தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலை வாய்ப்புகளில் மூத்தோருக்கு உதவும் மசெக மூத்தோர் குழு

2 mins read

சிங்­கப்­பூ­ரில் சமூ­கப் பிணைப்பை மேம்­ப­டுத்தி, மூப்­ப­டை­தல் தொடர்­பான எதிர்­ம­றை­யான சிந்­த­னை­களை எதிர்­கொள்ள உத­வும் முயற்சி­க­ளின் ஒரு பகு­தி­யாக, மூத்­தோர் பொரு­ளி­யல் வாய்ப்­பு­கள் பெறு­வதை மக்­கள் செயல் கட்­சி­யின் (மசெக) மூத்­தோர் குழு உறுதி­செய்ய உள்ளது. அதோடு, வாழ்­வின் இறு­திக்­கட்­டத்­தில் மூத்­தோ­ருக்கு மேம்­பட்ட பரா­ம­ரிப்பை வழங்­க­ உதவும் திட்டங்களையும் அது கொண்டுள்ளது.

சிங்­கப்­பூர் மக்­கள்­தொகை வேக­மாக மூப்­ப­டைந்­து­வ­ரும் வேளை­யில், மூத்­தோ­ரின் எதிர்­பார்ப்­பு­களும் விருப்­பங்­களும் மாறி வரு­வ­தால் அவர்­க­ளுக்­குக் கூடு­தல் ஆத­ரவு வழங்­கப்­பட வேண்­டும் என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார்.

மூத்­தோ­ருக்­கான அனைத்­து­லக தினத்­தைக் குறிக்­கும் வித­மாக நேற்று நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட அவர், கட்சி ஆர்­வ­லர்­கள், ஓய்­வு­பெற்ற நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் என 300 பேர் முன்­னி­லை­யில் உரை­யாற்­றி­னார்.

"இப்­போது கூடு­த­லான மூத்­தோர் சுறு­சு­றுப்­பாக இருக்க விரும்பு­கின்­ற­னர். அவர்­கள் நீண்­ட­நாள் ஆரோக்­கி­யத்­து­டன் வாழ்­வார்­கள் என்­பது எனக்கு உறு­தி­யாகத் தெரி­யும். அவர்­கள் கூடு­தல் கல்­வி­ய­றிவு பெற்று, தன்­னிச்­சை­யா­க­வும் நிதி வச­தி­யு­ட­னும் இருப்­பார்­கள்," என்­றார் திரு வோங்.

மூத்­தோர் குறித்த சமு­தா­யத்­தின் கண்­ணோட்­ட­மும் மாற வேண்­டும் என்று வலி­யு­றுத்­திய அவர், "மூத்­தோரை நம்­மு­டைய சொத்­து­களா­கப் பார்க்க வேண்­டும். அவர்­களது பழுத்த அனு­ப­வம் மற்­றும் அறி­வி­லி­ருந்து கற்­றுக்­கொள்ள புதிய வழி­மு­றை­களை நாம் கண்­ட­றிய வேண்­டும்," என்று சொன்­னார்.

மூத்­தோர் சிறந்த பொரு­ளி­யல் வாய்ப்­பு­கள் பெறு­வதை உறு­தி­செய்ய, அவர்­கள் விரும்­பி­னால் ஊழி­ய­ர­ணி­யில் கூடு­தல் காலம் தொடர மசெக மூத்­தோர் குழு உத­வும். வேலை­யி­டத்­தில் நியா­ய­மற்ற முறை­யில் நடத்­தப்­ப­டு­வ­தில் இருந்து ஊழி­யர்­க­ளைப் பாது­காக்க பாகு­பாடு எதிர்ப்­புச் சட்­டம் வரை­யப்­பட்டு வரு­கிறது.

"வேலை­வாய்ப்­பு­கள், வேலை­யிட மற்­றும் வேலை­நி­ய­மன நடை­மு­றை­கள் என வரும்­போது, வேறென்ன செய்­யப்­பட வேண்­டும் என்­பது குறித்து நாங்­கள் தொடர்ந்து ஆய்வு செய்­வோம்," என்று திரு வோங் குறிப்­பிட்­டார்.

கூடு­த­லான மூத்­தோர் குடும்ப ஆத­ர­வின்றித் தனி­யாக வசித்து வரும் நிலை­யில், அவர்களுக்குத் தேவைப்படும் உத­வி­கள் குறித்து மூத்­தோர் குழு ஆரா­யும்.

வாழ்­வின் இறு­திக்­கட்­டத்­தில் அளிக்­கப்­படும் பரா­ம­ரிப்புக் குறித்து பேசிய திரு வோங், "மூத்­தோர் அவர்­க­ளது கடை­சிக்­கா­லத்­தி­லும் பரா­ம­ரிப்­பின் தரத்­தைக் கட்­டிக்­காக்க நாம் உதவ வேண்­டும். அப்­போ­து­தான் தங்களது கடைசி விருப்­பங்­களை அவர்­க­ளால் பூர்த்தி­செய்ய முடி­யும்," என்­றார் அவர்.

மூத்­தோ­ரைப் பரா­ம­ரிப்­ப­வர்­களுக்­கும் முற்­றிய நோயால் அவ­தி­யு­று­ப­வர்­க­ளுக்­கும் ஆத­ர­வ­ளிக்க, மசெக மூத்­தோர் குழு­வைச் சேர்ந்த ஏறக்­கு­றைய 120 ஆர்­வ­லர்­கள் அந்தி­ம­க்கா­லப் பரா­ம­ரிப்பு வழங்கும் பயிற்­சி­யில் பங்­கெ­டுத்­துள்­ள­னர். அவர்­களில் சிலர் சமூ­கத்­தில் அந்தி­மக்­கா­லப் பரா­ம­ரிப்­புத் தூதர்­களாகி­ உள்­ள­னர்.

நேற்­றைய நிகழ்ச்­சி­யின் ஏற்­பாட்டுக்­கு­ழுத் தலை­வ­ரும் ஜூரோங் குழுத்­தொ­குதி எம்.பி.யுமான திரு ஸியே யாவ் சுவான், சிங்­கப்­பூ­ரின் எதிர்­கா­லத்­தைக் கட்­ட­மைக்க மூத்தோர் தொடர்ந்து முக்­கியப் பங்காற்ற வேண்­டும் என்று கேட்டுக்­கொண்­டார்.