிர­த­மர் வோங், ஜி20 தலை­வர்­கள் உச்­ச­நி­லைக் கூட்­டத்­திற்கு, அடுத்த ஆண்டு ஜி20 தலை­மைப் பொறுப்பை ஏற்­றுள்ள இந்­தியா, சிங்கப்பூருக்கு அழைப்பு விடுத்­த­தற்கு நன்றி தெரி­வித்­துக்­கொண்­டார். அடுத்த சில நாட்­களில் பற்­பல அம்­சங்­களில் பய­னுள்ள விவா­தங்­களில் ஈடு­பட தாம் ஆர்­வம் கொண்­டுள்­ள­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

கொவிட்-19 பெருந்­தொற்றுக்குப் பிந்­திய மீட்­சிக் காலத்­தி­லும் மாறி­வ­ரும் புவி­சார் அர­சி­யல் சூழ­லி­லும் தொட­ரும் விநி­யோ­கத் தொடர் இடை­யூ­று­க­ளுக்கு இடையே இரு­நா­டு­க­ளுக்­குப் பயன் அளிக்­கும் பரஸ்­பர ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்த இரு­த­ரப்­பும் உடன்­பட்­டன. இந்­தி­யா­வுக்­கும் சிங்­கப்­பூருக்கும் இடை­யி­லான பரஸ்­பர நன்மை­ய­ளிக்­கும் 57 ஆண்டுகால அர­ச­தந்­திர உறவை இரு­நாட்டு அமைச்­சர்­களும் மறு­வு­று­திப்­ப­டுத்­தி­னர். இரு­ நா­டு­க­ளுக்­கும் இடையே வலு­வாக வேரூன்றி இருக்­கும் உத்­தி­பூர்வ நம்­பிக்­கை­யின் அடித்­த­ளத்­தில், உண­வுப் பாது­காப்பு, எரி­சக்தி பாது­காப்பு, மின்­னி­லக்­க­ம­ய­மா­தல், பசு­மைத் தொழில்­நுட்­பம், திறன்­ மேம்­பாடு போன்ற பல்­வேறு அம்சங்­கள் தொடர்­பில் இரு­நாட்டு அமைச்சர்­களும் விவா­தித்­த­னர்.

துணைப் பிர­த­ம­ர் வோங் ஐந்து நாள் அதி­கா­ரத்­து­வப் பய­ணம் மேற்­கொண்டு இந்­தியா சென்று உள்ளார். சிங்­கப்­பூ­ரின் துணைப் பிர­த­ம­ராக அவர் மேற்­கொள்­ளும் முதல் அதி­கா­ரத்­துவ இந்­தி­யப் பய­ணம் இது. இன்று அவர் குஜ­ராத் செல்­கி­றார். அங்கு அவர் தலை­மை­யிலான அமைச்­சர் குழு, முத­ல­மைச்­சர் பூப்­பேந்­திர பாய் பட்­டே­லு­டன் பேச்சுவார்த்தை நடத்­து­வ­துடன் குஜ­ராத் அனைத்­து­லக நிதி நகரத்­தை­யும் பார்­வை­யி­டும்.