கூடுதல் படைகளைத் திரட்டும் புட்டின்

கூடுதல் படைகளைத் திரட்டும் புட்டின்

1 mins read
ad387647-923c-4a95-ad7d-77839090d3ea
ரஷ்ய ஆகாயப் படைத் தாக்குதலால் உக்ரேனின் கார்கிவ் நகரில் ஏற்பட்ட சேதம். படம்: ராய்ட்டர்ஸ் -

இரண்­டாம் உல­கப் போருக்­குப் பிறகு ரஷ்யா முதன்­மு­றை­யாக கூடு­தல் ராணு­வப் படை­க­ளைத் திரட்ட முடி­வெ­டுத்­துள்­ளது. அந்­நாட்டு அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் இதை நேற்று அறி­வித்­தார்.

அணு­வா­யு­தம் தொடர்­பில் மேற்­கத்­திய நாடு­கள் பயம் காட்டி மிரட்­டி­னால் மாஸ்கோ தனது மொத்த ஆயுத பலத்­தைக்கொண்டு பதி­லடி கொடுக்­கும் என்­றும் அவர் எச்­ச­ரித்­தார்.

கூடு­தல் படை­க­ளைத் திரட்­டும் நட­வ­டிக்­கை­யின்­கீழ் போரில் ஈடு­படா­தி­ருந்த 300,000 பேர் செயல்­படுத்­தப்­ப­டு­வர். ராணுவ அனு­ப­வம் உள்­ள­வர்­க­ளுக்கு இது பொருந்­தும் என்று ரஷ்­ய தற்­காப்பு அமைச்­சர் செர்­ஹெய் ஷோய்கு தெரி­வித்­தார்.

மாண­வர்­களும் கட்­டாய ராணுவ சேவை­யாற்­றுவோரும் போரில் ஈடு­படுத்­தப்­ப­ட­மாட்­டார்­கள் என்று திரு ஷோய்கு கூறி­னார். போரில் ஈடு­படா­தி­ருந்த பெரும்­பா­லோர் பாதிக்­கப்­ப­ட­மாட்­டார்­கள் என்­றும் அவர் குறி­ப்பிட்டார்.

கடந்த பிப்­ர­வரி மாதம் உக்­ரேன் மீது படை­யெ­டுத்­த­தைத் தொடர்ந்து கிட்­டத்­தட்ட 6,000 ரஷ்ய ராணுவ வீரர்­கள் மாண்­டு­விட்­ட­தாக திரு ஷோய்கு தெரி­வித்­தார்.

மாஸ்கோ பொது­வாக போரில் இழந்த வீரர்­க­ளின் எண்­ணிக்­கையை வெளி­யி­டாது. அந்த வகை­யில் திரு ஷோய்கு மாண்ட வீரர்­களின் எண்­ணிக்­கை­யைத் தெரி­வித்­தது சற்று ஆச்­ச­ரி­யம் தரும் நிகழ்­வாகக் கரு­தப்­ப­டு­கிறது.

ரஷ்யா உக்­ரே­னுக்கு எதி­ரா­கப் போரி­டு­கிறது என்­ப­தை­விட ஒட்­டு­மொத்த மேற்­கத்­திய உல­கிற்கு எதி­ரா­கப் போரி­டு­வதாகச் சொல்லலாம் என்று திரு ஷோய்கு சொன்­னார். கூடு­தல் ராணு­வப் படை­க­ளைத் திரட்­டும் திரு புட்­டி­னின் முயற்சியைப் போர் ரஷ்­யா­வுக்கு சாத­க­மா­கப் போக­வில்லை என்­பதற்­கான அறி­கு­றி­யாக சில தரப்­பி­னர் கரு­து­கின்­ற­னர்.