பிலிப்பீன்சில் கரையைக் கடந்தது 'நோரு' புயல்

பிலிப்பீன்சில் கரையைக் கடந்தது 'நோரு' புயல்

1 mins read
fec703ab-d4ee-4835-b724-7c78e360a06a
பிலிப்பீன்சின் குவேஸோன் மாநிலம், பொலில்லோ தீவுகளின் கரையோரப் பகுதியில் நேற்று மாலை ராட்சத அலைகள் எழுந்தன. படம்: ராய்ட்டர்ஸ் -

பிலிப்­பீன்­சில் மூன்­றாம் நிலை புயல்­காற்று தொடர்ந்து வலு­வ­டைந்ததை முன்­னிட்டு, கரை­யோ­ரப் பகு­தி­களில் இருந்து நேற்று மக்களை அதி­கா­ரி­கள் வெளி­யேற்றினர்.

தலை­ந­கர் மணிலா உட்­பட லிஸோன் தீவு புயல்­காற்­றுக்­குத் தயா­ராகி வந்த வேளை­யில், நூற்றுக்­க­ணக்­கா­னோ­ரால் நேற்று கடல்­வ­ழிப் பய­ணம் மேற்­கொள்ள முடி­ய­வில்லை என்று அதி­கா­ரி­கள் கூறி­னர்.

மணிக்கு 185 கி.மீ. முதல் 205 கி.மீ. வேகத்­தில் தொடர்ந்து தீவிரம் அடைந்த 'நோரு' புயல், உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு குவே­ஸோன் மாநி­லத்­தின் பொலில்லோ தீவு­களின் புர்­டி­யோஸ் நக­ராட்­சி­யில் கரை­யைக் கடந்­தது.

'நோரு' புயல் கரை­யைக் கடக்­க­வி­ருந்­த­போது அதன் வேகம் தீவிரம் அடைந்­தது முன்­னெப்­போ­தும் இல்­லாத ஒன்று என்று வானிலை முன்­னு­ரைப்பு நிறு­வ­னம் கூறி­யது. காற்­றின் வேகம் 24 மணி நேரத்­தில் 90 கி.மீ. அதி­க­ரித்­த­தாக அது சொன்­னது.

மணி­லா­வில் அவ­ச­ர­கா­லப் பணி­யா­ளர்­கள் வலு­வான காற்று வீசு­வ­தற்­கும் கன­மழை பெய்­வதற்கும் தங்­க­ளைத் தயார்ப்­படுத்திக்­கொண்டனர்.

அந்­ந­க­ரில் அபா­யம் மிகுந்த சில பகு­தி­களில் பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக மக்­களை வெளி­யேற்­றும் பணி­கள் தொடங்கியதாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

கரை­யோ­ரப் பகு­தி­களில் உள்ள மீன­வர்­கள் கட­லுக்­குச் செல்ல தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

நிலச்­ச­ரி­வு­கள், வெள்­ளம், சேதத்தை ஏற்­ப­டுத்­த­வல்ல காற்றுக்கு அதி­கா­ரி­கள் விழிப்­புடன் இருப்­ப­தாக பேரி­டர்களைச் சமாளிக்கும் அமைப்­பின் பேச்சாளர் பெர்­னார்டோ ரஃபாயி­லிட்டோ அலெ­ஜாண்ட்ரோ சொன்­னார்.

இவ்­வாண்டு பிலிப்­பீன்ஸ் எதிர்­கொள்­ளும் 11வது புய­லாக 'நோரு' உள்­ளது.