கேமரன் மலைப் பகுதியில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்; ஆறு பேர் உயிர் தப்பினர்

கேமரன் மலைப் பகுதியில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்; ஆறு பேர் உயிர் தப்பினர்

1 mins read
cea76464-4aa3-4a25-905a-32bb16035151
ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஆறு பேரும் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளதாக பேராக்தீயணைப்பு, மீட்புப் படையினர் தெரிவித்தனர். படம்: மலேசிய ஊடகம் -

மலே­சி­யா­வின் கேம­ரன் மலைப் பகுதி­யில் நேற்று ஆறு பேர் பயணம் செய்த ஹெலி­காப்­டர் ஒன்று விழுந்து நொறுங்­கி­ய­தில் அதிலிருந்த அறுவருக்­கும் காயங்­கள் ஏற்­பட்­டன.

அவர்களில் ஒருவருக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அவர்­கள் சீரான உடல் நிலை­யில் இருப்­ப­தா­க­வும் அவர்­க­ளுக்கு மருத்­துவ உதவி வழங்­கப்­பட்­ட­தா­க­வும் மலே­சிய சிவில் விமா­னப் போக்கு­வரத்து ஆணை­யம் தெரி­வித்­தது.

பிரிஞ்­சாங் எனும் பகு­தி­யில் உள்ள காட்­டில் பிற்­ப­கல் 1 மணி­ய­ள­வில் ஹெலி­காப்­டர் விபத்­துக்­குள்­ளா­னது.

ஏர்­பஸ் ஏஎஸ்355 எஃப்2 ரக ஹெலி­காப்­டர், கிளந்­தான் மாநி­லத்­தின் குவா மூசாங்­கி­லி­ருந்து பேராக் மாநி­லத்­தின் தஞ்­சோங் ரம்­புத்­தான் எனும் பகு­திக்­குச் சென்­று­கொண்­டி­ருந்­த­தாக ஆணை­யத்­தின் தலைமை நிர்­வாகி செஸ்­டர் வூ தெரி­வித்­தார்.

ஹெலி­காப்­ட­ரில் இருந்­த­வர்­களில் விமா­னி­யும் சுகா­தார அமைச்சு ஊழி­யர்­கள் என நம்­பப்­படும் ஐவ­ரும் அடங்­கு­வர் என்று பேராக் தீய­ணைப்பு, மீட்­புத் துறை இயக்­கு­நர் அஸ்மி ஒஸ்­மான் கூறி­னார்.

ஹெலி­காப்­ட­ரில் இருந்த ஆறு பேரும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக அவர் சொன்­னார்.

பேராக், பாகாங் மாநில எல்லை அருகே நிகழ்ந்த இந்த விபத்­தில் மூவ­ருக்­குக் கடு­மை­யாக காயங்­கள் ஏற்­பட்­ட­தாக தொடக்­கத்­தில் நம்­பப்­பட்­டது.

பாகாங் மாநி­லத்­தில் அமைந்­துள்ள குளிர்ச்­சி­யான கேம­ரன் மலைப் பகுதி­ பிர­பல சுற்­று­லாத் தள­மாக விளங்­கு­கிறது.

இங்கு, இயற்­கை­யான சூழ­லில் காய்­கறி, பழங்­கள், பூக்­கள் உற்­பத்தி செய்யப்­ப­டு­கின்­றன.