யூனிசெஃப்: மியன்மார் ராணுவத்தினர் மேற்கொண்ட ஆகாயத் தாக்குதலில் 11 மாணவர்கள் உயிரிழந்தனர்

யூனிசெஃப்: மியன்மார் ராணுவத்தினர் மேற்கொண்ட ஆகாயத் தாக்குதலில் 11 மாணவர்கள் உயிரிழந்தனர்

2 mins read
2380626d-60a4-43ac-8030-8aab688041d5
மியன்மாரின் டெபேயின் நகரப் பள்ளிமீது இம்மாதம் 17ஆம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் ஆகாயத் தாக்குதல் நடத்தியது. இதில் 11 பிள்ளைகள் உயிர் இழந்ததாக யூனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. படம்: ஏஎஃப்பி -

மியன்­மார் ராணு­வம், நாட்­டின் வட­மேற்கு வட்­டா­ரப் பள்ளி ஒன்­றின்­மீது நடத்­திய ஆகா­யத் தாக்­கு­த­லில் 11 மாண­வர்­கள் உயி­ரி­ழந்­த­தாக 'யூனி­செஃப்' எனப்­படும் ஐக்­கிய நாட்டு நிறு­வன சிறு­வர் அற­நிதி தெரி­வித்­துள்­ளது. அந்த வட்­டா­ரத்­தில் பதுங்­கி­யி­ருந்த கிளர்ச்­சி­யா­ளர்­க­ளைக் குறி­வைத்து அந்­தத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­ட­தாக மியன்­மா­ரின் ராணுவ ஆட்­சித் தரப்பு கூறி­யது.

கடந்த ஆண்டு பிப்­ர­வ­ரி­யில் ஆட்­சிக் கவிழ்ப்பு மூலம் ராணு­வம் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றி­யது முதல் மியன்­மா­ரில் குழப்­பம் நிலவி வரு­கிறது. ராணு­வம் மேற்­கொண்ட ஒடுக்­கு­முறை நட­வ­டிக்­கை­களில் ஏறத்­தாழ 2,300 பொது­மக்­கள் உயிர் இழந்­த­தாக உள்­ளூர் கண்­கா­ணிப்­புக் குழு கூறி­யி­ருக்­கிறது.

சகய்ங் வட்­டா­ரத்­தில் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்­கும் ராணு­வத்­திற்­கும் இடையே ஆகக் கடு­மை­யான மோதல்­கள் நடந்­தன. இவற்­றில் சில கிரா­மங்­கள் முற்­றி­லு­மாக எரிந்து­போ­யின.

இந்­நி­லை­யில், சென்ற வெள்ளிக்­கி­ழமை டெபே­யின் நக­ரப் பள்­ளி­மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தலை 'யூனி­செஃப்' வன்­மை­யா­கக் கண்­டித்­துள்­ளது.

பள்­ளி­கள் பாது­காக்­கப்­பட வேண்­டும் என்­றும் அவை ஒரு­போ­தும் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கக்­கூ­டாது என்­றும் அது வலி­யு­றுத்­தி­யுள்­ளது. அதே பள்­ளி­யைச் சேர்ந்த மேலும் 15 மாண­வர்­க­ளைக் காண­வில்லை என்­றும் அது தெரி­வித்­துள்­ளது.

சமூ­கக் குழுக்­கள் பகிர்ந்­துள்ள காணொ­ளி­யில் ஒரு வகுப்­ப­றை­யின் தரை­யில் ரத்­தம் சிந்­தி­யி­ருப்­ப­தை­யும் அதன் கூரை சேதம் அடைந்­தி­ருப்­ப­தை­யும் உயிர்­நீத்த மக­னின் சட­லத்­து­டன் அழு­து­கொண்­டி­ருக்­கும் தாயா­ரை­யும் காண­மு­டி­கிறது.

அந்த வட்­டா­ரத்­தில் கிளர்ச்­சித் தரப்­பி­னர் ஆயு­தங்­களை இடம்­மாற்­று­வ­தா­கத் துப்பு கிடைத்­த­தன்­பேரில் ஹெலி­காப்­ட­ரில் துருப்­பி­னரை அனுப்­பி­யதை ராணுவ ஆட்­சித் தரப்பு உறு­திப்­ப­டுத்­தி­யது.

கிளர்ச்­சி­யா­ளர்­கள் பொது­மக்­களை மனி­தக் கேட­யங்­க­ளா­கப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு சண்­டை­யி­டு­வ­தாக அது குற்­றம் சாட்­டி­யது. தாக்­கு­தல் நடந்த ஊரில் இருந்து வெடி­பொ­ருள்­க­ளைக் கைப்­பற்­றி­ய­தா­க­வும் அது தெரி­வித்­தது.

மோதல் இல்­லாத இடங்­க­ளி­லும் படை­யி­னர் தாக்­கு­தல் நடத்து­வ­தா­க­வும் வீடு­க­ளுக்­குத் தீ மூட்டு ­வ­தா­க­வும் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

எங்­கும் அச்­சம் நில­வும் வேளை­யில், சில இடங்­களில் கிரா­மத்து மக்­கள் நாட்டு வெடி­பொ­ருள்­க­ளைப் பயன்­ப­டுத்தி, படை­யி­ன­ருக்­குச் சவால் விடுப்­ப­தாக ஆய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

இவ்­வே­ளை­யில், மியன்­மா­ரின் ஆளும் தரப்­பி­ன­ரு­டன் கலந்­து­ரை­யாடி அங்கு நில­வும் அர­சி­யல் நெருக்­க­டிக்கு ஆசி­யான் தீர்­வு­காண வேண்­டும் என்று மலே­சிய வெளி­யு­றவு அமைச்­சர் சயி­ஃபு­தீன் அப்­துல்லா மீண்­டும் வலி­யு­றுத்­தி­ உள்­ளார்.

அமெ­ரிக்­கா­வின் நியூ­யார்க்­கில் நடை­பெ­றும் ஐக்­கிய நாட்டு நிறு­வனப் பொதுச் சபைக் கூட்­டத்­திற்­கி­டையே மியன்­மார் அமைச்­சர்­களை அவர் சந்­தித்­துப் பேசி­னார்.

மியன்­மா­ரின் அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்தை மீண்­டும் வரை­ய­றுப்­பது குறித்­தும் அவர் பரிந்­து­ரைத்­தார்.

ஆசி­யான் தலை­வர்­கள் வரும் நவம்­பர் மாதம் புனோம் பென்­னில் சந்­திக்­கும்­போது மியன்­மார் அமை­தித் திட்­டம் குறித்து விவா­திப்­பர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. வேறு புதிய திட்டம் குறித்து ஆய்வுசெய்ய வேண்டும் என்கிறது மலேசியா.