இவ்வாண்டின் இறுதிக் காலாண்டில் மின்சாரக் கட்டணம் 1.4 விழுக்காடு குறையவுள்ளது. மின்சாரக் கட்டணம் இறக்கம் காண்பது கடந்த ஓராண்டில் இதுவே முதல்முறை. கடந்த ஓராண்டுக்கு மேலாக அது ஏறுமுகமாகவே இருந்தது. இன்று முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை மின்சாரக் கட்டணத்தின் விலை பொருள், சேவை வரி சேர்ப்பதற்கு முன்பு ஒரு கிலோவாட்டுக்கு 30.17 காசிலிருந்து 29.74 காசாகக் குறையும் என்று எஸ்பி குழுமம் நேற்று கூறியது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து மின்சாரக் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.
உக்ரேன் மீது ரஷ்யா படை
யெடுத்ததை அடுத்து உலகளாவிய நிலையில் எரிவாயு, எரிபொருள் விலை மளமளவென அதிகரித்ததை அடுத்து, சிங்கப்பூரின் மின்சாரக் கட்டணம் உயர்ந்தது.
இறுதிக் காலாண்டில் எஸ்பி குழுமத்தின் மின்சாரக் கட்டணம் குறைவதால் வீடமைப்பு வளர்ச்சிக் கழக நான்கறை வீட்டிற்கான சராசரி மாதாந்திர மின்சாரக் கட்டணம் $1.55 குறையும்.
இதற்கிடையே, இன்று முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை வீடு
களுக்கான எரிவாயு விலை கிலோவாட்டுக்கு 0.36 காசு குறையும் என்று சமையலுக்காக குழாய்வழி எரிவாயுவை வீடுகளுக்கு வழங்கும் சிட்டி எனர்ஜி நிறுவனம் தெரிவித்தது. இதன்மூலம் எரிவாயு விலை கிலோவாட்டுக்கு 23.09 காசிலிருந்து 22.73 காசாகக் குறையும்.
எரிபொருள் விலை குறைந்திருப்பதால் மின்சாரம், எரிவாயு ஆகியவற்றின் விலை குறைந்
திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

