மலேசியப் பொதுத் தேர்தலில் வாக்களிக்க உயர்கல்வி மாணவர்களுக்கு 5 நாள் விடுப்பு

மலேசியப் பொதுத் தேர்தலில் வாக்களிக்க உயர்கல்வி மாணவர்களுக்கு 5 நாள் விடுப்பு

2 mins read

மலே­சி­யா­வில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடை­பெ­றும் 15ஆவது பொதுத் தேர்­த­லில் வாக்­க­ளிக்க ஏது­வாக, உயர்­கல்வி நிலை­யங்­களில் பயி­லும் மாண­வர்­க­ளுக்கு ஐந்து நாள் விடு­முறை அளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

மலே­சிய உயர்­கல்வி அமைச்சு இதற்கு இணங்­கி­யி­ருப்­ப­தாக பெர்­னாமா செய்தி நிறு­வ­னம் தக­வல் வெளி­யிட்­டுள்­ளது.

அரசு, தனி­யார் என இரு­த­ரப்பு உயர்­கல்வி நிலை­யங்­க­ளுக்­கும் இது பொருந்­தும். இது­கு­றித்து பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­கள், சமூ­கக் கல்­லூ­ரி­கள் உள்­ளிட்ட அனைத்து உயர்­கல்வி நிலை­யங்­க­ளுக்­கும் சுற்­ற­றிக்கை அனுப்­பப்­பட்­டி­ருப்­ப­தாக மலே­சிய உயர்­கல்­வித் துறை தலைமை இயக்­கு­நர் ஹுசைனி ஒமார் உறு­தி­செய்­தார்.

'உண்டி18' இயக்­கத்­தின் அடிப்­ப­டை­யில் உயர்­கல்வி மாண­வர்­கள் தங்­கள் சொந்த ஊர்­க­ளுக்­குச் சென்று வாக்­க­ளிக்க ஏது­வாக இத்­த­கைய ஏற்­பாடு செய்­யப்­பட்டு இருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

'உண்டி18' என்­பது மலே­சி­யா­வில் வாக்­க­ளிப்பு வயதை 21லிருந்து 18க்குக் குறைப்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­பட்ட இயக்­கம். அந்­நாட்­டில் தானி­யக்க வாக்­கா­ளர் பதி­வு­முறை நடப்­பில் உள்­ளது.

எனவே, 18 முதல் 20 வய­தான இளை­யர்­கள் இவ்­வாண்­டுப் பொதுத் தேர்­த­லில் முதல்­மு­றை­யாக வாக்­க­ளிக்­க­வுள்­ளனர்.

உயர்­கல்­வித் துறை­யின் சுற்­ற­றிக்­கை­யில், அடுத்த மாதம் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதிவரை மாண­வர்­க­ளுக்கு விடுப்பு அளிக்­கும்­படி உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. அவர்­கள் சொந்த ஊர்­க­ளுக்­குச் சென்று வாக்­க­ளித்­துத் திரும்­பு­வதற்கு இந்த கால அவ­கா­சம் போது­மா­ன­தா­யி­ருக்­கும் என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த ஐந்து நாள்­களில் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த அனைத்து வகுப்­பு­களும் நட­வ­டிக்­கை­களும் வேறு தேதிக்கு மாற்­றப்­படும் என்­றும் நேற்று முன்­தி­னம் தேதி­யி­டப்­பட்ட சுற்­ற­றிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

இவ்­வே­ளை­யில், வாக்­க­ளிப்பு நாளான அடுத்த மாதம் 19ஆம் தேதி, வர்த்­தக நிறு­வ­னங்­கள் அவற்­றின் ஊழி­யர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க நேரம் ஒதுக்­கித் தரும்­படி வணி­கக் குழு­மங்­கள் முத­லா­ளி­க­ளி­டம் கோரிக்கை விடுத்­துள்­ளன.

சட்­ட­ரீ­தி­யாக ஊழி­யர்­கள் வாக்­க­ளிப்­ப­தற்கு நேரம் வகுத்­துத் தரும்­படி நிறு­வ­னங்­க­ளுக்கு அறி­வு­றுத்­த­வி­ருப்­ப­தாக மலே­சிய உற்­பத்­தி­யா­ளர் கூட்­ட­மைப்­பின் தலை­வர் சோ தியன் லாய் கூறி­உள்­ளார்.

மலே­சி­யா­வில் தேர்­தல் குற்­றங்­கள் தொடர்­பான சட்­டத்­தின்­கீழ், ஒவ்­வொரு நிறு­வ­ன­மும் அதன் ஊழி­யர்­கள் தேர்­த­லில் வாக்­க­ளிக்­கத் தேவைப்­படும் நேரத்தை ஒதுக்­கித் தரு­வது கட்­டா­யம். இதற்கு ஈடாக ஊழி­ய­ரின் சம்­ப­ளத்­தைக் குறைப்­பதோ வாக்­க­ளிக்­கத் தேவையான நேரத்­தில், பணி­யாற்­றா­மைக்­காக அப­ரா­தம் விதிப்­பதோ கூடாது என்­பதை அவர் சுட்­டி­னார்.

இம்­மா­தம் 18ஆம் தேதி மலே­சிய மனி­த­வள அமைச்­சர் எம். சர­வ­ணன், "வாக்­க­ளிப்பு நாள் வேலை­நா­ளாக இருப்­பின் ஊழி­யர்­கள் வாக்­க­ளிக்க உத­வும் வகை­யில் விடுப்பு அளிப்­பது அல்­லது நேரம் ஒதுக்­கித் தரு­வது அவ­சி­யம்," என்று கூறி­யி­ருந்­தார்.

அர­சாங்கத்தின் இந்த ­வி­தி­மு­றையை மீறும் நிறு­வ­னங்­கள்­மீது நட­வடிக்கை எடுக்­கப்­படும் என்­றா­ர் அ­வர்.