தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலவச உணவுத் திட்டம் குறித்து பிரதமர் மோடி முடிவு

2 mins read

இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி, கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வலை முன்­னிட்டு 2020ஆம் ஆண்டு தொடங்­கிய, 'பிர­த­ம­ரின் ஏழை­கள் நலன் உண­வுத் திட்­டத்தை' தொடர்­வதா அல்­லது கைவி­டு­வதா என்­பது குறித்து விரை­வில் முடி­வெ­டுக்­கப்­படும்.

உல­கின் ஆகப் பெரிய உண­வுப் பாது­காப்­புத் திட்­ட­மா­கக் கரு­தப்­படும் இத்­திட்­டத்­திற்கு மத்­திய அரசு இது­வரை 62 பில்­லி­யன் வெள்ளி செல­விட்­டுள்­ளது.

இந்த உத­வித் திட்­டத்­தின்­கீழ், 800 மில்­லி­யன் இந்­தி­யர்­க­ளுக்கு மாதந்­தோ­றும் ஐந்து கிலோ­கி­ராம் அரிசி அல்­லது ஐந்து கிலோ­கி­ராம் கோதுமை இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டு­கிறது. இந்த மாத இறுதி­யு­டன் இத்­திட்­டம் முடி­வுக்கு வரும் என்று முன்­னர் தெரி­விக்கப்­பட்டிருந்­தது.

மத்­திய நிதி­ய­மைச்சு இதனை மேலும் நீட்­டிப்­பதை ஆத­ரிக்­க­வில்லை என்று தக­வ­ல­றிந்த வட்­டா­ரங்­கள் கூறு­கின்­றன.

இறுதி முடிவு பிர­த­மர் நரேந்­திர மோடி­யின் கைக­ளில்­தான் உள்­ளது. மேலும் மூன்று மாதங்­களுக்கு இல­வ­சத் திட்­டங்­களைத் தொடர அவர் முடி­வெ­டுக்­கக்­கூடும் என்று கூறிய கவ­னிப்­பா­ளர்­கள், பண்­டி­கைக் காலம், மாநிலத் தேர்­தல்­கள் போன்­ற­வற்­றைக் கருத்­தில்­கொண்டு அவர் அவ்­வாறு முடி­வெ­டுப்­பார் என்று குறிப்­பிட்­ட­னர்.

அதி­க­மான வேலை­யின்மை விகி­தம், வரு­மான இடை­வெளி, அர­சி­யல் பிரி­வினை எனப் பல்­வேறு சிர­மங்­களை அரசு எதிர்­கொண்­டு­வ­ரும் நிலை­யில் திரு மோடி இக்­கட்­டான சூழலை எதிர் நோக்­கு­கி­றார்.

இல­வச உண­வுத் திட்­டத்தை நிறுத்­து­வது அவ­ருக்கு எளி­தான முடி­வாக இருக்­காது. பிர­த­ம­ரின் சொந்த மாநி­ல­மான குஜ­ராத்­தி­லும் இமாச்­ச­லப் பிர­தே­சத்­தி­லும் ஆட்சி உரிமையைத் தக்­க­வைத்­துக் கொள்­ளத் திட்­ட­மி­டு­கிறது ஆளும் பாரதிய ஜன­தா கட்சி.

இந்த ஆண்டு இறு­தி­யில் அந்த இரு மாநிலங்­க­ளி­லும் சட்­ட­மன்­றத் தேர்­தல்­கள் நடை­பெ­ற­வி­ருக்­கின்­றன.

தற்­போது இல­வச உண­வுத் திட்­டத்தை முடி­வுக்­குக் கொண்டு­வந்­தால் வாக்­கா­ளர்­கள் யாருக்கு வாக்­க­ளிப்­பது என்று முடி­வெ­டுப்­பதில் அது கட்­டா­யம் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்­கின்­ற­னர் கவ­னிப்­பா­ளர்­கள்.

இந்த ஆண்டு முற்­ப­கு­தி­யில் நடை­பெற்ற உத்­த­ரப் பிர­தேச மாநிலச் சட்­ட­மன்­றத் தேர்­த­லில், இல­வச உண­வுத் திட்­டத்­தால் பல­ன­டைந்த கணி­ச­மான வாக்­கா­ளர்­கள் பார­திய ஜன­தா கட்­சிக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­னர்.

இந்­தத் திட்­டம் பலத்த வர­வேற்­பைப் பெற்­றா­லும் அதை மேலும் தொடர்ந்­தால் அர­சாங்­கத்­திற்கு மிக அதிக செலவு என்­ப­து­டன் மலி­வான விலை­யில் கிடைக்­கும் தானி­யங்­க­ளுக்­கான தேவை அதி­க­ரிக்­கும் என்­ப­தை­யும் கவ­னிப்­பா­ளர்­கள் சுட்­டி­னர்.

வறட்­சி­யால் விளைச்­சல் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் இந்­தியா ஏற்­கெ­னவே கோதுமை, அரிசி ஆகி­ய­வற்­றின் ஏற்­று­ம­திக்­குக் கட்­டுப்­பாடு விதித்­துள்­ளது.

மேலும் ஆறு மாதங்­க­ளுக்கு இல­வச உண­வுத் திட்­டத்தை நீட்­டிப்­ப­தற்கு அர­சாங்­கம் 12.4 பில்­லி­யன் வெள்ளிக்கும் மேல் நிதி ஒதுக்க வேண்­டி­யி­ருக்­கும்.