சென்னையில் ரயில்முன் தள்ளிவிட்டு கல்லூரி மாணவி கொலை

2 mins read
7e7e88f1-2836-4d33-9746-3e0e4824215a
சத்தியப்பிரியாவைத் திட்டமிட்டே கொன்றதாகக் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் சதீஷ். படங்கள்: தமிழக ஊடகம் -
multi-img1 of 2

காதல் விவ­கா­ரத்­தில் ஆட­வர் ஒருவர் ஓடும் ரயில்­முன் இளம்­பெண்­ணைத் தள்­ளி­விட்­டுக் கொன்ற அதிர்ச்சி சம்­ப­வம் தமிழ் நாட்­டின் தலை­ந­கர் சென்­னை­யில் நேற்று முன்­தி­னம் நிகழ்ந்­தது.

மகள் உயி­ரி­ழந்த அதிர்ச்­சி­யில் அப்­பெண்­ணின் தந்­தை­யும் உயிரை மாய்த்­துக்­கொண்­டார்.

சென்னை ஆலந்­தூ­ரைச் சேர்ந்த மாணிக்­கம், 47, ஆதம்­பாக்­கம் காவல் நிலை­யத்­தில் தலை­மைக் காவ­ல­ரா­கப் பணி­யாற்­றி­வந்­தார்.

அவ­ரு­டைய மகள் சத்­தி­யப் பிரியா, 20, தியா­க­ராய நக­ரி­லுள்ள ஒரு கல்­லூ­ரி­யில் 3ஆம் ஆண்டு பட்­டக் கல்வி பயின்­று­வந்­தார்.

அவர்­க­ளது வீட்­டிற்கு எதி­ரே ஓய்­வு­பெற்ற காவல்­துறை துணை ஆய்­வா­ள­ர் தயா­ள­னின் குடும்­பம் வசித்து வரு­கிறது. திரு தயா­ள­னின் மக­னான சதீஷ், 23, பட்­ட­யக் கல்வி பயின்­றுள்­ளார்.

எதிர்­வீட்­டில் வசித்த சத்­யா­மீது சதீஷ் காதல் வயப்­பட்­டார். ஆனால், சத்யா அவ­ரது காதலை ஏற்­க­வில்லை.

இருப்­பி­னும், விடா­மல் இரண்டு ஆண்­டு­க­ளாக அவ­ரைப் பின்­தொடர்வதை வாடிக்­கை­யாக வைத்­தி­ருந்­தார் சதீஷ். இதனை அடுத்து, சத்­யா­வின் குடும்­பத்­தி­னர் சதீஷ்­மீது காவல்­து­றை­யில் புகார் அளித்­த­னர். அத­னைத் தொடர்ந்து, இனி­மேல் சத்­யா­வைத் தொந்­த­ரவு செய்­யக்­கூ­டாது என எழுதி வாங்­கிக்­கொண்டு, காவல்துறை சதீஷை எச்­ச­ரித்து அனுப்­பி­யது.

ஆயினும், தனக்­குக் கிடைக்­காத சத்யா வேறு யாருக்­கும் கிடைக்­கக்­கூ­டாது என்று எண்ணிய சதீஷ், அவரை ரயில்முன் தள்ளிக் கொன்று­விட முடி­வு­செய்­தார்.

அதன்­படி, நேற்று முன் தினம் பிற்­ப­க­லில் பரங்­கி­மலை ரயில் நிலை­யத்­திற்­குத் தம் தோழி­யு­டன் வந்த சத்­யா­வி­டம் சென்று பேசி­னார் சதீஷ். ஆனால், சத்யா தன்­னைக் கண்­டு­கொள்­ளா­த­தால் அவரை ஓடும் ரயில்­முன் சதீஷ் தள்­ளி­விட்­டார். இதில் தலை துண்­டாகி, சம்­பவ இடத்­தி­லேயே சத்யா இறந்துபோனார்.

அங்­கி­ருந்து தப்­பிய சதீஷ், நள்­ளி­ரவு 1 மணி­ய­ள­வில் காவல்துறை­யி­டம் பிடி­பட்­டார். இத­னி­டையே, மகள் இறந்த துக்­கம் தாளாது, திரு மாணிக்­கம் நேற்றுக் காலை நஞ்சருந்தி உயிரைவிட்டார்.