தீபாவளி குதூகலத்தில் 'ஃபேர்­பி­ரைஸ்'; சிண்டாவுக்கு $40,000

தீபாவளி குதூகலத்தில் 'ஃபேர்­பி­ரைஸ்'; சிண்டாவுக்கு $40,000

2 mins read
907ef471-38eb-4368-9543-35a30ce73415
(இடமிருந்து) ஃபேர்பிரைஸ் குழுமத்தின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி திருவாட்டி இலைன் ஹெங், பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் ஆகியோர், திருவாட்டி வள்ளி, 41, அவரின் புதல்வி கிரிஷா, 11, இருவரோடும் உரையாடினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பொன்­மணி உத­ய­கு­மார்

தீபா­வ­ளியை முன்­னிட்டு என்டியுசி ஃபேர்­பி­ரைஸ் நிறு­வனம் $40,000 தொகையை சிண்­டா­வின் நன்கொடைத் திட்­டத்­திற்கு வழங்­கி­யுள்­ளது.

தீபா­வளி பண்­டி­கை­யைக் கொண்­டா­டும் இந்து சமூ­கத்­திற்­குத் தங்­க­ளால் முடிந்த பங்கை ஆற்ற வேண்­டும் என்ற எண்­ணத்­து­டன் ஃபேர்­பி­ரைஸ் இதை வழங்­கி­யுள்­ள­தாக நிறு­வனத்­தின் துணைத் தலைமை நிர்­வாக அதி­காரி இலைன் ஹெங் கூறி­னார்.

'சிட்டி ஸ்கு­வேர்' பேரங்­கா­டி­யின் ஃபேர்­பி­ரைஸ் கிளை­யில் நேற்று நடந்த ஒளி­யூட்டு நிகழ்ச்சி­யில் பிர­த­மர் அலு­வ­லக அமைச்­ச­ரும் தேசிய வளர்ச்சி மற்றும் நிதி இரண்­டாம் அமைச்­ச­ரு­மான இந்­தி­ராணி ராஜா கலந்து கொண்டு சிறப்­பித்­தார்.

சிண்­டா­வின் நன்­கொ­டைத் திட்­டத்­திற்கு 2011ஆம் ஆண்டு முதல், இது­வரை $320,000 வழங்­கி­யுள்ள ஃபேர்­பி­ரைஸ், கடந்த ஆண்டை காட்­டி­லும் இரு­ம­டங்கு நன்­கொடை தொகையை இவ்­வாண்டு வழங்­கி­யுள்­ளது.

நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட சிண்­டா­வின் ஐந்து பய­னா­ளிக் குடும்­பங்­க­ளுக்கு ஃபேர்­பி­ரைஸ் $100 மதிப்­புள்ள பற்­றுச்­சீட்­டு­களை­யும் வழங்­கி­யது. இந்த பற்­றுச்­சீட்­டு­க­ளைக் கொண்டு பொருள்­கள் வாங்­கிய குடும்­பத் தலை­வி­களில் ஒரு­வர் திரு­வாட்டி வள்ளி கிருஷ்­ண­சாமி, 41.

முன்பு தாதி­யா­கப் பணி­பு­ரிந்த இவர், பிள்­ளை­க­ளைப் பார்த்­துக் கொள்­வ­தற்­காக வேலையை விட்டு கடந்த 15 ஆண்­டு­க­ளாக இல்­லத்­த­ர­சி­யாக உள்­ளார்.

சிண்­டா­வின் திட்­டங்­களில் வெகு நாட்­க­ளாகப் பய­ன­டைந்து வரும் இவர், பொருள்­க­ளின் விலை­ஏற்­றத்­தால், இந்த ஆண்டு வழங்­கப்­பட்ட பற்­றுச்­சீட்­டு­கள் தனக்­குக் கூடு­தல் பொருள்­கள் வாங்க உதவி­யது என்று கூறி­னார்.

நான்கு பிள்­ளை­க­ளின் ஒற்­றைப் பெற்­றோ­ரான திரு­வாட்டி ஷாமளா, 42, இந்­தத் தொகை தனக்­குப் பெரும் உத­வி­யாக இருக்கும் என்று கூறி­னார். "இது­ மா­தி­ரி­யான உத­வி­கள் சிறிய தொகை­யா­கத் தென்­பட்­டா­லும் அது குடும்­பங்­க­ளுக்குப் பெரும் உத­வி­யாக அமை­கிறது," என்­றார் அவர்.

நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு நன்­கொடை காசோ­லையைப் பெற்­றுக்­கொண்ட சிண்­டா­வின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன், எந்த ஒரு குடும்­ப­மும் பணம் இல்­லா­த­தால் பண்­டி­கை­யைக் கொண்­டா­டா­மல் தனித்து இருந்­து­வி­டக் கூடா­தென்­றும் குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் குடும்­பங்­க­ளின் வீடு­களில் இந்த உத­வித் தொகை ஒளி­யூட்­டும் என்று நம்­பு­வ­தா­க­வும் கூறி­னார்.

"உதவி தேவைப்­படும் குடும்­பங்­க­ளுக்­கும் மாண­வர்­க­ளுக்­கும் இந்­தத் தொகை பய­ன­ளிக்­கும்.

"இதில் பெரும்­பான்­மை­யான தொகை தீபா­வளி பண்­டி­கையை முன்­னிட்டு சிண்டாவின் அன்­பளிப்­புப் பற்­றுச்­சீட்­டு­கள், பைகள் மூலம் குடும்­பங்­க­ளுக்­குச் சென்­ற­டை­யும்," என்­றும் சிண்­டா தலைமை நிர்­வாக அதி­காரி கூறி­னார்.