தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

80% சிங்கப்பூர் இளையர்கள் திருமணத்தின்மீது ஆர்வம்

2 mins read

பிள்ளை பராமரிப்பில் தாய், தந்தைக்கு சம பொறுப்பு என 99 விழுக்காட்டினர் கருத்து

குடும்­பத்தை உரு­வாக்­கும் ஆர்­வம் சிங்­கப்­பூ­ரில் வலுவாக உள்­ளது. 10ல் எட்டு சிங்­கப்­பூர் இளை­யர்­கள், அதா­வது 80 விழுக்­காட்டு இளை­யர்­கள் திரு­ம­ணம் செய்­து­கொள்ள விரும்­பு­வ­தாக திரு­ம­ணம், பிள்­ளை­ வ­ளர்ப்பு ஆய்வு தெரி­வித்து உள்­ளது.

21 வய­துக்­கும் 35 வய­துக்­கும் இடைப்­பட்ட ஒற்­றை­ய­ரில் 80 விழுக்­காட்­டி­னர் மணம் புரிந்­து­கொள்ள விருப்­பம் தெரி­வித்­த­போ­தி­லும் இந்த விகி­தம் ஆண்­டுக்­காண்டு குறைந்து வரு­வதை ஆய்வு உணர்த்து­கிறது.

உதா­ர­ண­மாக, மணம் புரிய விரும்­பும் இளை­யோ­ரின் விகி­தம் 2012ஆம் ஆண்டு 86 விழுக்­கா­டா­ க­வும் 2016ஆம் ஆண்டு 83 விழுக்­கா­டா­க­வும் குறைந்து வந்­தது.

ஆய்வு, கடந்த ஆண்டு பிப்­ர­வரி மாதத்­திற்­கும் ஜூன் மாதத்­திற்­கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தி­யில் நடத்­தப்­பட்­டது. ஆய்­வின் முடி­வு­களை தேசிய மக்­கள்­தொகை, திற­னா­ளர் பிரிவு நேற்று வெளி­யிட்­டது.

வேலை­யில் இருப்­ப­தும் குடும்­பத்தை உரு­வாக்­கு­வ­தும் சம அளவு முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தவை என்று 21 வய­துக்­கும் 45 வய­துக்­கும் இடைப்­பட்­டோ­ரில் முக்­கால்­வா­சிப் பேர் கரு­து­கின்­ற­னர். இந்த விகி­தம் இதற்கு முன்­னர் இருந்­த­தைப்­போ­லவே உள்­ளது. இருப்­பி­னும், இந்த வய­துப் பிரி­வி­ன­ரில் 14 விழுக்­காட்­டி­னர் வேலை­யைக் காட்­டி­லும் குடும்­பமே மிக­வும் முக்­கி­ய­மா­னது என்­கின்­ற­னர்.

ஒற்­றை­ய­ரில் 77 விழுக்­காட்­டி­னர் மணம் முடித்து குழந்தை பெற்­றுக்­கொள்ள விருப்­பம் தெரி­வித்து உள்­ள­னர். 21 வய­துக்­கும் 45 வய­துக்­கும் இடைப்­பட்ட திரு­ம­ணம் செய்­து­கொள்­ளாத 2,848 ஒற்­றை­ய­ரும் மணம் புரிந்­து­கொண்ட 3,017 பேரும் ஆய்­வில் பங்­கேற்று கருத்­துக் கூறி­னர்.

மணம் புரிந்­தோ­ரில் ஆக அதி­க­மா­னோர், அதா­வது 92 விழுக்­காட்­டி­னர் ஒன்று அல்­லது இரண்டு குழந்­தை­க­ளைப் பெற்­றுக்­கொள்ள விருப்­பம் தெரி­வித்­த­னர். இதற்கு முன்­னர் 2012ஆம் ஆண்­டும் 2016ஆம் ஆண்­டும் இதே­போல ஆக அதி­க­மா­னோர் ஒன்­றி­ரண்டு குழந்தை பெற விருப்­பம் கொண்­டி­ருந்­த­னர்.

இவ்­வாறு மணம் புரிந்த அதி­கம் பேர் குழந்தை பெற்­றுக்­கொள்ள விரும்­பி­னா­லும் ஆய்­வின்­போது அவர்­களில் பல­ருக்கு ஒரு குழந்தை இருந்­தது. அல்­லது குழந்தை எது­வும் இல்­லா­த­வர்­க­ளாக இருந்­த­னர்.

அதி­கக் குழந்தை பெற்­றுக்­கொள்ள விரும்­பா­த­வர்­கள் அதற்கு மூன்று முக்­கிய கார­ணங்­களை குறிப்­பிட்­ட­னர். அதில் முத­லா­வது செலவு. அடுத்­த­தாக, ஏற்­கெ­னவே போது­மான குழந்­தை­யைப் பெற்றுக்­ கொண்­டது. குழந்­தை­களை வளர்ப்­ப­தில் சந்­திக்­கும் மன உளைச்­சல் மூன்­றா­வது கார­ணம்.

திரு­ம­ணம் புரிந்­து­கொள்­வ­தி­லும் பிள்ளைகளை வளர்ப்­ப­தி­லும் சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே இருக்­கும் ஆர்­வம் முந்­திய ஆய்­வு­க­ளைப்­போ­லவே அதி­க­மாக உள்­ளதை 2021ஆம் ஆண்­டின் ஆய்வு குறிப்­பிட்­டது.

குழந்­தை­க­ளைப் பரா­ம­ரிப்­ப­தில் தாய், தந்தை இரு­வ­ருக்­குமே சம பொறுப்பு உண்டு என்று ஆய்­வில் பங்­கேற்ற, மண­மா­னோ­ரில் 99 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­த­னர்.

அதற்கிணங்க, குழந்­தை­களை அவர்­க­ளின் தாயார்­தான் முழு­நே­ர­மா­கக் கவ­னித்­துக்­கொள்ள வேண்­டும் என்ற அம்­சம் தொடர்­பான ஆத­ரவு படிப்­ப­டி­யா­கக் குறைந்து வரு­கிறது.

2016ஆம் ஆண்டு 40 விழுக்கா ­டாக இருந்த இருந்த ஆத­ரவு 2021ஆம் ஆண்டு 24 விழுக்­காட்­டுக்கு இறங்­கி­யது.