கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிங்கப்பூரில் எஃப்1 பந்தயம் நடைபெறவில்லை.
ஈராண்டுகளுக்குப் பிறகு இப்பந்தயம் சிங்கப்பூருக்குத் தற்போது திரும்பி உள்ளது. எஃப்1 ஓட்டுநர்களுக்கான பயிற்சிச் சுற்று நேற்று நடைபெற்றது.
யார் யார் எந்தெந்த நிலையிலிருந்து பந்தயத்தைத் தொடங்குவர் என்பதை நிர்ணயிப்பதற்கான சுற்று இன்று நடைபெறுகிறது. வெற்றியாளர் யார் என்பது நாளை நடைபெறும் பந்தயத்திற்குப் பிறகு தெரிந்துவிடும். கொவிட்-19
கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் தளர்த்தியிருப்பதால் பந்தயத்தை நேரில் காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் பெரும் அளவில் திரள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது பல சவால்களை எதிர்கொண்ட சிங்கப்பூர், தற்போது வழக்கநிலைக்குத் திரும்பியிருப்பதாகவும் எஃப்1 பந்தயம் இங்கு மீண்டும் நடைபெறுவது அதை உணர்த்துவதாகவும் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஆஸ்டன் மார்ட்டின் அணியைச் சேர்ந்த செபாஸ்டியன் வெட்டல்
சிங்கப்பூர் எஃப்1 பந்தயத்தில் போட்டியிடுவதைக் காணும் வாய்ப்பு இதற்குப் பிறகு கிடைக்காது. நான்கு முறை மாபெரும் வெற்றியாளர் பட்டத்தை வென்ற அவர், இப்பருவத்தின் இறுதியில் போட்டியிலிருந்து ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு மரினா பே வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அங்குள்ள பந்தயத் தடத்தில் எஃப்1 கார்களின் தனித் தனிப் பாகங்களை அந்தந்த அணி
யினர் ஒன்றாகப் பொருத்துவதை அவர்கள் நேரில் கண்டு களித்தனர்.
மரினா பேயில் உள்ள பந்தயத் தடத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேற்று முன்தினம் கூடினர். மெர்சடிஸ் அணியினர் தங்கள் கார் சக்கரங்களை ஒரே சமயத்தில் விரைவாகப் பொருத்தும் காட்சியை மிக அருகில் நின்று கண்டு மகிழ்ந்தனர்.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்