கட்டணம் குறைப்பு; 22,000 புதிய இடங்கள்

கட்டணம் குறைப்பு; 22,000 புதிய இடங்கள்

3 mins read

அடுத்த ஆண்டு முதல் அர­சாங்க ஆத­ர­வு­டன் இயங்­கும் பாலர் பள்ளி­களில் பிள்­ளை­க­ளைச் சேர்ப்­ப­தற்­கான கட்­ட­ணம் குறைக்­கப்­ப­ட­வுள்­ளது. அதோடு, 2024ஆம் ஆண்­டுக்­குள் அத்­த­கைய ஐந்து பாலர் பள்ளி அமைப்­பு­க­ளின் பள்ளி­களில் கூடுதலான பிள்ளை­களைச் சேர்த்­துக்­கொள்ள மேலும் 22,000 இடங்­கள் உரு­வாக்­கப்­படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அர­சாங்க ஆத­ரவு பாலர் பள்ளி­களில் கட்­ட­ணம் குறைக்­கப்­ப­டு­வதால் ஏறக்குறைய 100,000 சிங்­கப்­பூர் பிள்­ளை­கள் பல­ன­டை­வர் என்று பாலர் கல்வி மேம்­பாட்டு ஆணை­யம் தெரி­வித்­தது.

மேலும், அடுத்த ஈராண்­டு­களில் அர­சாங்க ஆத­ரவு பாலர் பள்­ளி­களில் பணி­பு­ரி­யும் ஆசி­ரி­யர்­க­ளின் சம்­ப­ள­மும் 10லிருந்து 30 விழுக்­காடு உயர்த்தப்படும். சிறப்­பா­கப் பணி­யாற்­று­வோ­ரின் சம்­ப­ளம் கூடு­த­லாக உயர்த்­தப்­படும் என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர்   கூறினார்.

சன்­டெக் சிங்­கப்­பூர் மாநாட்டு, கண்காட்சி நிலை­யத்­தில் நேற்று நடை­பெற்ற பாலர் கல்வி கொண்­டாட்ட நிகழ்ச்சி ஒன்­றில் திரு மச­கோஸ் பேசி­னார்.

மாற்­றங்­க­ளைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்­டுக்­குள் அவர்களது அனுபவம், திறன், வேலை செயல்திறன்களைப் பொறுத்து பாலர் பள்ளி ஆசி­ரி­யர்­க­ளின் சம்­ப­ளம் கிட்டத்தட்ட 2,900லிருந்து 6,000 வெள்ளி வரை உயரும்.

அதோடு, பாலர் பள்ளி ஆசி­ரி­யர்­க­ளின் வேலைச் சூழலை மேம்­ப­டுத்­து­வது குறித்­தும் அர­சாங்­கம் ஆராய்ந்து வரு­கிறது. இதன் தொடர்­பில் ஆசி­ரி­யர்­கள், பெற்­றோர், பாலர் பள்­ளி­களை நடத்­து­வோர் ஆகி­யோ­ரு­டன் வரும் மாதங்­களில் ஆலோ­சனை மேற்கொள்ளப்படும்.

சனிக்­கி­ழ­மை­களில் பாலர் பள்ளி­கள் இயங்­கா­மல் இருப்­பது போன்ற விவ­கா­ரங்­க­ள் குறித்து ஆலோ­சனை நடத்­தப்­படும்.

2025ஆம் ஆண்­டுக்­குள் 80 விழுக்­காடு பாலர் பள்ளி மாண­வர்­களை அர­சாங்க ஆத­ரவு பாலர் பள்­ளி­களில் இடம்­பெ­றச் செய்­வது சிங்­கப்­பூ­ரின் இலக்கு. 2019ஆம் ஆண்டு தேசிய தினஙப பேரணி உரை­யில் அந்த இலக்கு குறித்து அறி­விக்­கப்­பட்­டது.

அதைக் கருத்­தில்­கொண்டு அர­சாங்க ஆத­ரவு பாலர் பள்­ளி­களில் கூடு­த­லாக 22,000 இடங்­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன.

