$1.5 பில்லியன் ஆதரவுத் திட்டம்

$1.5 பில்லியன் ஆதரவுத் திட்டம்

3 mins read
827eafc5-d8fe-41af-babc-fe6720463412
-

விலைவாசி உயர்வைச் சமாளிக்க உதவி; 2.5 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு $500 வரை ரொக்கம்

இர்­ஷாத் முஹம்­மது

துணைச் செய்தி ஆசிரியர்

அதிகரித்துவரும் வாழ்க்­கைச் செல­வின உயர்­வைச் சமா­ளிக்க மேலும் $1.5 பில்­லி­யன் ஆத­ர­வுத் தொகுப்­புத் திட்­டத்­தைத் துணைப் பிர­த­ம­ரும் நிதி­ய­மைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங் அறி­வித்­துள்­ளார்.

சிங்­கப்­பூ­ரர்­கள் அடங்கிய அனைத்துக் குடும்­பங்­க­ளுக்­கும் இந்த ஆத­ரவு கிடைக்­கும்.

புதிய ஆதரவுத் திட்டத்தின் ஓர் அங்­க­மா­கப் புதிய வாழ்க்­கைச் செல­வி­னச் சிறப்­புத் தொகை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அதன்மூலம், கிட்டத்தட்ட 2.5 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு $500 வரை ரொக்க வழங்குதொகை கிடைக்­கும். வரி செலுத்து­வதற்குக் கணக்­கி­டப்­படும் மதிப்­பி­டத்­தக்க வரு­மானத்தின் அடிப்­ப­டை­யில் அத்தொகை டிசம்­பர் மாதம் வழங்­கப்­படும்.

அதன்­படி, $22,000 வரை ஆண்டு வரு­மா­னம் ஈட்­டு­வோ­ருக்கு 500 வெள்­ளி­யும், $34,000 வரை­யில் வரு­மா­னம் ஈட்­டு­வோ­ருக்கு 400 வெள்­ளி­யும், $100,000 வரை வரு­மா­னம் ஈட்­டு­வோ­ருக்கு 300 வெள்ளி­யும் வழங்­கப்­படும்.

இதுகுறித்த மேல் விவ­ரங்­கள் அடுத்த மாதம் வெளி­யி­டப்­படும்.

இவ்­வாண்­டின் வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் அறி­விக்­கப்­பட்ட உத்­த­ர­வா­தத் தொகுப்­புத் திட்­டத்­தின்­கீழ் வழங்­கப்­பட இருக்­கும் பொருள், சேவை வரி ரொக்க வழங்கு தொகையுடன் இத்தொகை வழங்­கப்­படும்.

இந்த ரொக்க வழங்­கீட்­டு­டன் மேலும் பல ஆதரவுத் திட்­டங்­களும் புதிய ஆதரவுத் தொகுப்­புத் திட்­டத்­தில் இடம்பெற்றுள்ளன.

"குறைந்த வரு­மா­னம் ஈட்­டு­வோ­ரை­யும் வேலை­மூ­லம் வரு­மா­னம் இல்­லாத, ஓய்­வு­பெற்ற முதி­ய­வர்­க­ளை­யும் மனத்­திற்­கொண்டு இந்­தத் திட்­டம் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது," என்று துணைப் பிர­த­மர் வோங் கூறினார்.

இந்த ஆதரவு நடவடிக்கைகளால் குறைந்த வரு­மா­ன­முள்ள குடும்­பங்­களும் வேலை­யி­லி­ருந்து ஓய்­வு­பெற்­ற­வர்­களும் வாழ்க்­கைச் செல­வின உயர்­வால் முற்­றிலும் பாதிக்­கப்­ப­ட­மாட்­டார்­கள் என்று அவர் தெரிவித்தார்.

நடுத்­தர வரு­மா­னம் ஈட்டும் குடும்­பங்­கள் இந்த ஆத­ரவு­த் திட்டங்களால் சராசரியாக ஏறத்­தாழ பாதிக்­கும் மேலான வாழ்க்­கைச் செல­வின உயர்வைச் சமா­ளிக்க முடி­யும் என்­றும் அவர் சொன்னார்.

இவ்­வாண்­டிற்­கான ஒட்­டு­மொத்த பண­வீக்கம் 6 விழுக்­கா­டாக இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தா­க­ அவர் குறிப்­பிட்­டார்.

