பணவீக்கம், உலகமயமாக்கலுக்கு எதிரான போக்கு
சிங்கப்பூரில் நடைபெற்ற வர்த்தக தலைவர்கள் மாநாட்டில் இரு விவகாரங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
பணவீக்கமும் உலகமயமாக்கலுக்கு எதிரான போக்கும் உலகப் பொருளியலை ஆட்டிப் படைத்து வருகின்றன.
இந்த இரு விவகாரங்கள் முக்கிய விவாதப்பொருளாயின.
'ஃபோர்ப்ஸ் குளோபல் சிஇஓ' எனும் இரண்டு நாள் மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து 400க்கும் மேற்பட்ட வர்த்தகத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
ரிட்ஸ்-கார்ல்ட்டன் ஹோட்டலில் நடைபெற்ற மாநாட்டில் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங்கும் கலந்துரையாடலில் பங்கேற்று வர்த்தகத் தலைவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித் தார்.
தொழில்நுட்பம், புத்தாக்கம், நீடித்த நிலைத்தன்மை, முதலீட்டு வாய்ப்புகள், தற்போதைய ஏற்ற இறக்கமான பொருளியல் உள்ளிட்ட விவகாரங்களையும் தலைவர்கள் அலசி ஆராய்ந்தனர்.
ஆனால் இவற்றில் பணவீக்கமே முக்கியப் பிரச்சினையாக தலைவர்கள் எழுப்பியிருந்தனர். பயனீட்டாளர் விலை உயர்வு புதிய இயல்பானதாக அமையும் என்று அப்போது அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
'கேட்வே பார்ட்னர்ஸ்' முதலீட்டு நிறு வனத்தின் தலைமை நிர்வாகியும் இணை நிறுவனருமான வி. ஷங்கர், "பணவீக்கம் இன்னமும் நீடித்திருக்கும். சில கட்டமைப்புகள், தீர்க்க முடியாத பிரச்சினைகள் அதிக விலைக்கு வழி வகுக்கும்," என்றார்.
"கரிம வெளியேறத்தைக் குறைக்கும் அதிவிரைவான நடவடிக்கைகளால் புதுப்பிக்கத்தக்க எரிபொருள் போன்ற புதிய தொழில்நுட்பங்களின் தேவை அதிகரிக்கும்," என்று அவர் குறிப்பிட்டார்.
குறுகிய காலத்துக்கு புதிய தொழில்நுட்பங்களுக்கான செலவு அதிகரிக்கும். இதனால் பசுமைப் பொருள்களுக்கான விலையும் கூடும் என்று அவர் தெரிவித்தார்.
உலகமயமாக்கலுக்கு எதிரான போக்கும் வர்த்தகங்களுக்கான செலவுகளும் உற் பத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உதாரணமாக, தங்கள் பொருள்களை உற்பத்தி செய்ய ஆற்றல்மிக்க, மலிவான இடங்களைத் தேடும்போது புவிசார் அர சியல் பதற்றத்தையும் வர்த்தக நிறுவனங்கள் கருத்தில் கொள்ளும்.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடை யிலான பூசல் காரணமாக அவ்விரு நாடுகள் மீது முதலீட்டாளர்கள் எச்சரிக்கை யாக இருப்பதோடு நம்பிக்கையையும் குறைத்துள்ளது.
"ஆசியாவில் உள்ளவர்களும் மற்ற நாடுகளில் உள்ளவர்களும் நடுநிலையை கடைப்பிடிக்க விரும்புகின்றனர். ஆனால் எந்த இடத்திலிருந்து நெருக்குதல் வரும் என்பதைக் கண்டுபிடிப்பது சிரமம்," என்று பேன்யான் ட்ரீ ஹோல்டிங்சின் நிர்வாகத் தலைவர் ஹோ குவோன் பிங் கூறினார்.
இன்று தொழில்முனைப்பு, நிலைத்தன்மை போன்ற பிரச்சினைகளை வர்த்தக தலை வர்கள் விவாதிப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
உலகப் பணக்காரர்களில் ஒருவரும் இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு குழுமத்தின் தலைவருமான கௌதம் அதானியும் இன்று முக்கிய உரை நிகழ்த்தவிருக்கிறார்.

