காங்கிரஸ் கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு

காங்கிரஸ் கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு

1 mins read
144eeb49-8539-40fa-bd4b-61050ff4a1e3
தேர்தலில் தோற்றுப்போனாலும் திரு கார்கேக்கு (வலது) வாழ்த்து தெரிவித்தார் திரு சசி தரூர். படம்: ஏஎஃப்பி -

அகில இந்­திய காங்­கி­ரஸ் கட்­சிக்கு மல்­லி­கார்­ஜுன கார்கே, 80, தலை­மை­யேற்க இருக்­கி­றார்.

காங்­கி­ரஸ் கட்­சித் தலை­வ­ருக்­கான தேர்­த­லில் திரு கார்­கே 84% வாக்­கு­க­ளைப் பெற்­றார். அவ­ருக்கு 7,897 வாக்­கு­களும் எதிர்த்­துப் போட்­டி­யிட்ட திரு சசி தரூ­ருக்கு 1,072 வாக்­கு­களும் கிடைத்­தன. 416 வாக்­கு­கள் செல்­லா­த­வை­யாக அறி­விக்­கப்­பட்­டன.

இதை­ய­டுத்து, 24 ஆண்­டு­களுக்­குப் பிறகு காந்தி குடும்­பத்­தைச் சாராத ஒரு­வர் காங்­கிரஸ் கட்­சிக்­குத் தலை­வ­ரா­கி­றார். எஸ்.நிஜ­லிங்­கப்­பாவிற்குப்பின் கர்­நா­டக மாநி­லத்­தைச் சேர்ந்த ஒரு­வர் காங்­கி­ரஸ் கட்­சித் தலை­வரா­வது இதுவே முதன்முறை.

அதி­கா­ர­பூர்வ முடி­வு­கள் வெளி­யா­கும் முன்­னரே காங்­கி­ரஸ் எம்.பி. ராகுல் காந்தி செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது திரு கார்­கே­யின் வெற்­றியை உறு­திப்­ப­டுத்­தி­விட்­டார்.

காங்­கி­ரஸ் கட்­சித் தலை­வ­ரின் பொறுப்­பு­கள் குறித்­துக் கேட்­ட­போது, அது­பற்றி திரு கார்­கே­தான் தெரி­விக்க வேண்­டும் என்று கட்­சி­யில் தமது பொறுப்­பை­யும் அவரே முடி­வு­செய்­வார் என்­றும் திரு ராகுல் கூறி­னார்.

தீபா­வ­ளிக்­குப் பிறகு திரு கார்கே தலை­மைப் பொறுப்பை ஏற்­பார் என்று கட்சி வட்­டா­ரங்­கள் கூறின.

முன்­ன­தாக, உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தில் வாக்­குப்பெட்­டி­கள் முறை­யாக மூடப்­பட்டு, முத்­தி­ரை­யி­டப்­ப­ட­வில்லை என்று திரு சசி தரூர், கட்­சித் தேர்­தல் குழு­வி­டம் முறை­யிட்­டார். ஆயி­னும், புதிய தலை­வ­ரா­கும் திரு கார்­கேக்கு வாழ்த்து தெரிவித்த அவர், கட்சி­யின் உண்­மை­யான மறு­ம­லர்ச்சி தொடங்­கி­விட்­ட­தா­க­வும் குறிப்­பிட்­டார்.