மின்னிலக்க மிரட்டல்களிலிருந்து மக்களைக் காக்கும் புதிய படை

மின்னிலக்க மிரட்டல்களிலிருந்து மக்களைக் காக்கும் புதிய படை

2 mins read
3c603551-aa78-415d-99fa-8cdd75deb946
மின்னிலக்க, உளவுத்துறைப் படையின் முதலாவது தலைவராக பிரிகேடியர் ஜெனரல் லீ யி-ஜின்னை (வலது), அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று நியமித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யின் நான்­கா­வது படை­யாக நேற்று மின்­னிலக்க, உள­வுத்­து­றைப் படை (டிஐ­எஸ்) தொடங்­கப்­பட்­டது. உள­வுப்பணியை உட­னுக்­கு­டன் மேற்­கொண்டு இணை­யத் தாக்­கு­தல்­கள் மற்­றும் மின்­னி­யல் போர்­முறை உள்­ள­டக்­கிய மின்­னி­லக்க மிரட்­டல்­க­ளுக்கு எதி­ராக நாட்­டைப் பாது­காக்க இப்­படை செயல்­படும்.

'தள­பத்­தி­யங்­கள்' எனக் குறிப்­பி­டப்­படும் நான்கு பிர­தான பிரி­வு­களை 'டிஐ­எஸ்' கொண்­டி­ருக்­கும். 'C4' எனப்­படும் தள­பத்­தி­யம், கட்­டுப்­பாடு, தக­வல்­தொ­டர்பு, கணி­னி­கள் ஆகி­ய­வற்­று­டன் இணை­யம், மின்­னி­யல் பாது­காப்பு, உள­வி­யல் தற்­காப்பு, பயிற்­சி­ய­ளித்­தல் ஆகிய உள­வுத்­துறை தொடர்­பான அம்­சங்­க­ளை­யும் இப்­பி­ரி­வு­கள் கையா­ளும். அர­சாங்க அமைப்­பு­கள், பல்­கலைக்­க­ழ­கங்­கள், தொழிற்­துறை நிபு­ணர்­கள் மற்­றும் ராணு­வம், கடற்­படை, ஆகா­யப்­ப­டை­யில் உள்­ளது போன்ற ஒரு சேவை தலை­மை­யகத்­து­டன் மின்­னி­லக்க நிபு­ணத்­து­வத் திறனை வளர்த்­துக்­கொள்­ளும் சிறப்பு நிலை­ய­மும் இருக்­கும்.

இந்­நி­லை­யில் மின்­னி­லக்க, தக­வல் தளங்­களில் பாது­காப்பு மிரட்­டல்­க­ளுக்கு எதி­ராக சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யின் 'டிஐ­எஸ்' அமைக்­கப்­ப­டு­வ­தற்கு இதுவே சரி­யான தரு­ணம் என்­றும் அது அவ­சி­யம் என்­றும் அதி­பர் ஹலிமா யாக்­கோப் தமது உரை­யில் குறிப்­பிட்­டார்.

ஜூரோங்­கின் 'சாஃப்டி' ராணு­வப் பயிற்­சிக் கழ­கத்­தில் நேற்று நடை­பெற்ற சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை­யின் நான்­கா­வது படை­யின் தொடக்க அணி­வ­குப்­பில், மின்­னிலக்க, உள­வுத்­து­றைப் படை­யின் முத­லா­வது தலை­வ­ராக பிரி­கே­டி­யர் ஜென­ரல் லீ யி-ஜின்னை நிய­மித்­தார் அதி­பர் ஹலிமா. அணி­வ­குப்­பில் நான்­கா­வது படை­யின் சின்­ன­மும் கொடி­யும் வெளி­யி­டப்­பட்­டன.

"நாட்­டின் ஆகா­யம், நிலம், கடல் ஆகி­ய­வற்றை சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை தற்­காப்­பது போலவே மின்­னி­லக்­கத் தளத்­தில் ஏற்­ப­டக்­கூ­டிய தாக்­கு­தல்­க­ளுக்கு எதி­ராக நம்­மைத் தற்­காத்­துக்­கொள்­ளும் திறன்­களை இந்த நான்­கா­வது படை நமக்கு வழங்­கும்," என்­றார் அதி­பர்.

தற்­காப்பு அமைச்சு முதன்­மு­த­லாக அதன் நிறு­வன அமைப்பை வெளி­யிட்ட நிலை­யில், 'டிஐ­எஸ்' என்ற நான்­கா­வது படை­யில் கூட்டு உள­வுத்­து­றைத் தள­பத்­தி­யம், 'C4' தள­பத்­தி­யம்/இணை­யப் பாது­காப்பு பணிக்­குழு, மின்­னி­லக்­கத் தற்­காப்பு தள­பத்­தி­யம், 'டிஐ­எஸ்' பயிற்சி தள­பத்­தி­யம் மற்­றும் மின்­னி­லக்க செயல்­பாட்டு தொழில்­நுட்ப நிலை­யம் ஆகி­யவை உள்­ள­டங்­கும்.

இது குறித்து கடந்த புதன்­கிழமை செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய மின்­னி­லக்க, உள­வுத்­து­றைப் படை­யின் செயல்­பாட்டு அலு­வ­ல­கத் தலை­வர் கர்­னல் லட்­சு­ம­ணன் நாரா­ய­ணன், "ராணுவ நிபு­ணர்­கள் திட்­டத்­தி­லுள்ள தொழில்­முறை ராணுவ வீரர்­கள் இந்­தப் புதிய படை­யில் அங்­கம் வகிப்­பார்­கள்," என்­றார்.

மேலும், தற்­காப்பு நிர்­வாக அதி­கா­ரி­கள், திற­மை­யான முழு­நேர தேசிய சேவை­யா­ளர்­கள் போன்­றோ­ரும் சேர்க்­கப்­ப­டு­வர் என்­றார்.