தற்­போது 60 விழுக்­காடு சிறுவர்­கள் அர­சாங்க ஆத­ரவு பாலர் பள்­ளி­களில் பயில்­வ­தாக பாலர் பள்ளி மேம்­பாட்டு அமைப்பு அறிக்­கை­ ஒன்­றில் குறிப்­பிட்­டது.

மற்ற சிறு­வர்­கள் தனி­யார் பாலர் பள்­ளி­களில் பயில்­கின்­ற­னர். தற்­போது மொத்­த­மாக எல்லா தனி­யார் பாலர் பள்­ளி­க­ளி­லும் சுமார் 200,000 இடங்­கள் உள்­ளன.

அர­சாங்க ஆத­ரவு பாலர் பள்ளி­களில் கூடு­த­லாக உரு­வாக்­கப்­படும் இடங்­களில் 2,800 இடங்­கள் கைக்­கு­ழந்தைப் பரா­ம­ரிப்­புக்கு ஒதுக்­கப்­படும், 4,400 இடங்­கள் 'பிளே­கு­ரூப்' எனும் பாலர் கல்வி விளை­யாட்­டுக் குழுக்­க­ளுக்கு ஒதுக்­கப்­படும்.

இந்த இரு­வகை சேவை­க­ளுக்­கும் தேவை அதி­கம் இருப்­ப­தாக அமைச்­சர் மச­கோஸ் தெரி­வித்­தார். குறிப்­பாக அதி­க­மான இளம் குடும்­பங்­கள் வசிக்­கும் புதிய வட்­டா­ரங்­களில் இவற்­றுக்­கான கூடு­தல் இடங்­கள் இடம்­பெ­றும் என்­பதை அவர் குறிப்­பிட்­டார்.

பிசி­எஃப் ஸ்பார்க்­கல்­டாட்ஸ், மை ஃபர்ஸ்ட் ஸ்கூல், எம்.வை வோர்ல்ட், ஸ்கூல்4கிட்ஸ், இ-பிரிட்ஜ் ஆகி­ய­வற்­றின் பாலர் பள்­ளி­களில் அடுத்த ஈராண்­டு­களில் கூடு­தல் இடங்­கள் உரு­வாக்­கப்­படும்.

இவை 'ஏங்­கர் ஆப்­ப­ரேட்­டர்ஸ்' என்­ற­ழைக்­கப்­படும் அரசாங்க ஆதரவில் பாலர் பள்ளிகளை இயக்கும் முதன்மை நடத்துநர் அமைப்புகள்.

அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் ஒன்­றாம் தேதி முதல் அர­சாங்க ஆத­ரவு பாலர் பள்­ளி­களில் பெற்­றோர் பிள்­ளை­க­ளுக்கு செலுத்­த­வேண்­டிய அதி­க­பட்­சக் கட்­ட­ண­மும் குறைக்­கப்­படும். அர­சாங்க ஆத­ரவு முதன்மை நடத்துநர் அமைப்புகள், அர­சாங்­கப் பங்­காளி நிறுவனங்கள் ஆகி­ய­வற்­றின் பள்ளி­க­ளுக்கு இது பொறுந்­தும்.

சிங்­கப்­பூ­ரில் தற்­போது ஐந்து முதன்மை நடத்துநர் அமைப்புகளும் 29 அர­சாங்­கப் பங்­காளி அமைப்பு­களும் இயங்­கு­கின்­றன.

"மொத்­தத்­தில் இந்­ந­ட­வ­டிக்­கை­கள் குடும்­பங்­க­ளுக்கு ஆத­ர­வான ஒரு சூழலை உரு­வாக்­கப் பங்­களிக்­கின்­றன. தங்­க­ளின் பிள்­ளை­க­ளுக்­குக் கட்­டுப்­ப­டி­யான கட்டணத்தில் தர­மான பாலர் கல்வி வழங்­கப்­ப­டு­வ­தைக் குடும்­பங்­களால் உறு­திப்­ப­டுத்­த­வும் முடி­யும்," என்பதை திரு மச­கோஸ் சுட்டினார்.

அரசாங்க ஆதரவுடன் இயங்கும் பாலர் பள்ளிகளில் புதிய அனுகூலங்கள்; 10% - 30% சம்பள உயர்வு