ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரேனியப் பகுதிகள்

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரேனியப் பகுதிகள்

2 mins read

உக்­ரே­னின் கட்­டுப்­பாட்­டின்­கீழ் இருந்த டொனேட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோ­ரி­ஸியா, கெர்­சோன் ஆகிய நான்கு பகு­தி­களை ரஷ்­யா­வு­டன் இணைத்­து­விட்­ட­தாக ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் நேற்று அறி­வித்­தார்.

கடந்த ஏழு மாதங்­க­ளாக நடந்து வரும் போரில் அந்த நான்கு இடங்­களை ரஷ்­யப் படை­கள் முழு­மை­யா­கக் கைப்­பற்­ற­வில்லை. அவற்­றின் ஒரு பகு­தியை மட்­டுமே அவற்­றால் கைப்­பற்ற முடிந்­தது.

கைப்­பற்­றப்­பட்ட பகு­தி­களில் உள்ள மக்­கள் ரஷ்­யா­வு­டன் இணைய விரும்­பு­கி­றார்­களா என்­பதை நிர்­ண­யிக்க ரஷ்யா அண்­மை­யில் வாக்­கெ­டுப்பு நடத்­தி­யது. அந்த வாக்­க­ளிப்பு செல்­லாது என்­றும் அதை ஏற்க முடி­யாது என்­றும் உக்­ரே­னும் மேற்­கத்­திய நாடு­களும் குரல் எழுப்­பின.

கைப்­பற்றப்பட்ட பகு­தி­களில் உள்ள மக்­கள் ரஷ்­யா­வுக்­குச் சாத­க­மாக வாக்­க­ளிக்க வற்­பு­றுத்­தப்­பட்­ட­தாக அவை குறை­கூ­று­கின்­றன.

உக்­ரே­னுக்­குச் சொந்­த­மான நான்கு பகு­தி­க­ளைக் கைப்­பற்றி ரஷ்­யா­வு­டன் இணைத்­துக்­கொண்­டதை அடுத்து, பழைய சோவி­யத் யூனி­யனை உரு­வாக்­கு­வது தமது இலக்­கல்ல என்று புட்­டின் கூறி­னார்.

தனது புதிய நிலப்­ப­கு­தி­களை ரஷ்யா தற்­காக்­கும் என்­றார் அவர்.

இத­னால் உக்­ரே­னுக்­கும் ரஷ்­யா­வுக்­கும் இடை­யி­லான போர் மேலும் மோச­ம­டை­யும் என்று

அஞ்­சப்­ப­டு­கிறது.

இந்நிலையில், உக்­ரே­னுக்கு எதி­ரான போர் தொடங்­கி­ய­தி­லி­ருந்து ரஷ்­யப் படை­கள் மிக மோச­மான பின்னடைவை எதிர்­நோக்­கு­

கின்­ற­ன. உக்­ரே­னி­ட­மி­ருந்து கைப்­பற்­றப்­பட்ட டொனேட்ஸ்க் பகு­தி­யில் உள்ள முக்­கிய இடங்­கள் இனி தங்­கள் கட்­டுப்­பாட்­டின்­கீழ் இல்லை என்று ரஷ்ய ஆத­ரவு பிரி­வி­னை­வாத தலை­வர் டெனிஸ் புஷி­லின் தெரி­வித்­தார். இத­னால் டொனேட்ஸ்க் பகு­தி­யில் உள்ள ரஷ்­யா­வின் பிர­தா­னப் படை­களை உக்­ரே­னி­யப் படைகள் பாதி அள­வில் சுற்றி வளைத்துள்ளளன.

உக்­ரே­னி­டம் கைப்­பற்­றப்­பட்ட நான்கு பகு­தி­கள் ரஷ்­யா­வு­டன் இணைக்­கப்­பட்ட நாளில் ரஷ்­யா­வுக்கு ஏமாற்­றத்­தை­யும் பின்­ன­டை­வை­யும் ஏற்­ப­டுத்த உக்­ரே­னிய ராணு­வம் தன்­னால் ஆன அனைத்­தை­யும் செய்து வரு­வ­தாக புஷி­லின் தெரி­வித்­தார்.

"இது எங்­க­ளுக்கு விரும்­பத்­

த­காத செய்தி. இனி நிலை­மையை நிதா­ன­மா­கக் கையாள வேண்­டும். செய்த தவ­று­களை அடை­யா­ளம் கண்டு அவற்றை மீண்­டும் செய்­யா­மல் புதிய அணு­கு­மு­றை­யைக் கடைப்­பி­டிக்க வேண்­டும்," என்­றார் புஷி­லின்.

இதற்­கி­டையே, உக்­ரே­னின் ஸபோ­ரி­ஸியா நக­ரில் போரினால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்­குத் தேவை­யான அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களை ஏற்­றிச் சென்ற வாக­னங்­களை ரஷ்ய ஏவு­கணை

தகர்த்தது.

இதில் குறைந்­தது 23 பேர் மாண்­ட­னர். இந்­தச் சம்­ப­வம் நேற்று நிகழ்ந்­தது.

ஏவு­கணை தாக்­கி­ய­தில் பலர் மாண்­டு­விட்­ட­தா­க­வும் காய­ம­டைந்­தி­ருப்­ப­தா­க­வும் ஸ்போ­ரி­ஸியா நக­ரின் வட்­டார ஆளு­நர் ஒலெக்­சாண்­டர் ஸ்டா­ருக் தெரி­வித்­தார்.

சட­லங்­களை மீட்­கும், காய­

ம­டைந்­தோ­ரைக் காப்­பாற்­றும் பணி­களில் மீட்­புப் பணி­யா­ளர்­கள் ஈடு­பட்டு வரு­வ­தாக டெலி­கி­ராம் செயலி மூலம் அவர் பதி­விட்­டார்.