திருமணம்: பாதுகாக்க சட்டத்திருத்தம் 377A சட்டத்தை ரத்துசெய்ய நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்

திருமணம்: பாதுகாக்க சட்டத்திருத்தம் 377A சட்டத்தை ரத்துசெய்ய நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்

3 mins read

குற்றவியல் சட்டப் பிரிவு 377Aஐ ரத்­து­ செய்­வ­தற்­கான ஒரு மசோதா நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்­டது. ஆண்­க­ளுக்­கி­டை­யில் பாலி­யல் உறவு கொள்­வதை அந்­தப் பிரிவு குற்­றம் என்று வரை­யறுக்கிறது. கால­னித்­துவ காலத்­தி­லி­ருந்து நடப்­பி­லி­ருந்து வரும் ஒரு நடை­முறை இதன்­மூ­லம் முடி­வுக்கு வரு­கிறது.

அதே­நே­ரத்­தில் திரு­ம­ணம் என்­பதை வரை­ய­றுக்க இப்­போது நடப்­பில் இருக்­கும் வரை­முறையைப் பாது­காக்­க­வும், இதன் அடிப்­ப­டை­யில் உரு­வாக்­கப்­பட்­டுள்ள அர­சாங்­கக் கொள்­கை­கள் நீதி­மன்­றத்­தில் எதிர்க்கப்படுவதில் இருந்து பாது­காக்­க­வும் அர­ச­மைப்­புச் சட்­டத்­தில் மாற்­றம் செய்­வதற்­கான மசோ­தா­வும் நேற்று மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்­டது.

வரும் நவம்­பர் 28ஆம் தேதி நாடா­ளு­மன்­றம் கூடும்­போது இந்த இரு மசோ­தாக்­களும் ஒன்­றாக விவா­திக்­கப்­படும். பின்­னர் இரு மசோ­தாக்­கள் மீதும் தனித்­த­னி­யாக வாக்­க­ளிப்பு இடம்­பெ­றும்.

ஏனெ­னில், ஒரு சட்­டத்தை ரத்து செய்ய குறைவான பெரும்­பான்மை போதும். அதே நேரத்­தில் அர­சி­ய­ல­மைப்­பில் எந்­த­வொரு திருத்­தத்தை மேற்­கொள்­ள­வும் நிய­மன உறுப்­பி­னர்­க­ளைத் தவிர்த்த நாடா­ளு­மன்ற உறுப்­பினர்­களில் குறைந்­தது மூன்­றில் இரண்டு பங்­கி­ன­ரின் ஆத­ரவு வேண்­டும்.

ஓரி­னச் சேர்க்கை தொடர்­பான மனப்­போக்கு மாறி­விட்­ட­தால் சிங்­கப்­பூ­ரில் 377A சட்­டப் பிரிவு நீக்­கப்­படும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணி உரை­யில் அறி­வித்­ததை அடுத்து, சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் நாடாளு­மன்­றத்­தில் குற்­ற­வி­யல் சட்­டத் திருத்த மசோ­தா­வைத் தாக்­கல் செய்­தார்.

377A பிரிவு தொடர்­பாக நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொட­ரப்­பட்­டால் அது அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­துக்கு எதி­ரான ஒன்று எனக்­கூறி நிரா­க­ரிக்­கும் அபா­யம் உள்­ளது. அத்­து­டன், அனை­வருக்­கும் சம­மான பாது­காப்பு அளிக்­கப்­பட வேண்­டும் என அர­சி­ய­லை­மைப்­புச் சட்­டப் பிரிவு 12க்கு எதி­ரா­னது என்று கூற­வும் வாய்ப்­புள்­ளது என்று பிர­த­மர் அப்­போது குறிப்­பிட்­டார்.

மேலும், 377A பிரிவு மீட்­டுக்­கொள்­ளப்­ப­டு­வ­தால் சமு­தாய நடை­மு­றை­களில் பெரிய மாற்றங்­கள் ஏற்­ப­டு­வதை பெரும்­பா­லான சிங்­கப்­பூ­ரர்­கள் விரும்­ப­வில்லை என்­பதை அர­சாங்­கம் பொது­மக்­க­ளு­டன் மேற்­கொண்ட ஆலோசனை­களில் தெரி­ய­வந்­ததாக பிர­த­மர் கூறி­னார். திரு­ம­ணம் என்­ப­தன் வரை­யறை, பள்­ளி­களில் என்ன கற்­பிக்­கப்­ப­டு­கிறது என்­பன உள்­ளிட்டவை இந்த ஆலோ­ச­னை­களில் இடம்­பெற்­றன.

அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் என்­பது நாட்­டின் மிக உயர்ந்த சட்­டம் என்­ப­தால், நாடா­ளு­மன்­றத்­தில் இயற்­றப்­படும் எந்­த­வொரு சட்­ட­மும் அதற்கு முர­ணாக இருந்­தால் நீதி­மன்­றங்­கள் அதை நிரா­க­ரித்து விடும்.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி தாக்­கல் செய்த மசோதா திரு­மணம் என்­பதை வரை­ய­றைக்­கும் வகை­யில், அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத் திருத்­த­மாக புதிய அர­சி­யல் சட்­டப்­பி­ரிவு 156ஐ (திரு­ம­ணம் எனும் வழக்­க­முறை) அறி­மு­கப்­படுத்­தும். இந்த வரை­ய­றை­யின் அடிப்­படை­யில் நாடா­ளு­மன்­றம் திரு­மணம் என்­பதை வரை­ய­றுப்­ப­து­டன், குடும்­பம் தொடர்­பான சட்­டங்­களை வகுக்­க­லாம் என்று மசோதா குறிப்­பி­டு­கிறது.

அர­சாங்­க­மும் பொதுத்­துறை அதி­கா­ரி­களும் திரு­ம­ணத்­தைப் பாது­காக்­கும், ஆத­ரிக்­கும், ஊக்கு­விக்­கும் கொள்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்­தலாம் என்­றும் உத்­தே­சத் திருத்­தங்­கள் கூறுகின்­றன.

இந்த திருத்­த­மா­னது ஆணுக்­கும் பெண்­ணுக்­கும் இடை­யி­லான பந்­த­மாக திரு­ம­ணத்தை வரை­யறுக்­கும் தற்­போ­துள்ள சட்­டங்­களை­யும் அது தொடர்­பான கொள்­கை­க­ளை­யும் பாது­காக்­கிறது. மேலும் அர­சி­ய­ல­மைப்­பில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள அடிப்­படை உரி­மை­க­ளான பிரிவு 12 போன்­ற­வற்றை அவை மீறு­வ­தாக நீதி­மன்­றங்­கள் நிரா­க­ரிப்­ப­தி­லி­ருந்­தும் தடுக்­கிறது.

எடுத்­துக்­காட்­டாக பொது வீடமைப்பு, திரு­ம­ண­மான தம்­ப­தி­கள் நிதி நன்­மை­க­ளைப் பெறு­வது, திரு­ம­ணத்தை ஊக்­கு­வித்து பாது­காக்­கும் கல்வி மற்றும் ஊட­கக் கொள்­கை­கள் போன்­றவை இத்­த­கைய கொள்­கை­கள் என மசோ­தாக்­கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பின்­னர் உள்­துறை அமைச்­சும் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சும் ஒரு கூட்­ட­றிக்கை மூலம் தெரி­வித்­தன.

இந்­தத் திருத்­தம் நிறை­வே­றி­னால் திரு­ம­ணம் என்­ப­தன் வரை­ய­றை­யி­லும் அதன் அடிப்­ப­டை­யில் வகுக்­கப்­பட்ட சட்­டங்­க­ளி­லும் நாடா­ளு­மன்­றத்­தின் மூலமே மாற்றம் செய்ய முடி­யும், நீதி­மன்­றங்­கள் மூலம் அல்ல என்­றும் அறிக்கை குறிப்­பிட்­டது. மேலும், இந்த மசோ­தா­வா­னது திரு­ம­ணத்­தின் வரை­ய­றையை அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தில் ஒரு பிரி­வாக்­க­வில்லை என்­றும் அது சுட்­டி­யது.

சட்­டப் பிரிவு 377Aஐ ரத்து செய்­வது குறித்த நாடா­ளு­மன்ற வாக்­க­ளிப்­பின்­போது மக்­கள் செயல் கட்சி கொற­டாவை அகற்றாது என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் முன்பு கூறி­யிருந்­தார். அதா­வது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கட்­சி­யின் நிலைப்­பாட்­டின்­படி வாக்­க­ளிக்க வேண்டும்.

அதை­ய­டுத்து, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தங்­கள் விருப்­பப்­படி சுதந்­தி­ர­மாக வாக்­க­ளிக்க கொறடா அகற்­றப்­பட வேண்­டும் என்ற சில பிரி­வி­னர் கேட்­ட­னர்.

சட்­டத்தை ரத்து செய்­வது பொதுக் கொள்கை விவ­கா­ரம். "இந்­தச் சட்­டம் ரத்து செய்­யப்­படு­கிறது என்­றா­லும் அது மேலும் சமூக மாற்­றங்­க­ளைத் தூண்­டி­விடாது இருப்­பதை உறு­திப்­ப­டுத்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கி­றோம்," என்று அவர் அப்­போது கூறி­யி­ருந்­தார்.