சிங்கப்பூரர் வெளிநாட்டு வேலைபெற உதவும் முன்னோடித் திட்டம்

2 mins read

வெளி­நாட்­டில் வேலை செய்ய விரும்­பு­வோர் கூடு­தல் வாய்ப்­பைப் பெற இருக்­கின்­ற­னர்.

இது தொடர்­பான முன்­னோ­டித் திட்­டம் ஒன்று வேலை­வாய்ப்பு மற்­றும் வேலைத்தகுதி பயிற்­சிக் கழ­கத்­திற்­கும் (e2i) சிங்­கப்­பூர் முத­லா­ளி­கள் சம்­மே­ள­னத்­துக்­கும் இடை­யில் உரு­வாகி உள்­ளது.

தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சின் ஓர் அங்­க­மான இந்­தப் பயிற்­சிக்­க­ழ­கம் தேசிய முத­லா­ளி­கள் சம்­மே­ள­னத்­து­டன் செய்­து­கொண்டு உள்ள புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்­தில் பல்­வேறு அம்­சங்­கள் இடம்­பெற்று உள்­ளன.

அவற்­றில் ஒன்­று­தான் சிங்­கப்­பூ­ரர்­கள் வெளி­நாட்டு வேலை­பெற உத­விக்­க­ரம் நீட்­டும் முன்­னோ­டித் திட்­டம்.

கொவிட்-19 கொள்­ளை­நோ­யில் இருந்து சிங்­கப்­பூர் மீண்­டு­வ­ரும் வேளை­யில் சிறந்த சம்­ப­ளம், வள­மான வேலை­வாய்ப்பு மற்­றும் ஊழி­யர் நலன் ஆகிய அம்­சங்­களை ஒப்­பந்­தம் உள்­ள­டக்கி உள்­ளது.

முன்­னோ­டித் திட்­டத்­தின்­கீழ், வேலை­தே­டு­வோர், குறிப்­பாக இள­

வ­யது நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள் மற்­றும் நிர்­வா­கி­கள் தேசிய முத­லா­ளி­கள் சம்­மே­ள­னத்­தில் உறுப்­பி­னர்­க­ளாக உள்­ளோ­ரின் வெளி­நாட்டு அலு­வ­ல­கங்­களில் பணி­ய­மர்த்­தப்­ப­டு­வர்.

வெளி­நாட்­டுச் சூழ­லுக்­குப் பொருந்­தும் வகை­யில் பல­தி­றன் பணி­களில் ஈடு­பட்டு வேலை அனு­ப­வங்­க­ளைப் பெற இந்த ஏற்­பாடு அவர்­க­ளுக்கு உத­வும்.

முன்­னோ­டித் திட்­டம் குறித்து விளக்­கிய வேலை­வாய்ப்பு மற்­றும் வேலைத்­தகுதி பயிற்­சிக் கழக தலைமை நிர்­வாகி கேரின் லிம், சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் சம்­மே­ள­னத்­தின் உறுப்­பி­னர் நிறுவ­னங்­களும் அவற்­றின் ஊழி­யர்­களும் வெளி­ப்படுத்திய ஆர்­வத்­தைத் தொடர்ந்து இத்­திட்­டம் உத­ய­மா­ன­தா­கக் கூறி­னார்.

தொடக்­க­மாக, ஆர்­வத்தை வெளிப்­ப­டுத்­திய சம்­மே­ள­னத்­தில் உள்ள 5 முதல் 10 வரை­யி­லான உறுப்­பி­னர் நிறு­வ­னங்­கள் இத்­திட்­டத்­திற்­கா­கப் பரி­சீ­லிக்­கப்­படும்.

இருப்­பி­னும் திட்­டம் எப்­போது செயல்­ப­டத் தொடங்­கும் என்­பது குறித்த தக­வல் இல்லை.

வேலைப் பாது­காப்பு மன்­றத்­தின்­கீழ் இந்த முன்னோடித் திட்­டம் இயங்­கும்.

2020 பிப்­ர­வரி மாதம் தொடங்­கப்­பட்ட இம்­மன்­றம், ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்ட ஊழி­யர்­கள் நல்ல வேலை­க­ளைப் பெற உத­வும் நோக்­கம் கொண்­டிருந்தது.

இருப்­பி­னும், கொவிட்-19 சூழல் கார­ண­மாக பொருத்­த­மான வேலை­தே­டித் தரும் முயற்­சிக்கு மன்­றம் மாறி­ய­தாக திரு­வாட்டி லிம் குறிப்­பிட்­டார்.