எலிசபெத் அரசியாருக்கு பல்லாயிரம் பேர் அளித்த கண்ணீர்ப் பிரியாவிடை

எலிசபெத் அரசியாருக்கு பல்லாயிரம் பேர் அளித்த கண்ணீர்ப் பிரியாவிடை

2 mins read
20acab06-16d8-4d2a-a0a7-cafb5c2c7605
மறைந்த எலிசபெத் அரசியாரின் பிள்ளைகள் பின்செல்ல, அவரின் நல்லுடலை அரச கடற்படை வீரர்கள் சுமந்து சென்றனர். படம்: ராய்ட்டர்ஸ் -

பிரிட்­ட­னின் தன்­னி­க­ரற்ற அர­சி­யாக 70 ஆண்டு காலம் கோலோச்சி வர­லாற்­றில் நீங்கா இடம் பிடித்த இரண்­டாம் எலி­ச­பெத்­தின் நல்­லு­டல் நேற்று வின்ட்­சர் அரண்­ம­னை­யில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் நல்­ல­டக்­கம் செய்­யப்­பட்­டது. உல­கத் தலை­வர்­கள், அரச குடும்­பத்­தி­னர், பொது­மக்­கள் என பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோர் அர­சி­யா­ருக்கு பிரி­யா­விடை கொடுத்தனர்.

பிரிட்­ட­னில் 1965ஆம் ஆண்டு அந்­நாட்­டின் முன்­னைய பிர­த­மர் வின்ஸ்­டன் சர்ச்­சி­லுக்­குப் பின்­னர் முதல்­மு­றை­யாக எலி­ச­பெத் அர­சி­யா­ருக்கு அர­சாங்க இறுதி ஊர்­வ­லச் சடங்கு நடை­பெற்­றது.

சிங்­கப்­பூர் நேரப்­படி நேற்று மாலை 5.44 மணிக்கு, வெஸ்ட்­மின்ஸ்­டர் மண்­ட­பத்­தில் ஐந்து நாளாகக் கிடத்­தப்­பட்­டி­ருந்த அர­சி­யா­ரின் நல்­லு­டல், அரு­கில் உள்ள வெஸ்ட்­மின்ஸ்­டர் தேவா­ல­யத்­துக்கு எடுத்­துச்­செல்­லப்­பட்­டது. அங்­கு­தான் எலி­ச­பெத் அர­சி­யா­ரின் திரு­ம­ண­மும் முடி­சூட்டு விழா­வும் நடந்­தது.

பிரிட்­டிஷ் தேசிய கொடி போர்த்­தப்­பட்ட அர­சி­யின் நல்­லு­டல் அரச கடற்­ப­டை­யின் பீரங்கி வாக­னத்­தில் வைக்­கப்­பட்டு 142 மாலுமிகளால் இழுத்­துச் செல்­லப்­பட்­டது.

அர­சி­யா­ரின் நல்­லு­டல் வெஸ்ட்­மின்ஸ்­டர் தேவா­ல­யத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்­ட­போது, அவ­ரது மூத்த மக­னும் புதிய அர­ச­ரு­மான சார்ல்ஸ் உள்­ளிட்ட குடும்­பத்­தி­னர் உடன்­ந­டந்­த­னர்.

தேவா­ல­யத்­தில் நடந்த இறு­திச் சடங்­கில் அதி­பர் ஹலிமா யாக்­கோப் உள்­ளிட்ட 2,000 பேர் கலந்­து­கொண்­ட­னர்.

பிரிட்­ட­னுக்­கும் காமன்­வெல்த் அமைப்­புக்­கும் வாழ்­நாள் முழு­வ­தும் சேவை­யாற்­றப் போவ­தாக அர­சி­யார் இள­மை­யில் அளித்த வாக்­கு­று­தியை தமது உரை­யில் நினைவு கூர்ந்த கேன்­டர்­பரி பேரா­யர் ஜஸ்­டின் வெல்பி, அந்த வாக்கை மிகச் சிறப்­பு­டன் அர­சி­யார் நிறை­வேற்­றி­ய­தா­கக் கூறி­னார். உல­கம் அவ­ருக்­கா­கத் துயர்­கொள்­வ­தாக பேரா­யர் சொன்­னார்.

அர­சாங்க இறு­திச் சடங்­கின் நிறை­வைக் குறிக்க பியூ­கல் ஊது­கு­ழல் ஒலித்­தது. மறைந்த அர­சி­யா­ருக்கு இரண்டு நிமி­டம் மவுன அஞ்­சலி செலுத்­தப்­பட்ட பின்­னர், தேசிய கீதம் பாடப்­பட்­டது.

பிறகு அர­சி­யா­ரின் நல்­லு­டல் தேவா­ல­யத்­தி­லி­ருந்து, பக்­கிங்­ஹெம் அரண்­மனை உள்­ளிட்ட லண்­ட­னின் முக்­கிய இடங்­கள் வழி­யாக ஊர்­வ­ல­மாக கொண்­டு­செல்­லப்­பட்­டது. சுமார் 3,000 ராணு­வத்­தி­னர் ஊர்­வ­லத்­தில் நடந்­து­சென்­ற­னர்.

ஊர்­வ­லத்­தில் வழி நெடு­கி­லும் காத்­தி­ருந்த மக்­கள் மவு­ன­மாக மலர்­தூவி அஞ்­சலி செலுத்­தி­னர்.

இறு­தி­யாக அர­சி­யா­ரின் நல்­லு­டல் அவர் வசித்த வின்ட்­சர் அரண்­ம­னை­க்கு எடுத்­துச் செல்­லப்­பட்­டது. அங்குள்ள தேவாலயத் தில் நடந்த தனிப்­பட்ட இறுதிச்­ சடங்­கிற்­குப் பின்­னர் அவ­ரது கண­வர் பிரின்ஸ் பிலிப்­பின் சமா­தி­யின் அருகே அர­சி­யா­ரின் நல்­லு­டல் அடக்­கம் செய்­யப்­பட்­டது.