ஜூரோங் லேக் வட்டாரம், ஜூரோங் டவுன் ஹால் ஆகிய இரு எம்ஆர்டி நிலையங்களையும் ஒன்றிணைத்து புதிய ரயில் சந்திப்பு நிலையத்தை உருவாக்குவது பற்றி அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக போக்கு
வரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜூரோங் லேக் வட்டார நிலையம் குறுக்குத் தீவு எம்ஆர்டி பாதையிலும் ஜூரோங் டவுன் ஹால் நிலையம் ஜூரோங் வட்டார எம்ஆர்டி பாதையிலும் அமைகின்றன.
"இதுகுறித்த ஆய்வில் பொறியாளர்களும் நிலப் போக்குவரத்து ஆணையக் குழுவினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
"வசதிக்காகவும் மீள்திறனுக்காகவும் நமது எம்ஆர்டி ரயில் போக்குவரத்து முறையில் அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது," என்றார் திரு ஈஸ்வரன்.
வெஸ்ட் கோஸ்ட் டிரைவில் மேம்படுத்தப்பட்ட ஆயர் ராஜா உணவு நிலையம் மற்றும் ஈரச்சந்தையின் அதிகாரத்துவ திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திரு ஈஸ்வரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இணையான வழித்தடத்தில் ரயில் பாதைகள் அமைந்தபோதிலும் அவை வெவ்வேறு பயண நோக்கங்களுக்குச் சேவையாற்றக்கூடும் என்று அப்போது அவர் தெரிவித்தார்.
குறுக்குத் தீவு எம்ஆர்டி பாதையின் இரண்டாம் கட்டம் குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை திரு ஈஸ்வரன் அறிவிப்பு வெளியிட்டபோது அந்த வழித்தடத்தில் ஆறு நிலையங்கள் அமையும் என்று தெரிவித்து இருந்தார். அந்த நிலையங்
களுள் ஜூரோங் லேக் வட்டார நிலையமும் ஒன்று.
வெஸ்ட் கோஸ்ட், கிங் ஆல்பர்ட் பார்க், மாஜு, கிளமெண்டி, டர்ஃப் கிளப் ஆகியன இதர ஐந்து எம்ஆர்டி நிலையங்கள்.
இரண்டாம் கட்டக் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் 2032ஆம் ஆண்டு முதல் புதிய நிலையங்கள் கட்டம் கட்டமாகத் திறக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆறு புதிய நிலையங்களும் சேவையாற்றத் தொடங்கும்போது 40,000 குடும்பங்கள் அதன்மூலம் பயன்பெறும்.
குறிப்பாக, சன்செட் வே மற்றும் வெஸ்ட் கோஸ்ட் ரோட்டில் வசிப்
பவர்கள் பயனடைவர்.
இவ்விரு பகுதிகளுக்கும் இப்போது எம்ஆர்டி வசதி இல்லை.
வட்டப்பாதை வழித்தடத்தில் ஹாவ் பார் வில்லா வட்டாரத்துடன் ஜூரோங் வட்டாரப் பாதை எம்ஆர்டியை இணைக்கும் வகையில் வெஸ்ட் கோஸ்ட் விரிவாக்கம் குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக திரு ஈஸ்வரன் கூறினார்.
பரிசீலிக்கப்படுவதாக ஈஸ்வரன் தகவல்

