ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் ஒரு குடும்ப மருத்துவரை நியமித்து அவருக்கான சுகாதாரத் திட்டத்தை வரையும் சிங்கப்பூரின் இலக்கு 60 வயதுக்கு மேற்பட்டோருடன் தொடங்கும். அதற்கு வழிவகுக்கும் புதிய திட்டம் அடுத்த ஆண்டு பிற்பாதியில் நடப்புக்கு வரும்.
'ஹெல்்தத்யர் எஸ்ஜி' எனும் இத்திட்டத்தின் மூலம் குடியிருப்பாளர்கள் சிறந்த பலனடைவர். பொது மருந்தகங்களில் நாள்பட்ட நோய்களுக்குக் குறைந்த விலையில் மருந்து விற்கப்படுவது பலன்களில் ஒன்று.
இதன் மூலம் குடியிருப்பாளர்கள் நோய்வாய்ப்பட்ட பிறகு சிகிச்சை பெறுவதற்குப் பதிலாக நோய் வராமல் தவிர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வைப்பது சுகாதார அமைச்சின் நோக்கம். இதன்வழி மேலும் ஆரோக்கியமாக இருக்க ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் கைகொடுப்பது இலக்கு.
திட்டத்திற்குத் தகுதிபெறுவோர் அடிப்படை சுகாதாரப் பராமரிப்பைப் பெற அவர்கள் விரும்பும் பொது மருந்தகத்தைத் தேர்ந்தெடுக்குமாறு குறுந்தகவல் அனுப்பப்படும். 40லிருந்து 59 வயதுக்கு உட்பட்டோருக்கு 2023க்குப் பிந்திய ஈராண்டுகளில் திட்டத்தில் சேர்ந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படும்.
நாடாளுமன்றத்திடம் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட சுகாதார அமைச்சின் வெள்ளை அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. வெள்ளை அறிக்கை குறித்து வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும். இந்த அணுகுமுறை குறித்து கடந்த மார்ச் மாதம் முதல் 6,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள், சம்பந்தப்பட்ட மற்றவர்கள் ஆகியோரிடமிருந்து சுகாதார அமைச்சு கருத்துத் திரட்டி வந்துள்ளது.
'ஹெல்த்தியர் எஸ்ஜி' திட்டத்தின்கீழ் அடிப்படை சுகாதாரப் பராமரிப்பு வழங்கும் மருத்துவருடன் குடியிருப்பாளர்கள் புரிந்துணர்வை வளர்த்துக்கொள்வர். அந்த மருத்துவர் தனது பொறுப்பில் இருக்கும் குடியிருப்பாளரின் உடல்நலனை முழுமையாகக் கவனிப்பார்.
ஒருவர் முதன்முறையாக தனக்கான மருத்துவரை நாடும்போது கட்டணம் செலுத்தத் தேவையில்லை. அப்போது அவருக்கான உணவுப் பழக்கங்களை உள்ளடக்கக்கூடிய சுகாதாரத் திட்டம், உடற்பயிற்சித் திட்டம் உள்ளிட்டவற்றை மருத்துவர் வரைவார்.
உட்கொள்ளும் உப்பு, சர்க்கரை அளவை எவ்வாறு குறைப்பது, புகைப்பிடிக்கும் பழக்கத்தை எப்படிக் கைவிடுவது போன்றவற்றின் தொடர்பிலான அறிவுரை சுகாதாரத் திட்டத்தில் இடம்பெறும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார். காலேஜ் சாலையில் உள்ள சுகாதார அமைச்சின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பேசியபோது அவர் அவ்வாறு சொன்னார்.
கூடுமானவரை தீவிர சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதைத் தவிர்த்து சமூக அளவில் பராமாரிப்பு வழங்கும் இலக்கிற்கு இணங்க மக்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள குடியிருப்பாளர்களின் உடல்நலனைக் கவனிப்பதற்கு சமூகப் பங்காளிகளும் ஈடுபடுத்தப்படுவர். உதாரணமாக, குடியிருப்பாளர்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இலவசத் திட்டங்களில் சேரலாம்.
பலதுறை மருந்தகங்களில் விற்கப்படும் மருந்து விலையுடன் ஒப்பிடக்கூடிய அளவில் 'ஹெல்தியர் எஸ்ஜி' திட்டத்தில் இடம்பெறும் பொது மருந்தகங்களில் மலிவான விலையில் மருந்து விற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. திட்டத்தில் சேர்ந்துகொள்ள குடியிருப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட மருந்து சலுகைகள், மருந்து விலை உச்சவரம்பு ஆகியவற்றின் மூலம் இது சாத்தியமாகும். அதிகமானோரிடையே காணப்படும் நாட்பட்ட நோய்களுக்கான மருந்துகளுக்கு இது பொருந்தும்.
பலதுறை மருந்தகங்களில் நாட்பட்ட நோய்களுக்கான மருந்துகள் மலிவாக கிடைக்கும். அதற்காக நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாவோர் தாங்கள் பல காலமாக நாடிய பொது மருத்துவரைக் காண்பதை நிறுத்தேவண்டியதில்லை.
இதற்கான மேல்விவரங்களை சுகாதார அமைச்சு பின்னர் அறிவிக்கும். தேசிய அளவில் பரிந்துரைக்கப்படும் சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளவும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு முழு சலுகை வழங்கப்போவதாகவும் அமைச்சு தெரிவித்தது.
அடுத்த ஆண்டு தொடங்கப்படவுள்ள 'ஒரு குடியிருப்பாளர், ஒரு மருத்துவர்' முைற