மலேசியக் கோழி ஏற்றுமதித் தடை நாளை அகல்கிறது சிங்கப்பூர் உணவு அமைப்பு வரவேற்பு

மலேசியக் கோழி ஏற்றுமதித் தடை நாளை அகல்கிறது சிங்கப்பூர் உணவு அமைப்பு வரவேற்பு

2 mins read
20c803fa-db4e-43d0-a543-280894f4fe7c
சிங்கப்பூரின் தேக்கா சந்தையில் செயல்படும் கோழி இறைச்சிக் கடை ஒன்றில் வாடிக்கையாளர். பிராய்லர் கோழி ஏற்றுமதி தடையை மலேசியா நாளை முதல் அகற்றுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ருக்கு பிராய்­லர் உயிர்க் கோழி­களை ஏற்­று­மதி செய்ய மலே­சியா விதித்­தி­ருந்த தற்­காலிகத் தடை நாளை, அக்டோபர் 11ஆம் தேதி முதல் நீக்­கப்­ப­டு­கிறது என்று சிங்­கப்­பூர் உணவு அமைப்பு நேற்று அறி­வித்­தது.

அந்­தத் தடை அக­ல்வது பற்றி மலே­சி­யா­வின் கால்­நடை சேவைத் துறை அதி­கா­ர­பூர்­வ­மாக தன்­னிடம் உறு­திப்­ப­டுத்தி இருக்­கிறது என்று அந்த அமைப்பு கூறியது.

தடை அகன்று சிங்­கப்­பூ­ருக்கு மலே­சி­யா­வில் இருந்து உயிருடன் கோழி­கள் வரு­வதை தாங்­கள் வர­வேற்­ப­தா­க­வும் மேலும் விவ­ரங்­களை நாடு­வ­தா­க­வும் அந்த முகவை குறிப்பிட்டது.

மலே­சி­யா­வில் கோழி உற்­பத்தி குறைந்து விலை ஏறி­ய­தால் அதைச் சமா­ளிக்­கும் முயற்­சி­களில் ஒன்­றாகக் கடந்த ஜூன்1 முதல் சிங்­கப்­பூ­ருக்­கான கோழி ஏற்­று­மதிக்கு மலே­சிய அர­சாங்­கம் தடை­வி­தித்து இருந்­தது.

மலே­சி­யா­வில் கோழி உற்­பத்தி குறைந்து விலை ஏறி­விட்­ட­தாக புகார்­கள் தெரி­விக்­கப்­பட்­டதை அடுத்து அந்­தத் தடை நடப்­புக்கு வந்­தது. சில வர்த்­த­கர்­கள் தங்­கள் விலையை வரம்­புக்கு மேலும் உயர்த்தி விற்­ப­தா­க­வும் புகார் தெரி­விக்­கப்­பட்­டது.

ஜூன் மாத நடுப் பகுதியில் மலே­சியத் தடையின் ஒரு பகுதி நீக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் உள்ள இறக்­கு மதி­யா­ளர்­கள் கம்­பத்துக் கோழி­களை­யும் கறுப்புக் கோழி­க­ளை­யும் உயி­ரோடு இறக்­கு­மதி செய்ய அனு­ம­திக்­கப்­பட்­டது.

வெளி நில­வ­ரங்­கள் கார­ண­மாக சிங்­கப்­பூர் அப்­போ­தைக்கு அப்­போது உண­வுப்­பொ­ருள் வரத்­தில் பிரச்­சி­னை­களை தொடர்ந்து எதிர்­நோக்­கும் என்­ப­தால் கோழி­களை வாங்­கு­வ­தற்கு மேலும் பல வழி­க­ளைத் தான் தொடர்ந்து காணப்­போ­வ­தா­க­வும் இந்­தத் தொழில்­து­றை­யு­டன் சேர்ந்து செயல்­பட்டு பன்­மய முயற்­சி­களை முடுக்­கி­வி­டப் போவ­தா­க­வும் உணவு அமைப்பு தெரி­வித்­தது.

"நிறு­வ­னங்­கள் தங்­க­ளு­டைய தொழில் தொடர்ச்சித் திட்­டங்­களை மறு­ப­ரி­சீ­லனை செய்ய நாங்கள் ஊக்­க­மூட்­டு­கி­றோம்.

"மேலும் பன்­மய அணுகு­முறை­களை அவை கையாள வேண்­டும். உண­வுப்­பொ­ருள் வரத்­தில் இடை­யூறு ஏற்­ப­டும்­போது பாதிப்பு இல்­லா­மல் நம்மைப் பாது­காத்­துக் கொள்ள இத்­த­கைய அணுகுமுறை உத­வும்," என்று உணவு அமைப்பு குறிப்­பிட்டு இருக்­கிறது.

பொது­மக்­களும் தங்­க­ளு­டைய விருப்­பங்­களை விட்­டு­கொ­டுத்து நடந்­து­கொண்­டால், உண­வுப்­பொருள்­க­ளைப் பொறுத்­த­வரை சிங்­கப்­பூர் மீள்­தி­ற­னு­டன் திகழ அது உத­வும் என்­று சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.