தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேரளாவில் வன்முறை; தமிழக நகரங்களில் பெட்ரோல் குண்டு

2 mins read
ddd2cbb8-d1fe-4f3f-aec3-1ac818c217c5
கல்வீச்சு தாக்குதலில் சேதமடைந்த கேரள மாநிலப் பேருந்து. படம்: இந்திய ஊடகம் -

பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்­குத் துணை­போ­வோ­ரைக் கண்­ட­றி­யும் முயற்­சி­யாக நேற்று முன்­தி­னம் இந்­தியா முழு­வ­தும் பல்­வேறு மாநி­லங்­களில் தேசிய புல­னாய்வு முக­வை­யைச் (என்­ஐஏ) சேர்ந்த அதி­கா­ரி­கள் தலை­மை­யில் அதி­ரடி சோதனை நடத்­தி­னர்.

ஒரே நேரத்­தில் நூற்­றுக்­கும் மேற்­பட்ட இடங்­களில் நடத்­தப்­பட்ட சோத­னை­யில் 'பாப்­பு­லர் ஃபிரண்ட் ஆஃப் இந்­தியா' (பிஎ­ஃப்ஐ) என்­னும் அமைப்­பைச் சேர்ந்த பலர் கைது செய்­யப்­பட்­ட­னர். கைதான 106 பேரில் கேரள மாநி­லத்­தில் ஆக அதி­க­மாக 22 பேர் பிடி­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், தங்­கள் அமைப்­பி­னர் கைது செய்­யப்­பட்­ட­தற்கு எதிர்ப்­புத் தெரி­வித்­தும் தேசிய புல­னாய்வு முகவை சோதனை நடத்­தி­ய­தைக் கண்­டித்­தும் கேரள மாநி­லத்­தில் நேற்று கடை­ய­டைப்­புப் போராட்­டத்­திற்கு பிஎ­ஃப்ஐ அழைப்பு விடுத்­தி­ருந்­தது.

அத­னைத் தொடர்ந்து நேற்­றுக் காலை முதல் மாநி­லத்­தின் பல்­வேறு இடங்­களில் கடை­கள் அடைக்­கப்­பட்­டி­ருந்­தன.

அதே­நே­ரம் பல இடங்­களில் போராட்­டம் வன்­மு­றை­யாக மாறி­யது. சாலை­யில் ஓடிய அர­சுப் பேருந்­து­கள் அடித்து நொறுக்­கப்­பட்­டன. ஆட்டோ ரிக்‌ஷா போன்ற இதர வாக­னங்­க­ளை­யும் போராட்­டக்­கா­ரர்­கள் சேதப்­ப­டுத்­தி­னர். அவர்­க­ளைத் தடுத்த காவல்­து­றை­யி­னர் மீதும் கல்­வீசி தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. அதில் பல காவல்­துறை அதி­கா­ரி­கள் காய­ம­டைந்­த­னர்.

இச்­செ­யல்­க­ளைத் தொடர்ந்து மாநி­லம் முழு­வ­தும் நேற்று பதற்­றம் நில­வி­யது.

கேரள உயர் நீதி­மன்­றம் தானாக முன்­வந்து இந்த வன்­மு­றைச் செயல்­கள் குறித்து வழக்­குப் பதிவு செய்து விசா­ரணை நடத்­தி­யது. முன் அனு­மதி பெறா­மல் எந்த ஒரு போராட்­டத்­தை­யும் நடத்­தக்­கூ­டாது என்று நீதி­மன்­றம் எதிர்ப்­பும் கண்­ட­ன­மும் தெரி­வித்­தது.

முன்­ன­தாக, தமி­ழ­கத்­தில் வியா­ழக்­கி­ழமை இரவு சிலர் பெட்­ரோல் குண்­டு­களை வீசித் தாக்­கு­தல் நடத்­தி­னர்.

கோவை­யில் பாஜக அலு­வ­ல­கம் மீதும் பொள்­ளாச்­சி­யில் பாஜக மற்­றும் இந்து முன்­ன­ணி­யைச் சேர்ந்த நிர்­வா­கி­க­ளின் வீடு­கள் மீதும் பெட்­ரோல் குண்டு வீசித் தாக்­கப்­பட்­ட­தா­கக் கூறிய மாநில பாஜக தலை­வர் அண்­ணா­மலை இச்­செ­யல்­

க­ளுக்­குக் கடும் கண்­ட­னம் தெரி­வித்­தார்.

"பெட்­ரோல் குண்டு வீசித் தாக்­கு­தல் நடத்­து­வ­தன் மூலம் எங்­க­ளது துணிச்­சல் குறைந்­து­வி­டாது," என்று அவர் தமது டுவிட்­டர் பதி­வில் தெரி­வித்­தார்.