தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா: 36 வயதுப் பெண்ணுக்கும் நான்கு வயதுச் சிறுமிக்கும் நேர்ந்த பாலியல் கொடூரம்

2 mins read

பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண்ணைக் கடத்திச் சென்ற கும்பல்; பள்ளி முதல்வரின் அறைக்கு எதிரிலேயே சிறுமி சீரழிப்பு

இந்­தி­யா­வில் நிகழ்ந்த இரு­வேறு பாலி­யல் வன்­கொ­டு­மைச் சம்­ப­வங்­கள் பேர­திர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளன.

டெல்­லி­யைச் சேர்ந்த 36 வய­துப் பெண் ஒரு­வரை காஸி­யா­பாத்­தில் கடத்­திய ஐவர் கும்­பல், அவரை இரண்டு நாள்­க­ளா­கக் கூட்­டுப் பாலி­யல் வன்­கொ­டு­மைக்­குட்­ப­டுத்­தி­யது.

அத்­து­டன், அவ­ரது பிறப்­பு­றுப்­பில் இரும்­புக் கம்­பி­யைச் செருகி, ரத்த வெள்­ளத்­து­டன் அவ­ரைச் சாக்கு மூட்­டை­யில் கட்டி, சாலை­ ஓ­ர­மாக வீசி­விட்­டுச் சென்­றது.

பிறந்­த­நாள் விழா­வில் கலந்­து­கொள்­வ­தற்­காக காஸி­யா­பாத் சென்­றி­ருந்த அப்­பெண், பின்­னர் டெல்லி திரும்­பு­வ­தற்­காக அங்­குள்ள பேருந்து நிலை­யத்­தில் காத்­தி­ருந்­தார்.

அப்­போது, காரில் வந்த ஒரு கும்­பல், அவரை ஆள­ர­வ­மற்ற இடத்­திற்­குக் கடத்­திச் சென்று, வன்­பு­ணர்வு செய்­த­தா­கக் கூறப்­படு­கிறது.

அந்த ஐவ­ரை­யும் அப்­பெண்­ணுக்கு முன்­னரே தெரி­யும் என்­றும் சொல்­லப்­பட்­டது. அவர்­களில் நால்­வ­ரைக் கைது­செய்­து­விட்­ட­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

"சொத்­துப் பிரச்­சினை கார­ண­மாக இந்­தக் குற்­றம் அரங்­கே­றி­உள்­ளது," என்று காஸி­யா­பாத் காவல்­து­றைக் கண்­கா­ணிப்­பா­ளர் நிபுன் அகர்­வால் கூறி­னார்.

அந்­தப் பெண் கடு­மை­யாக துன்­பு­றுத்­தப்­பட்­ட­தா­க­வும் அவ­ரது உடல்­நிலை மோச­மாக இருப்­ப­தா­க­வும் டெல்லி மக­ளிர் ஆணை­யத்­தின் தலை­வர் சுவாதி மலி­வால் முன்­ன­தாக 'டுவீட்' செய்­தி­ருந்­தார்.

பள்ளி முதல்­வ­ரின் ஓட்­டு­நர் கைது

இதற்­கி­டையே, தெலுங்­கா­னா­வின் ஹைத­ரா­பாத் நக­ரில் நான்கே வய­தான சிறு­மியை, ஆட­வர் ஒரு­வர் இரண்டு மாதங்­க­ளா­கப் பாலி­யல் கொடு­மைக்­குள்­ளாக்­கி­யது வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளது.

அந்த ஆட­வர், 'பிஎஸ்டி டிஏவி பொதுப் பள்ளி' என்ற கல்வி நிலைய முதல்­வ­ரின் ஓட்­டு­நர் எனக் கூறப்­பட்­டது.

அவன் கடந்த திங்­கட்­கி­ழமை பள்­ளி­யில் முதல்­வ­ரின் அறைக்கு எதிரே இருக்­கும் ஆய்­வுக்­கூ­டத்­திற்­குள் அச்­சி­று­மியைப் பாலியல் வன்­கொடு­மைக்கு உள்­ளாக்­கி­ய­தா­க­வும் பின்­னர் அவள் கழுத்தை நெரித்­த­படி, எவ­ரி­ட­மும் சொல்­லக்­கூ­டாது என மிரட்­டி­ய­தா­க­வும் சொல்­லப்­பட்­டது.

இரு மாதங்­க­ளா­கவே தங்­கள் மகள் ஒரு மாதி­ரி­யாக இருப்­பதை அவ­ளின் பெற்­றோர் கண்­ட­னர். கடந்த திங்­கட்­கி­ழமை அச்சிறுமி­யின் தாயார், தன் மகளிடம் வற்­பு­றுத்­திக் கேட்­கவே, அவள் நடந்­த­தைக் கூறி­னாள்.

மறு­நாள் செவ்­வாய்க்­கி­ழமை பள்­ளிக்கு அழைத்­துச் சென்­ற­போது ரஜி­னி­கு­மார் என்ற அந்த ஆட­வரை அவள் அடை­யா­ளம் காட்­டி­னாள். அத­னைத் தொடர்ந்து காவல்துறை­யி­டம் அவ­ளின் பெற்­றோர் புகா­ர­ளிக்க, அன்றே ரஜினி­கு­மார் கைது­செய்­யப்­பட்­டான்.

அவன்­மீது மற்ற குழந்­தை­களின் பெற்­றோ­ரும் பள்ளி முதல்­வரி­டம் இதற்­கு­முன் புகார் அளித்­தி­ருப்­ப­தாக காவல்­துறை தெரி­வித்­தது. அத­னால், வேறு எவ­ரை­யும் அவன் பாலி­யல் ரீதி­யா­கத் துன்­பு­றுத்­தி­னானா என்று காவல்­துறை விசா­ரித்து வரு­கிறது.

ரஜி­னி­யைக் கைது­செய்­த­போது மற்ற குழந்­தை­க­ளின் பெற்­றோர்­அவ­னுக்­குச் சர­மா­ரி­யா­கக் குத்து விட்­ட­னர். அவ­னுக்­குக் கடு­மை­யான தண்­டனை வழங்­கப்­பட வேண்­டும் என்­றும் அவர்­கள் முழக்­க­மிட்­ட­னர்.