தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் நால்வர் கடத்தல்

1 mins read
a5a18967-c12b-4833-961b-2b70c3c6fee1
(இடமிருந்து) ஜஸ்லீன் கோர், 27, ஜஸ்தீப் சிங், 36, எட்டு மாதக் குழந்தை அரூஹி, அமன்தீப் சிங், 39, ஆகிய இந்நால்வரைக் கடத்தியவர் குறித்தும் கடத்தப்பட்டதற்கான காரணம் குறித்தும் தகவல் வெளியிடப் படவில்லை. படங்கள்: ஃபேஸ்புக்/மெர்செட் நகரக் காவல்துறை -
multi-img1 of 2

எட்டு மாதப் பெண் குழந்தை, அதன் பெற்­றோர் உட்­பட இந்­திய வம்­சா­வ­ளி­யி­னர் நால்­வர் அமெ­ரிக்­கா­வில் கடத்­தப்­பட்டுள்ளனர். இச்­சம்­ப­வம் கலி­ஃபோர்­னியா மாநி­லம், மெர்­செட் நக­ரில் நேற்று முன்­தி­னம் நிகழ்ந்­த­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

ஜஸ்­தீப் சிங், 36, அவ­ரின் மனைவி ஜஸ்­லீன் கோர், 27, இவர்­களின் எட்டு மாதக் குழந்தை அரூஹி தேரி, அமன்­தீப் சிங், 39, ஆகிய நால்­வ­ரும் கடத்­தப்­பட்­ட­தாக மெர்­செட் நக­ரக் காவல்­து­றை­யைச் சுட்டி, செய்தி வெளி­யா­கி­­யுள்­ளது.

சில்­லறை விற்­ப­னைக் கடை­களும் உண­வ­கங்­களும் நிறைந்த சாலைப் பகு­தி­யில் இச்­சம்­ப­வம் நிகழ்ந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கடத்­தல்­கா­ர­னா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­ப­வ­ரி­டம் ஆயு­தம் இருந்­த­தா­கக் காவல்­துறை தெரி­வித்­தது.

விசா­ரணை தொடக்­கக் கட்­டத்­தில் இருப்­ப­தால் கடத்­தல் சம்­ப­வம் குறித்து அதி­கத் தக­வல் வெளி­யா­க­வில்லை. சந்­தே­கப் பேர்­வ­ழி­யின் பெயர், கடத்­த­லுக்­கான கார­ணம் போன்ற தக­வல்­களும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

கடத்­தல்­கா­ர­னையோ கடத்­தப்­பட்­ட­வர்­க­ளையோ நெருங்க வேண்­டாம் என்று பொது­மக்­க­ளுக்­குக் காவல்­துறை அறி­வு­றுத்­தி­யுள்­ளது. அவர்­களில் எவ­ரை­யே­னும் பார்க்க நேர்ந்­தால் தக­வல் தெரி­விக்­கு­ம் படியும் காவல்­துறை கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு கலி­ஃபோர்­னி­யா­வில் உள்ள தமது வீட்­டி­லி­ருந்து கடத்­தப்­பட்ட இந்­தி­யா­வைச் சேர்ந்த துஷார் ஆர்த்தே எனும் ஆட­வர், பின்­னர் தம் காத­லி­யின் காரில் மாண்­டு­கி­டந்­தது நினை­வு­கூ­ரத்­தக்­கது.