சுத்தியலால் தாக்கப்பட்ட நேன்சி பெலோசியின் கணவர் குணமடைந்து வருகிறார்

சுத்தியலால் தாக்கப்பட்ட நேன்சி பெலோசியின் கணவர் குணமடைந்து வருகிறார்

2 mins read
071fcf8d-f86e-4b97-8c75-e49e227c40e1
சம்பவத்தைத் தொடர்ந்து திருவாட்டி நேன்சி பெலோசியின் வீட்டிற்கு முன்பு காணப்பட்ட காவல்துறையினரும் அமெரிக்காவின் அரசாங்கப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும். படம்: இபிஏ -

சுத்­தி­ய­லால் தாக்­கப்­பட்டு அறுவை சிகிச்சை மேற்­கொண்ட அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற நாய­கர் நேன்சி பெலோ­சி­யின் கண­வர் பால் பெலோசி குண­ம­டைந்து வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமது வீட்­டுக்­குள் அத்­து­மீறி நுழைந்த ஒரு­வ­ரால் 82 வயது திரு பெலோசி நேற்று முன்­தி­னம் தாக்­கப்­பட்­டார். அவ­ரைத் தாக்­கி­ய­தாகச் சந்­தே­திக்­கப்­படும் ஆட­வர் மீது கொலை முயற்சி உள்­ளிட்­ட­ குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

தாக்­கு­த­லில் மண்டை உடைந்­த­தால் திரு பெலோசி அறுவை சிகிச்சை மேற்­கொண்­ட­தாக திரு­வாட்டி நேன்சி பெலோ­சி­யின் அலு­வ­ல­கம் தெரி­வித்­தது. திரு பெலோ­சி­யின் கை, கால்­களில் காயம் ஏற்­பட்­ட­தா­க­வும் அலு­வ­ல­கம் குறிப்­பிட்­டது.

அவர் முழு­மை­யாக குண­ம­டை­வார் என்று மருத்­து­வர்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர்.

திரு பெலோ­சி­யைத் தாக்­கி­ய­தா­கக் குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்ள டேவிட் டிபாப் எனும் ஆட­வர் 'நேன்சி எங்கே?' என்று ஆங்­கி­லத்­தில் கத்­திக்­கொண்டு திரு­வாட்டி பெலோ­சி­யைத் தேடி­ய­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

அர­சாங்­கம், பெரும் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ரான பதி­வு­க­ளைக் கொண்ட ஆதா­ரம் இல்­லாத வலதுசாரி கருத்­து­க­ளைப் பரப்­பும் வலைப்­ப­தி­வு­க­ளு­டன் அவர் தொடர்­பு­டை­ய­வர் என்­றும் கரு­தப்­ப­டு­கிறது.

தாக்­கு­த­லுக்­கான கார­ணம் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை என்று காவல்­து­றை­யி­னர் கூறி­னர்.

இன்­னும் சில நாள்­களில் அமெ­ரிக்காவில் இடைக்­கா­லத் தேர்­தல் நடை­பெ­ற­வி­ருக்­கும் வேளை­யில் அந்­நாட்­டில் அர­சி­யல் ரீதி­யான வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் அதி­க­ரிப்­பது குறித்த அச்­சம் நிலவு­கிறது.

இந்­தத் தாக்­கு­தலை அர­சி­யல் வன்­மு­றைச் செயல் என்று வகைப்­ப­டுத்­தி அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் இச்செயலுக்குக் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார். சென்ற அமெ­ரிக்க அதி­பர் தேர்­தல் முடி­வு­கள் மாற்றி­யமைக்­கப்­பட்­டன என்ற பொய்த் தக­வ­லைப் பரப்­பும் சிலர் அர­சி­யல் சூழலை மோச­மாக்கி வன்­மு­றை­யைத் தூண்­டு­வ­தா­கச் சொன்ன திரு பைடன், அத்­த­கை­யோ­ரைக் கடு­மை­யாகச் சாடி­னார்.