மறுசுழற்சிக்கான புதிய ஊக்குவிப்பு

மறுசுழற்சிக்கான புதிய ஊக்குவிப்பு

2 mins read
8ece6260-5a06-4b68-918b-18e46cb83f95
பிளாஸ்டிக் போத்தல்கள், உலோக கேன்கள் ஆகியவற்றில் விற்பனையாகும் 150 மில்லி லிட்டர் முதல் 3 லிட்டர் வரையிலான பானங்களுக்கு 10 காசுக்கும் 20 காசுக்கும் இடைப்பட்ட வைப்புத்தொகை வசூலிக்கப்படும். மறுசுழற்சி செய்யும்போது இந்தத் தொகையைத் திரும்பப் பெறலாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

2024ஆம் ஆண்டு நடப்புக்கு வருகிறது

சிங்­கப்­பூ­ரில் 2024ஆம் ஆண்டு மத்­தி­யில் கேன்­கள், போத்­தல்­கள் ஆகி­ய­வற்­றில் விற்­கப்­படும் பானங்­க­ளுக்கு, கூடு­த­லாக 10 அல்­லது 20 காசு செலுத்­த­வேண்டி இருக்­கும்.

பானங்­களை அருந்­திய பிறகு காலி­யான போத்­தல்­க­ளை­யும் கேன்­க­ளை­யும் இதற்­கென அமைக்­கப்­பட்­டி­ருக்­கும் சிறப்பு இயந்­தி­ரங்­களில் சேர்ப்­பித்­தால் இந்­தத் தொகையை மீண்­டும் பெற­லாம்.

தீவு முழு­வ­தும் இதற்­கான சிறப்பு இயந்­தி­ரப் பெட்­டி­கள் நிறு­வப்­படும். 200 சதுர மீட்­ட­ருக்­கும் அதி­க­மான பரப்­ப­ளவு கொண்ட பேரங்­கா­டி­கள் அனைத்­தி­லும் இவை அமைக்­கப்­படும்.

சில இடங்­களில், ஊழி­யர்­க­ளு­டன்­கூ­டிய முகப்­பு­களும் அமைக்­கப்­படும். இந்­தத் திட்­டம் அறி­மு­கம் ஆகும்­போது 400க்கும் அதி­க­மான இத்­த­கைய இயந்­தி­ரங்­கள் சேவை வழங்­கும்.

கேன்­கள், போத்­தல்­கள் ஆகி­ய­வற்­றில் விற்­கப்­படும் 150 மில்லி லிட்­டர் முதல் மூன்று லிட்­டர் வரை­யி­லான பானங்­க­ளுக்கு இது பொருந்­தும்.

பானங்­கள் விற்­ப­னைக்­காக நிரப்­பப்­படும் போத்­தல்­கள், கேன்­கள் ஆகி­ய­வற்­றின் மறு­சு­ழற்சி விகி­தத்தை 80 விழுக்­காட்­டுக்கு உயர்த்­து­வது இத்­திட்­டத்­தின் இலக்கு.

தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் இந்­தப் புதிய திட்­டம் குறித்து நேற்று அறி­வித்­தது. இதன் தொடர்­பி­லான நிகழ்ச்­சி­யில் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற மூத்த துணை­ய­மைச்­சர் ஏமி கோர் கலந்­து­கொண்­டார்.

இந்­தத் திட்­டத்­தின் மூலம் சேக­ரிக்­கப்­படும் மறு­சு­ழற்­சிப் பொருள்­களை விற்­பனை செய்­வ­தன் வாயி­லாக, இத்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான செலவை ஈடு­கட்ட முடி­யும் என்று அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

வைப்­புத் தொகை­யின் அளவு, மறு­சு­ழற்சி முகப்­பு­கள் அமைய வேண்­டிய இடங்­கள் போன்­றவை குறித்­துப் பொது­மக்­கள் தங்­கள் கருத்­து­க­ளைத் தெரி­விக்­க­லாம்.

கருத்­து­ரைக்க விரும்­பு­வோர் அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை, அர­சாங்­கத்­தின் கருத்­த­றி­யும் பிரி­வான 'ரீச்'சின் இணை­யத் தளத்தை நாட­லாம் என்று கூறப்­பட்­டது.