இந்திய அமைச்சர் நிர்மலா: நல்ல நிலையில் பொருளியல்; நிலைப்படும் நாணயம்

இந்திய அமைச்சர் நிர்மலா: நல்ல நிலையில் பொருளியல்; நிலைப்படும் நாணயம்

2 mins read

அமெ­ரிக்க டாலர் வர­லாறு காணாத அள­வில் மதிப்பு உயர்ந்து வரும் நிலையில், இந்­திய ரூபாய் உறு­தி­யாக நிலைப்­ப­டு­கிறது என்று இந்திய நிதி­ய­மைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் தெரி­வித்து இருக்­கி­றார்.

இந்­தி­யப் பொரு­ளி­ய­லின் அடிப்­படை அம்­சங்­கள் வலு­வாக இருப்­ப­தா­க­வும் உல­கின் இதர பகு­தி­களு­டன் ஒப்­பிட்டுப் பார்க்­கை­யில் இந்தி­யா­வில் பண­வீக்­கம் குறை­வாக இருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

அனைத்­து­லக பண நிதி­யம், உலக வங்கி ஆகி­ய­வற்­றின் ஆண்டுக் கூட்­டங்­களில் கலந்­து­கொள்ள அமெ­ரிக்கா சென்­றி­ருந்த அமைச்சர், வாஷிங்­ட­னில் தமது பயண நிறை வில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார். இந்­தி­யா­வில் பண­வீக்­கம் சமா­ளிக்­கக்­கூ­டிய நிலை­யில் இருக்­கிறது என்­றார் அவர்.

"அடிப்­ப­டை­ அம்சங்கள் வலு வாக இருக்­கின்­றன. பரந்த அள­வில் பார்க்­கும்­போது பொரு­ளி­யல் தூண்­கள் உறு­தி­யாக உள்­ளன. நாட்­டின் அந்­நி­யச் செலா­வணி நல்ல நிலை­யில் இருக்­கிறது. மீண்­டும் இதையே கூறு­கி­றேன்.

"பண­வீக்­க­மும் சமா­ளிக்­கக்­கூடிய அள­வில்­தான் இருக்­கிறது," என்று அவர் தெரி­வித்­தார்.

அனைத்­து­லக பண நிதி­யம், உலக வங்கி கூட்­டங்­க­ளை­யொட்டி 24 இரு­த­ரப்பு சந்­திப்­பு­க­ளி­லும் ஏறக்கு­றைய 12 பல­த­ரப்புக் கூட்­டங்­களி­லும் திரு­வாட்டி நிர்­மலா கலந்து­கொண்­டார்.

இந்­தி­யா­வில் பண­வீக்­கத்தை 6%க்கு கீழாகக் குறைப்­பதே தமது விருப்­பம் என்­றும் இதற்­கான முயற்­சி­களை அர­சாங்­கம் எடுத்து வரு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

வெளி நில­வ­ரங்­கள் கார­ண­மாக நாடு­கள் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­படு­வ­தாக அவர் கூறி­னார்.

"இந்­தி­யா­வும் இதற்கு விதி­விலக்­கல்ல. இருந்­தா­லும் ஒவ்வொரு முறை­யும் குறித்த காலத்­தில் இந்­திய அர­சாங்­கம் உரிய நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தால் நிலவரங்­களைக் குறைந்­த­பட்­சம் நிலைப்­படுத்த முடி­கிறது," என்­றார் அவர். பண­வீக்­கத்தை 4%ஆக குறைக்க முயல்­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

இந்­திய ரூபாய் மதிப்பு கிடு­கிடு­வென சரிந்து வரு­வது பற்றி கருத்து கூறிய அமைச்­சர், அமெ­ரிக்க டாலர் வலு­வ­டை­வதே இதற்­கான கார­ணம் என்­றார்.

"எல்லா நாண­யங்­களின் மதிப்பும் குறை­கின்­றன. ஆனால், இந்­திய ரூபாய் தாக்­குப்­பி­டித்து நிற்­கிறது. இதர பல புதிய சந்தை நாண­யங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில், இந்­தியா எவ்­வ­ளவோ அரு­மை­யாக செயல்­பட்டு இருக்­கிறது," என்று அவர் தெரி­வித்­தார்.

இந்­திய மத்­திய வங்­கி­யான ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்­தியா, சந்­தை­யில் தலை­யிட்டு ரூபா­யின் மதிப்பை நிர்­ண­யிக்க முயல்­வதில்லை. ரூபாய் தனக்­கு­ரிய இடத்தை அதுவே பெற்று வரு­கிறது என்று அவர் குறிப்­பிட்­டார்.