உக்ரேன் மீதான தாக்குதலை கடந்த வாரம் ரஷ்யா தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து நேற்று அது தலைநகர் கியவ் மீது கவனம் செலுத்தியது.
ஆளில்லா வானூர்தித் தாக்குதல் நேற்றுக் காலை முதல் கியவ் மீது தொடுக்கப்பட்டதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறினர்.
நகரின் மத்திய பகுதியில் பலத்த சத்தத்துடன் இரு வெடிப்புகள் நிகழ்ந்ததாகவும் அவர்கள் கூறினர். காலை 8.15 மணியளவில் முதல் வெடிப்பு நிகழ்ந்த ஒன்றரை மணி நேரத்தில் மற்றொரு வெடிப்பு நிகழ்ந்தது.
இவற்றைத் தொடர்ந்து பல்வேறு ஆகாயவழித் தாக்குதலுக்கான ஓசையும் கேட்டது. தலைநகர் கியவ்வின் மத்திய வட்டாரம் வெண்ணிற புகையால் மறைக்கப்பட்டிருந்தது என்றனர் அதிகாரிகள்.
கிரைமியா தீபகற்பத்திற்கு இடடுச் செல்லும் ரஷ்யாவின் முக்கிய பாலம் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து சினமடைந்த ரஷ்யா, அக்டோபர் 10 முதல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது.
ஆளில்லா வானூர்தித் தாக்குதல் நடத்தப்பட்டதை உக்ரேனிய அதி
பரின் தலைமை அதிகாரி ஆண்ட்ரி யெர்மாக் சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார்.
"எங்களுக்கு இன்னும் அதிகமான தற்காப்பு ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. எங்களிடம் இருந்த பெரும்பாலான ஆயுதங்கள் எதிரிகளை அழிக்கவும் வான்வெளியைத் தற்காக்கவும் பயன்படுத்தப்பட்டு விட்டன," என்றார் அவர்.
முன்னதாக, கிழக்கு உக்ரேனிலும் பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது. கிழக்கு வட்டாரத்தில் டொனெட்ஸின் இரண்டு நகரங்களிலும் உக்ரேனிய, ரஷ்யப் படையினர் தீவிரமாகச் சண்டையிட்டனர்.
பாக்மட், செலேடார் என்னும் அந்த இரு நகரங்களில் போர் நடைபெற்றதை உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், 15,000 உக்ரேனிய வீரர்களுக்கு அடுத்த மாதம் முதல் பயிற்சி அளிக்கும் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் ஒப்புதல் அளிக்க உள்ளனர்.
இது தவிர, ஆயுதங்களை கூடு தலாக 500 மில்லியன் யூரோ நிதியை உதவியாக அளிக்கவும் அவர்கள் முன்வந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரி வித்துள்ளது.உக்ரேனிய வீரர் களுக்கான பயிற்சி நவம்பர் மாத நடுப்பகுதியில் போலந்திலும் ஜெர்மனியிலும் நடத்தப்படலாம் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்கெனவே உக்ரேனிய வீரர்களுக்கு தாக்குதல் உத்திகளை அளித்து வந்தனர். குறிப்பிட்ட சில ஆயுதங்களை திறம்படப் பயன்படுத்து வது தொடர்பாக அந்நாடுகள் அவற்றைத் தொடர முடிவுசெய்து உள்ளன.
ராஷ்யா போர்தொடுக்கத் தொடங் கியதிலிருந்து உக்ரேனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவிக்கரம் நீட்டி வருகிறது. நிதி உதவியோடு ராணுவ உதவியையும் ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் அளித்து வருகின்றன. புதிய உதவியோடு சேர்த்து 3 பில்லியன் யூரோவை அவை அளித்து உதவி உள்ளன.

