'நல்கி' புயலால் மூழ்கும் பிலிப்பீன்ஸ் கிராமங்கள்; 31 பேர் பலி

'நல்கி' புயலால் மூழ்கும் பிலிப்பீன்ஸ் கிராமங்கள்; 31 பேர் பலி

2 mins read
9ed9a61a-3c48-43e9-afe7-c82a904d4e09
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்திலிருந்து மக்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் மும்முரமாக உள்ளனர். படம்: ஏஎஃப்பி -

பிலிப்­பீன்­சில் 'நல்கி' புய­லால் பல மாகா­ணங்­களில் நிலச்­ச­ரி­வும் திடீர் வெள்­ள­மும் ஏற்­பட்டுள்­ளன. மார்பு வரை­யி­லான நீரில் மக்­கள் தத்­த­ளித்­துக் கொண்­டி­ருக்க, உயி­ரி­ழந்­த­வர் எண்­ணிக்கை குறைந்­தது 31 ஆக இருக்­கக்­கூ­டும் என்று கூறப்­ப­டு­கிறது.

வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட 'டத்து பிளா சின்­சு­வாட்' பகு­தி­யி­லி­ருந்து பத்து சட­லங்­களும் அரு­கி­லுள்ள 'டத்து ஒடின் சின்­சு­வாட்'டிலி­ருந்து மேலும் 16 சட­லங்­களும் 'உப்பி' பகு­தி­யி­லி­ருந்து ஐந்து சட­லங்­களும் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக பங்­கா­மோரோ வட்­டார அர­சாங்­கத்­தின் பேச்­சா­ள­ரும் குடி­மைத் தற்­காப்­புத் தலை­வ­ரு­மான திரு நகு­யிப் சினா­ரிம்போ தெரி­வித்­துள்­ளார்.

பல­ரும் தங்­க­ளின் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேற வேண்­டிய நிலை ஏற்­பட்­ட­தா­க­வும் கூறப்­பட்­டது. சிலர் ஒன்­று­கூ­டல் நிகழ்ச்சி ஒன்­றில் பங்­கேற்று அங்­கி­ருந்து வெளி­யேற முடி­யா­மல் சிக்­கிக்­கொண்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது. கடும் வெள்­ளத்­தால் கோட்­டா­பாட்டோ சிட்­டி­யின் 90% கிரா­மங்­களும் 67,000க்கு மேற்­பட்ட மக்­களும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என்று திரு சினா­ரிம்போ தெரி­வித்­தார்.

"கோட்­டா­பாட்­டோ­வில் நான் வசித்த இத்­தனை காலத்­தில் வெள்ள நீர் என் வீட்­டுக்­குள் வந்­தது இதுவே முதல் முறை. இம்­முறை நிலைமை மிக­வும் மோச­மாக உள்­ளது," என்று அவர் செய்­தி­யாளர்­க­ளி­டம் கூறி­னார்.

2022ல் பிலிப்­பீன்சை தாக்­கி­ உள்ள 16வது சூறா­வளி 'நல்கி'. தற்­போது 115 கிமீ வேகத்­தில் பிலிப்­பீன்ஸ் கட­லின் மேல் கிழக்­குக் கரை­யோ­ரத்­தில் சுழ­லும் 'நல்கி' புயல், இந்த வார இறு­தி­யில் மேலும் இரண்டு முறை கரை­யைக் கடக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் கடல் பய­ணங்­களை பிலிப்­பீன்ஸ் கரை­யோ­ரக் காவல் படை ரத்து செய்­துள்­ள­தால் தற்­போது ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் வெவ்­வேறு துறை­மு­கங்­களில் செய்­வ­த­றி­யாது தவிக்­கின்­ற­னர்.

இதற்­கி­டையே, மரண எண்­ணிக்கை அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று கூறப்­ப­டு­கிறது.