பிணைநிரல் அச்சுறுத்தலை எதிர்கொள்ள பணிக்குழு

பிணைநிரல் அச்சுறுத்தலை எதிர்கொள்ள பணிக்குழு

3 mins read

அதி­க­ரித்­து­வ­ரும் பிணை­நி­ரல் (ரேன்­சம்­வேர்) அச்­சு­றுத்­தலை எதிர்­கொள்­வ­தில் தொழில் நிறு­வனங்­க­ளுக்­கும் ஆய்வு, கல்வி நிலை­யங்­க­ளுக்­கும் உதவ புதி­ய­பணிக்­குழு அமைக்­கப்­பட்­டுள்ளது.

ஏழா­வது வரு­டாந்­திர சிங்­கப்­பூர் அனைத்­து­லக இணைய வார நிகழ்­வில் மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன் நேற்று இதனை அறி­வித்­தார்.

பிணை­நி­ரல் எல்­லா­ருக்­கும் பொது­வான அச்­சு­றுத்­த­லாக விளங்­கு­கிறது என்ற அவர், குறிப்­பாக மோச­மான இணை­யப் பாது­காப்பு நடை­மு­றை­க­ளைக் கொண்­டுள்ள நிறு­வ­னங்­கள் அத­னால் எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டும் என்­றும் கூறி­னார்.

பிணை­நி­ரல் குற்­ற­வா­ளி­கள் சந்­தர்ப்­ப­வா­தி­க­ளா­க­வும் ­நவீன தொழில்­நுட்­பங்­களை அறிந்­த­வர்­களா­க­வும் இருக்­க­லாம் என்று, தேசிய பாது­காப்பு ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான திரு டியோ சொன்­னார்.

கணி­னிக் கட்­ட­மைப்­புக்­குள் ஊடு­ருவி, அவற்றை முடக்கி, பணம் கொடுத்­தால் மட்­டுமே அவற்றை விடு­விக்க முடி­யும் என்று பிணை­நி­ரல் குற்­ற­வா­ளி­கள் மிரட்­டு­வர்.

"அவர்­கள், நிறு­வ­னங்­க­ளின் கணி­னிக் கட்­ட­மைப்­புக்­குள் ஊடு­ருவி, தர­வு­க­ளைப் பெற அவற்­றின் மோச­மான இணை­யப் பாது­காப்பு நடை­மு­றை­க­ளைச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக்­கொள்­கின்­றனர். பாதிக்­கப்­பட்ட நிறு­வ­னங்­கள் பெரும்­பா­லும் அது­பற்றி புகா­ர­ளிக்­கா­மல், தங்­களை மிரட்டு­வோர் கேட்­கும் பணத்­தைக் கொடுத்­து­விட்டு, அதனை மறைத்து­வி­டவே விரும்­பு­கின்­றன. சட்ட அம­லாக்­கத்­தி­லி­ருந்து தப்­பிக்க அதி­கார வரம்­பு­க­ளுக்­குள் இடை­யி­லுள்ள இடை­வெ­ளி­களை அவை சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக்­கொள்­கின்­றன," என்று தொடக்க உரையை ஆற்­றி­ய­போது திரு டியோ தெரி­வித்­தார்.

புதிய 'பிணை­நி­ரல் எதிர்ப்­புப் பணிக்­குழு' அந்த இடை­வெ­ளியை இணைக்க இலக்கு கொண்­டு உள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் 2020-2021 கால­கட்­டத்­தில் பிணை­நி­ரல் தாக்­குதல்­க­ளின் எண்­ணிக்கை 54% அதிகரித்துவிட்­ட­தாக சிங்­கப்­பூர் இணையப் பாது­காப்பு அமைப்பு தெரி­வித்­தது.

இணை­யப் பாது­காப்பு அமைப்பு, 'கவ்­டெக்' எனப்­படும் அர­சாங்­கத் தொழில்­நுட்ப அமைப்பு, தக­வல் தொழில்­நுட்ப, ஊடக மேம்­பாட்டு ஆணை­யம், தொடர்பு, தக­வல் அமைச்சு, தற்­காப்பு அமைச்சு, உள்­துறை அமைச்சு, சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம், சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை, சிங்­கப்­பூர் காவல்­படை ஆகி­ய­வற்­றின் மூத்த அதி­கா­ரி­கள் அந்­தப் பணிக்­கு­ழு­வில் இடம்­பெற்­றுள்­ள­னர்.