நேற்று அறி­விக்­கப்­பட்ட புதிய ஆத­ர­வுத் திட்­டத்­தின்­மூ­லம் அனைத்­துக் குடும்­பங்­களும் கூடு­த­லாக $100 சமூக மேம்­பாட்டு மன்ற (சிடிசி) பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பெறும். அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் இந்­தப் பற்­றுச்­சீட்­டு­க­ளைக் குடும்­பங்­கள் பெறும். இதற்­கு­முன் இவ்­வாண்­டில் 200 வெள்­ளிக்­கான பற்­றுச்­சீட்­டு­கள் அறி­விக்­கப்­பட்­டன.

மேலும், $30 பெறு­மா­ன­முள்ள 600,000 பொதுப் போக்­கு­வ­ரத்­துப் பற்­றுச்­சீட்­டு­கள் வழங்­கப்­ப­ட­வி­ருக்­கின்­றன. $1,600க்கும்கீழ் தனி­நபர் மாதாந்திர குடும்ப வரு­மா­னம் உள்ள குடும்­பங்­க­ளுக்கு இந்த ஆத­ரவு கிடைக்­கும்.

கல்வி அமைச்­சின் நிதி ஆத­ர­வுத் திட்­டங்­க­ளி­லும் மாற்­றங்­கள் அறி­விக்­கப்­பட்­டு உள்­ளன.

தகு­தி­பெ­றும் வரு­மான வரம்பு அதி­க­ரிக்­கப்­ப­டு­வ­து­டன் தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தில் பயி­லும் மாண­வர்­களுக்கு அடுத்த ஆண்டு முதல் கூடு­த­லான கல்வி உதவி நிதி கிடைக்­கும்.

அதி­க­ரித்­து­வ­ரும் பண­வீக்­கத்­தா­லும் வாழ்க்­கைச் செல­வி­னங்­கள் குறித்த அக்­கறை­க­ளா­லும் இந்த ஆண்டு தொடக்­கத்­தி­லி­ருந்து அர­சாங்­கம் பல ஆத­ர­வுத் திட்­டங்­களை அறி­வித்­து ­வந்­துள்­ளது என்று நிதி அமைச்சு அதன் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்ளது.

இந்த $1.5 பில்­லி­யன் தொகுப்­புத் திட்­டத்­திற்­கான தொகையைக் கையிருப்­பி­ல் இருந்து எடுக்­கத் தேவை­யில்லை என்று துணைப் பிரதமர் ஓங் சொன்னார்.

ஒமிக்­ரான் கொவிட்-19 அலை எதிர்­பார்த்­த­தை­விட சற்று மந்­த­மான தாக்­கத்­தையே ஏற்­ப­டுத்­தி­ய­தா­லும் அதி­க­மான தொழில்­து­றை­கள் சீரா­கத் திறந்­து­வி­டப்­பட்டு பொரு­ளி­யல் மீட்­சியை முடுக்­கி­விட்­ட­தா­லும் இவ்­வாண்­டின் முதல் பாதி­யில் கிடைத்த கூடு­தல் வரு­மா­னத்­தைக் கொண்டு ஆத­ரவு வழங்­கப்­படும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

முக்கிய அம்சங்கள்

அண்மைய ஆதரவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து முக்கிய அம்சங்கள்:

♦ வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க சிறப்புத் தொகையாக வரும் டிசம்பர் மாதம் $500 வரை ரொக்க உதவி வழங்கப்படும்

♦ 2023 ஜனவரி மாதத்தில் அனைத்து சிங்கப்பூர் குடும்பங்களுக்கும் கூடுதலாக $100 சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்

♦ ரயில், பேருந்துக் கட்டண உயர்வு பயணிகளிடத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைக்கவும் அதிகரித்துவரும் செலவினங்களைச் சமாளிக்கவும் பொதுப் போக்குவரத்திற்கு அடுத்த ஆண்டு கிட்டத்தட்ட $200 மில்லியன் மானியம் வழங்கப்படும்

♦ தனிநபர் மாதாந்திரக் குடும்ப வருமானம் $1,600க்கும் கீழுள்ள குடும்பங்களுக்குத் தலா $30 மதிப்புடைய 600,000 பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்

♦ அதிக மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி அமைச்சின் நிதியுதவித் திட்டங்களுக்கான வருமான வரம்பு 2023 ஜனவரி 1ஆம் தேதிமுதல் உயர்த்தப்படும்