சிங்கப்பூர் இந்திய மாணவர்களில் 95 விழுக்காட்டினர் இவ்வாண்டு உயர்கல்விக்குப் பிந்திய படிப்புக்குத் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிண்டா உன்னத விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பாராட்டியுள்ளார்.
இருபதாண்டுகளுக்கு முன்னர் இவ்விகிதம் 80 விழுக்காட்டுக்கும் கீழ் இருந்தது என்று குறிப்பிட்ட திரு வோங், இந்த ஆண்டு விருது பெறுவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு பிரிவிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளதை சுட்டினார்.
நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நேற்று நடைபெற்ற 31வது விருது வழங்கும் விழா வில், சாதனை அளவாக 782 மாணவர்கள் உன்னத விருது பெற்றனர். 1992ஆம் ஆண்டு விருது வழங்கத் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவே ஆக அதிக எண்ணிக்கை.
தொடக்கப் பள்ளி இறுதியாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் வரை 16 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
அனைத்துலக பெக்கலரேட் பிரிவில் விருதுபெற்றவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு, 2021ஆம் ஆண்டைவிட 75 விழுக்காடு அதிகம்.
கொவிட்-19 காலம் மாணவர்
களுக்கு சவாலானதாக இருந்தபோதும் இந்தத் தேர்ச்சியை இந்திய சமூகம் எட்டியிருக்கிறது என்று நிதியமைச்சருமான திரு வோங் குறிப்பிட்டார்.
இணையம் வழி கற்றல், சமூக தனிமைப்படுத்துதலின் அழுத்தத்தைச் சமாளித்தல் ஆகியவற்றுக் கிடையே வகுப்பு மாணவர்களுடன் தொடர்பிலிருக்க புதிய வழி
களை மாணவர்கள் கண்டறிந்தனர் என்றார் அவர்.
கல்வி, விளையாட்டு, கலை, தொழில்நுட்பத்திறன் போன்ற பல்வேறு தளங்களில் உன்னதத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிண்டா ஆண்டுதோறும் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. விருது பெற்றவர்களுக்கு $150 முதல் $500 வரை பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
"இளையர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி முன்னேற வேண்டும். சுயமாக சிந்திக்கவும் தத்தம் துறைகளில் ஆளுமை
களாக உருவெடுக்கவும் தொடர்ந்து உழைக்க வேண்டும்," என்றும் வலியுறுத்தினார் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திரு வோங்.
"அரசாங்கமும் சிண்டா போன்ற சுய உதவிக் குழுக்களும் வளர்ந்து வரும் இளைய சமூகத்திற்கு தொடர்ந்து பல்வேறு வழிகளில் ஆதரவு அளித்து வருவது வரவேற்கத்தக்க ஒன்று. ஒன்றுபட்ட சமூகமாக தொடர்ந்து உழைத் தால் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கொண்ட சிங்கப்பூரை வடிவமைக்க முடியும்," என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சிண்டாவின் தலைவரும் பிர
தமர் அலுவலக அமைச்சருமான இந்திராணி ராஜா கடந்த நான்காண்டுகளில் விருதுபெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகக் கூறினார்.
"இந்திய மாணவர்கள் சிறந்து விளங்குவதை இது உணர்த்துகிறது. ஆண்டுக்கு ஆண்டு அவர்கள் சிறப்பாக முன்னேறுகிறார்கள். ஒவ்வொரு பிரிவிலும் விருது பெறுவோர் எண்ணிக்கை அதி
கரித்துள்ளது," என்றார் அவர்.
இளையர்களின் சாதனைகளே சமூகத்தின் ஒட்டுமொத்த செயல்திறனின் முக்கிய அளவீடு என்ற சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன், மாண வர்களுக்கு வழிகாட்ட அதிகமானோர் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
2019ஆம் ஆண்டுக்குப் பிறகு நேரடியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சிண்டா அறங்காவலர் குழுவின் தலைவரும் மூத்த அமைச்சருமான தர்மன் சண்முகரத்னம், உறுப்பினர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
விருது பெற்றவர்களில் ஒருவரான வள்ளியம்மை லட்சுமணன், 22, வழக்கநிலை தேர்ச்சிக்குப் பிறகு பலதுறைத் தொழிற்கல்லூரியில் தான் விரும்பிய துறையில் சேருவதற்கான தகுதியைப் பெறவில்லை.
ஆயினும், அதை தற்காலிக பின்னடைவாகக் கருதி முயற்சிகளை இரட்டிப்பாக்கி கணக்கியல், நிதித்துறையில் பலதுறைத் தொழிற் கல்லூரியின் உயர் நைட்டெக் சான்றிதழைப் பெற்றார் இவர்.
கல்விப் பயணத்தில் சாதித்த இந்த மாணவியை துணைப் பிர
தமர் வோங் பாராட்டினார்.

