இந்தியா, கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதால் அது சிங்கப்பூரின் உள்ளூர் உணவகங்களைப் பாதிக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஓர் இந்திய உணவகம், அதன் பிரபல சப்பாத்தி உணவை இவ்வார இறுதி யோடு நிறுத்த முடிவு செய்துள்ளது. சில இந்திய உணவுகளின் விலை அதிகரிக்கவும் சாத்தியமுள்ளது.
கடந்த மே மாதத்திலிருந்து இந்தியாவின் கோதுமை தடையால் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக இந்திய உணவங்கள் பல, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளன.
கடந்த மே மாதத்திலிருந்து மூன்று மடங்கு விலை அதிகமுள்ள மற்ற நாடு களிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்யும் கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அவை கூறின. இந்தியாவின் கோதுமை மாவும் அதற்கு ஏற்ப விலை அதிகரித்துள்ளது.
இன்று வரை கோதுமை விலை உயர்வை சமாளித்து வருகிறோம் என்றும் விரைவில் வாடிக்கையாளர்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் மூன்று உணவகங்கள் தெரிவித்துள்ளன.
உலகின் இரண்டாவது ஆகப்பெரிய கோதுமை உற்பத்தி நாடான இந்தியா, கடந்த மே மாதம் கோதுமை ஏற்று மதிக்கு தடை விதித்தது. உள்ளூர் விநியோகம் பாதிக்கப்படக்கூடாது என் பதற்காக அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உக்ரேன்-ரஷ்யா போர் காரணமாக உக்ரேனின் கோதுமை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் தடை அறிவிக்கப்பட்டது.
உலகின் நான்காவது ஆகப்பெரிய கோதுமை ஏற்றுமதி நாடாக விளங்கும் உக்ரேன், உலகின் மொத்த கோதுமை வர்த்தகத்தில் ஒன்பது விழுக்காடு பங்கை வகிக்கிறது.
சிங்கப்பூரில் ஐந்து உணவங்களை நடத்தும் சகுந்தலாஸ், இந்திய உணவு வகைகளுக்கு, குறிப்பாக சப்பாத்தி உணவுக்குப் பெயர்போனது.
இந்தியாவின் கோதுமை தடையால் வேறு நாடுகளிலிருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாக அந்த உணவ கத்தின் நிர்வாக இயக்குநரான மாதவன் ஆதி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
தற்போது இருப்பில் உள்ள இந்திய கோதுமை மாவை சகுந்தலாஸ் பயன் படுத்தி வந்தாலும் இவ்வார இறுதியில் தீர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"துபாயிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்யலாம். ஆனால் விலை மும்மடங்கு அதிகமாக உள்ளது. ஒரு கிலோ இந்திய கோதுமை மாவின் விலை $5. ஆனால் துபாய் கோதுமை மாவின் விலை ஒரு கிலோ 15 வெள்ளி," என்றார் திரு மாதவன், 52.
'மஸ்டர்ட் சிங்கப்பூர்' உணவகத்தின் திருமதி ராதிகா, 51, இருப்பில் உள்ள கோதுமை மாவு தீர்ந்ததும் அதிக விலை காரணமாக பல இந்திய உணவகங்கள் சிரமப்பட வேண்டியிருக்கும் என்றார்.
லிட்டில் இந்தியாவில் பிரபலமாக விளங்கும் மற்றொரு உணவகமான காயத்ரி உணவகத்துக்கும் இதே நிலைமை. வேறு ரக கோதுமை மாவுக்கு மாறும்போது தரம் பாதிக்கப்படலாம் என்று அந்த உணவகத்தின் இயக்கு நரான எஸ். மகேந்திரன் சொன்னார்.
"இதுவொரு பெரிய மாற்றமாக இருக்கும். ஒவ்வொருநாளும் ஒரு வேளை உணவுக்கு ஆறு சப்பாத்தி வரை சாப்பிடும் பஞ்சாப் ஊழியர்களை வெகுவாகப் பாதிக்கும்," என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர், ஆண்டுக்கு 200,000 டன் முதல் 250,000 டன் வரை கோதுமையையும் 100,000 டன் முதல் 120,000 டன் வரை கோதுமை மாவையும் இறக்கு மதி செய்வதாக ஐநா புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2020ல் சிங்கப்பூர் இறக்குமதி செய்த மொத்த கோதுமை மாவில் 5.8 விழுக்காடு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

