பள்ளிப் பாதுகாவலர்மீது காரை ஏற்றப்போவதாக மிரட்டியவருக்கு எட்டு வாரம் சிறை, அபராதம்

பள்ளிப் பாதுகாவலர்மீது காரை ஏற்றப்போவதாக மிரட்டியவருக்கு எட்டு வாரம் சிறை, அபராதம்

2 mins read
4389cc1a-d1ff-4634-9082-291748fd4090
பாதுகாவலர்மீது தமது பென்ட்லி காரை மோதவிட்ட 61 வயது நியோ ஹோங் சாய் 12 மாதங்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவும் முடியாது. படங்கள்: காணொளிப்படம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

ரெட் ஸ்வாஸ்­திகா பள்­ளிக்கு வெளியே 62 வயது பாது­கா­வ­லர்­மீது காரை ஏற்­றி­வி­டு­வ­தாக மிரட்­டிய பென்ட்லி கார் ஓட்­டு­ந­ருக்கு எட்டு வாரச் சிறைத் தண்­ட­னை­யும் $600 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது.

நியோ ஹோங் சாய், 61, என்ற இந்த ஆட­வர், 12 மாதங்­க­ளுக்கு அனைத்­து­வகை வாகன ஓட்­டு­நர் உரி­மங்­களை வைத்­தி­ருக்­க­வும் தகுதி­நீக்­கம் செய்­யப்­பட்­டார்.

கண்­மூ­டித்­த­ன­மாக நடந்­து­கொண்டு, இன்­னொ­ரு­வ­ரைக் காயப்­ப­டுத்­திய குற்­றத்தை நியோ நீதி­மன்­றத்­தில் நேற்று ஒப்­புக்­கொண்­டார். அதற்­காக, அவ­ருக்­குச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

அத்­து­டன், காப்­பு­றுதி இல்­லா­மல் வாக­னத்தை ஓட்­டிய குற்­றச்­சாட்­டை­யும் இவர் ஒப்­புக்­கொண்­டார்.

இவ்­வாண்டு ஜன­வரி 11ஆம் தேதி தம் பேத்­தியை காரில் ஏற்­றிக்கொண்டு, அப்­பள்­ளிக்­குச் சென்­றார் நியோ. பள்­ளிக்­குள் செல்­வ­தற்­காக சாலை­யின் இடது தடத்­தில் தமக்கு முன்னே பல கார்­கள் நின்று இருந்­த­போ­தும், அவற்­றை­யெல்­லாம் முந்­திக்­கொண்டு இரண்­டா­வது தடத்­தி­லி­ருந்து பள்­ளிக்­குள் செல்ல முற்­பட்­டார் நியோ.

ஆனால், நுழை­வா­யி­லில் நின்று இருந்த பாது­கா­வ­லர் அவ­ரைத் தடுத்து நிறுத்தி, பக்­க­வா­யில் வழி­யா­கச் செல்­லும்­படி அவரை அறி­வு­றுத்­தி­னார்.

ஆனா­லும் அதற்­குச் செவி­சாய்க்­காத நியோ, தமது காரை சற்று முன்னே செலுத்தி அந்­தப் பாது­கா­வ­லர்­மீது மோதச் செய்­தார்.

பின்­னர் காரி­லி­ருந்து இறங்­கிய நியோ, தான் ஏன் அவ்­வ­ழியே நுழை­யக்­கூ­டாது என்று கேட்­டார்.

அதற்கு, அவர் வரி­சை­யில் வர­வில்லை என்ற அப்­பா­து­கா­வ­லர், பக்­க­வா­யில் வழி­யா­கச் செல்­லும்­படி மீண்­டும் அவ­ரி­டம் அறி­வு­றுத்­தி­னார். அத­னை­ய­டுத்து, தமது காரில் ஏறிய நியோ, முன்­னால் நின்­றி­ருந்த அப்­பா­து­கா­வ­லர்­மீது மீண்­டும் காரால் இடித்­த­தா­கச் சொல்­லப்­பட்­டது. அத­னால் அப்­பா­து­கா­வ­லர் பின்­னோக்­கித் தடு­மா­றி­னார்.

பின்­னர் அவர் ஒதுங்­கிக்­கொள்ள, நியோ பள்ளி வளா­கத்­திற்­குள் சென்­றார்.

கார் இடித்­த­தால் அந்­தப் பாது­கா­வ­ல­ருக்கு முழங்­கா­லில் நசிவு ஏற்­பட்­ட­தா­க­வும் அத­னால் அவர் மூன்று நாள்­கள் மருத்­துவ விடுப்­பில் இருக்க நேர்ந்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

அப்­பா­து­கா­வ­லர் மற்­றும் சுற்­றி­ இருந்த நடை­யர்­க­ளின் பாது­காப்பை அலட்­சி­யப்­ப­டுத்­தும் வகை­யில் நியோ கண்­மூ­டித்­த­ன­மா­க­வும் போர்க்­குணத்­து­ட­னும் நடந்­து­கொண்­ட­தாக அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞர் வாதிட்­டார்.

ஆனால், அந்­தச் சம்­ப­வத்­திற்­காக தமது கட்­சிக்­கா­ரர் வருந்­து­கி­றார் என்­றும் அதன்­பி­றகு ஒரு­நாள்­கூட அவர் நிம்­ம­தி­யாக உறங்­க­வில்லை என்­றும் நியோ சார்­பில் முன்­னி­லை­யான வழக்­க­றி­ஞர் ஜான் லிம் தெரி­வித்­தார்.

அத்­து­டன், நியோ முதன்­மு­றை­யா­கத் தம் பேத்­தியை அழைத்­துக்­கொண்டு பள்ளிக்குச் சென்றதால், அவ்வழி குறித்து அவர் சரியாக அறிந்திருக்கவில்லை என்றும் திரு லிம் சொன்னார்.

மகன்­மீ­தும் குற்­றச்­சாட்டு

இதற்­கி­டையே, தமது பென்ட்லி காரின் உரி­மத் தகட்டு எண்ணை மாற்றி, காப்­பு­றுதி இல்­லா­மல் தம் தந்­தையை வாக­ன­மோட்ட அனு­ம­தித்­த­தாக நியோ­வின் மகன் கிளின் நியோ ஜியா, 28, மீது கடந்த மே மாதம் நீதி­மன்­றத்­தில் குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

ஆனால், புகைப்­ப­டம் எடுக்­கும் நோக்­கங்­க­ளுக்­காக தமது காரின் உரிம எண்ணை ஜியா மாற்­றி­னார் என்று நீதி­மன்­றத்­தில் நேற்று தெரி­விக்­கப்­பட்­டது. அவர்­மீ­தான வழக்கு இன்­னும் நிலு­வை­யில் இருக்­கிறது.