போக்­கு­வ­ரத்து, சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, எரி­சக்தி உள்­ளிட்ட இன்­றி­ய­மை­யாத சேவை­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­கும் அதிமுக்­கி­யத் தக­வல் உட்­கட்­ட­மைப்­பைப் பாது­காக்­கும் இணை­யப் பாது­காப்பு அமைப்­பின் நோக்க வரம்­பைப் பணிக்­குழு விரி­வு­ப­டுத்­து­கிறது.

புதிய அச்­சு­றுத்­தல்­க­ளைக் கண்­ட­றி­தல், மோச­டிப் பணப் பரி­மாற்­றத்­தைத் தடுத்து நிறுத்­து­தல், பிணை­நி­ரல் தாக்­கு­தல்­க­ளின் பின்­ன­ணி­யில் இருப்­ப­வர்­க­ளைக் கைது­செய்­தல் போன்­றவை தொடர்­பில் வெளி­நா­டு­க­ளு­டன் இணைந்து அணுக்­க­மா­கப் பணி­ ஆற்­று­வது குறித்து புதிய பணிக்­குழு ஆரா­யும்.

பிணை­நி­ரல் அச்­சு­றுத்­தலை எதிர்­கொள்­வ­தில் சிங்­கப்­பூ­ரின் திறனை மேம்­ப­டுத்­தும் நோக்­கில் கொள்­கை­க­ளை­யும் செயல்­திட்­டங்­க­ளை­யும் நட­வ­டிக்­கை­க­ளை­யும் அப்­ப­ணிக்­குழு உரு­வாக்கி, பரிந்­து­ரைக்­கும் என்று இணை­யப் பாது­காப்பு அமைப்பு தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ரின் இணை­யத் தற்­காப்­பா­னது, தொலைத்­தொ­டர்பு வன்­பொ­ருள்­கள் மற்­றும் கம்­பி­வடங்­கள், சிங்­பாஸ், பேநவ் போன்ற மென்­பொ­ருள்­கள், இன்­றி­மை­யாத சேவை­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­கும் அதி­முக்­கி­யத் தக­வல் உள்­கட்­ட­மைப்பு, தனி­மனிதப் பயன்­பாட்­டுக் கரு­வி­கள் ஆகிய நான்­கை­யும் உள்­ள­டக்­கும் என்று மூத்த அமைச்­சர் டியோ விவ­ரித்­தார்.

முன்­ன­தாக, நேற்று முன்­தி­னம் புதி­ய­தொரு இணை­ய­நல இணை­ய­வா­யில் அறி­விக்­கப்­பட்­டது. தங்­க­ளது இணை­யத்­த­ளங்­கள், பய­னா­ளர்­க­ளுக்கு எந்த அள­விற்­குப் பாது­காப்­பாக உள்­ளன என நிறு­வ­னங்­கள் மதிப்­பி­டு­வ­தற்கு அந்த இணை­ய­வா­யில் உத­வும்.

'ஆசியாவில் அதிக அச்சுறுத்தல்'

இதற்­கி­டையே, அமெ­ரிக்­கா­வி­லும் ஆசி­யா­வி­லும் இணை­யப் பாது­காப்பு அச்­சு­றுத்­தல்­கள் அதி­க­ரித்து வரு­வ­தாக அமெ­ரிக்க உள்­நாட்­டுப் பாது­காப்பு அமைச்­சர் அலெ­ஹாண்ட்ரோ மயோர்க்­காஸ் தெரி­வித்­துள்­ளார்.

ரஷ்யா, சீனா, வட­கொ­ரியா, ஈரான் ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­கள் குறித்து திரு மயோர்க்­காஸ் எச்­ச­ரித்து இருக்­கி­றார்.

"சீனா­வில் இடம்­பெ­றும் தீங்கு நட­வ­டிக்­கை­கள், அமெ­ரிக்­கா­விற்கு மட்­டு­மல்ல, மற்ற நாடு­க­ளுக்­கும் உண்­மை­யான அச்­சு­றுத்­த­லாக விளங்­கு­கின்­றன. அத­னால்­தான் நான் இவ்­வ­ளவு தொலைவு பய­ணம் செய்து, சிங்கப்­பூர் வந்­துள்­ளேன்," என்று புளூம்­பெர்க் செய்தி நிறு­வ­னத்­திற்கு அளித்த நேர்­கா­ண­லின்­போது அவர் கூறி­னார்.