தைவானின் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் தாய்துங் என்ற வட்டாரத்தில் சனிக்கிழமை 6.4 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டது.
அதில் உயிருடற்சேதம் இல்லை. என்றாலும் நேற்று அதே பகுதியில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம் நிகழ்ந்ததாக தைவானின் பருவநிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.
அதனால் டோங்லி என்ற ரயில் நிலையத்தின் நடைமேடை இடிந்ததால் ரயில் பெட்டிகள் புரண்டன. யூலி என்ற நகரில் ஒரு கடை இடிந்து விழுந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலை அடிவாரம் ஒன்றில் பலர் மாட்டிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஐந்து பேர் மீட்கப்பட்டுவிட்டதாகவும் தேடி மீட்கும் பணி தொடர்வதாகவும் தீயணைப்புத் துறை தெரிவித்தது.

