நவம்பர் நடுப்பகுதிக்கு முன்னரே உச்சம் தொடலாம்

நவம்பர் நடுப்பகுதிக்கு முன்னரே உச்சம் தொடலாம்

2 mins read

'எக்ஸ்பிபி' கொவிட்-19 அலை குறித்து சுகாதார அமைச்சர் ஓங் யி காங்

'எக்ஸ்­பிபி' கொவிட்-19 தொற்று அலை நவம்­பர் நடுப்­ப­கு­திக்கு முன்­னரே உச்­சத்­தைத் தொடக்­கூ­டும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார்.

செம்­ப­வாங் குழுத்­தொ­கு­தி­யில் நேற்று நடை­பெற்ற சமூக நிகழ்ச்­சி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், "கடந்த வாரத்­தி­லி­ருந்து தொற்று எண்­ணிக்கை குறை­யத் தொடங்­கி­விட்­டது என்­பது தெளி­வா­கத் தெரி­கிறது," என்­றார்.

தொற்று தொடர்ந்து குறைந்­தால், 'எக்ஸ்­பிபி' அலை எதிர்­பார்க்­கப்­பட்­ட­தை­விட முன்­கூட்­டியே உச்­சம் தொட்­டு­விட்­டது என அர்த்­த­மா­கும் என்று திரு ஓங் கூறி­னார்.

தற்­போது சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்­றுப் பர­வ­லுக்கு 'எக்ஸ்­பிபி' வகை ஓமிக்­ரான் துணைத் திரிபே கார­ணம் என்று சுகா­தார அமைச்சு அக்­டோ­பர் 15ஆம் தேதி தெரி­வித்­தி­ருந்­தது.

'எக்ஸ்­பிபி' அலை நவம்­பர் நடுப்­ப­கு­தி­வாக்­கில் உச்­சம் தொடும் என தான் எதிர்­பார்ப்­பதாக அமைச்சு அப்­போது கூறி­ இருந்­தது.

புக்­கிட் கேன்­பரா ஒருங்­கிணைந்த விளை­யாட்டு, சமூக நடு­வத்­தில் உள்­புற விளை­யாட்டு மண்­ட­பத்­தின் தொடக்க நிகழ்ச்சி­யில் கலந்­து­கொண்ட பிறகு செய்தி­யா­ளர்­க­ளி­டம் திரு ஓங் பேசி­னார்.

பொது மருத்­து­வ­ம­னை­க­ளின் அவ­சர சிகிச்­சைப் பிரி­வு­களில் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மாக இருந்து வரு­வது குறித்த மற்­றொரு கேள்­விக்­கும் திரு ஓங் பதி­ல­ளித்­தார். இவ்­வாண்டு தொடக்­கத்­தில் இருந்தே அவ­சர சிகிச்­சைப் பிரி­வு­கள் பர­பரப்­பாக இருந்து வரு­வ­தா­கச் சொன்ன அவர், கொவிட்-19 அலை வீசும்­போது நில­வ­ரம் மோச­ம­டை­வ­தா­கக் கூறி­னார்.

எனி­னும், அவ­சர சிகிச்­சைப் பிரி­வு­களில் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்க கொவிட்-19 நோயா­ளி­கள் கார­ண­மல்ல என்­பதை திரு ஓங் தெளி­வு­ப­டுத்­தி­னார்.

"அவ­சர சிகிச்­சைப் பிரி­வு­கள் அதி­க­மான கொவிட்-19 நோயா­ளி­க­ளைப் பார்க்­க­வில்லை. மாறாக, வழக்­க­மான நோயா­ளி­களையே அவை பார்க்­கின்­றன," என்­றார் அவர்.

என்­றா­லும், தொற்று அலை வீசும்­போ­தும் கொவிட்-19 நோயா­ளி­க­ளால் கூடு­த­லான படுக்­கைப் பிரி­வு­கள் நிரப்­பப்­ப­டு­கின்­றன. இத­னால் மற்ற நோயா­ளி­க­ளுக்குப் படுக்­கை­கள் ஒதுக்­கப்­ப­டு­வது கடி­ன­மா­வ­தாக திரு ஓங் குறிப்­பிட்­டார். அவ­சர சிகிச்­சைப் பிரி­வு­களில் நெருக்­க­டி­யைச் சமா­ளிக்­க­வும் நோயா­ளி­க­ளைப் பரா­ம­ரிக்க போது­மான வளங்­களும் ஆள்­பலமும் இருப்­பதை உறு­தி­செய்­ய­வும் மருத்­து­வ­ம­னை­க­ளு­டன் சேர்ந்து சுகா­தார அமைச்சு பணி­யாற்றி வரு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

தற்­போ­தைய தொற்று அலை ஓய்ந்த பிற­கும், பாது­காப்­புக்­காக மக்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்று திரு ஓங் வலி­யு­றுத்­தி­னார்.

மூத்­தோர் இரு­வகை திறன் கொண்ட தடுப்­பூ­சியை ஏன் போட்டுக்­கொள்ள வேண்­டும் என்ற கேள்­விக்­கும் அவர் பதி­ல் அளித்­தார். இரு­வகை திறன் உடைய தடுப்­பூ­சி­கள், தற்­போது பர­வி­வரும் ஓமிக்­ரான் துணைத் திரி­பு­க­ளுக்கு எதி­ராக அதிக செயல்திறனுடன் இருப்பதாக அவர் விளக்­கி­னார். இது­வரை ஏறக்­குறைய 20,000 பேர் இத்­த­கைய தடுப்­பூ­சியைப் போட்­டுக்­கொண்டு உள்­ள­தாக அவர் தெரி­வித்­தார். சிங்­கப்­பூ­ரில் அறி­மு­கம் கண்டு உள்ள முத­லா­வது இரு­வகை திறன் கொண்ட தடுப்­பூசி, மொடர்னா/ஸ்பைக்­வேக்ஸ் தடுப்­பூ­சி­யா­கும். அக்­டோ­பர் 14ஆம் தேதி­யி­லி­ருந்து ஒன்­பது கூட்­டுப் பரி­சோ­தனை, தடுப்­பூசி நிலை­யங்­களில் இது போடப்­பட்டு வருகிறது.

இதற்­கி­டையே, ஃபைசர்-பயோ­என்­டெக் நிறு­வ­னத்­தின் இருவகை திறன் கொண்ட கொமிர்னாட்டி தடுப்­பூசி தற்­போது மதிப்­பீடு செய்­யப்­பட்டு வரு­கிறது. ஆண்டு இறுதிக்குள் அது கிடைக்கக்கூடும்.