மக்கள் கழக புதிய மானியம்: சமூகத் திட்டத்திற்கு $1,000

மக்கள் கழக புதிய மானியம்: சமூகத் திட்டத்திற்கு $1,000

2 mins read
0abfa9fe-25ca-4115-8d00-b403859a7f0b
புதிய மானியம் குறித்து துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்று நடைபெற்ற ஆய்வரங்கு ஒன்றில் அறிவித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிரு­மித்­தொற்று காலத்­தின்­போது சிங்­கப்­பூ­ரர்­கள் ஒன்­றா­கச் சேர்ந்து ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் உத­வி­னர். உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்கு உத­வ­வேண்­டும் என்ற மனப்­பான்மை சிங்­கப்­பூ­ரர்­க­ளின் மன­த்தில் ஆழ­மாக வேரூன்றி இருக்­கிறது. அதையே அந்­தச் செயல்­கள் வெளிப்­ப­டுத்­து­வ­தாக துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் நேற்று கூறி­னார்.

மக்­க­ளின் அறப்­பணி உணர்வை வளர்க்க மேலும் பல­வற்­றைச் செய்ய முடி­யும் என்று அவர் குறிப்­பிட்­டார். இதைக் கருத்­தில்­கொண்டே மக்­கள் கழ­கம் அடுத்த மாதம் புதிய திட்­டம் ஒன்றை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­போ­வ­தாக அவர் அறி­வித்­தார். மேலும், பல நல்ல சமூகக் கார­ணங்­களுக்­காக தங்­க­ளுக்­குப் பிடித்­த­வகை­யில் தொண்­டூ­ழி­யங்­களில் ஈடு­பட அந்­தத் திட்­டம் மக்­க­ளுக்கு ஊக்­க­மூட்­டும்.

'சமூ­கத் தொண்­டூ­ழி­யர்' என்ற அத்­திட்­டத்­தில் கலந்­து­கொண்டு சொந்­த­மாக தொண்­டூ­ழி­யத் திட்­டங்­களை மக்­கள் தொடங்­க­லாம். அதற்­கான செலவை ஈடு­செய்­யும் வகை­யில் 1,000 வெள்ளி வரை மதிப்­புள்ள மானி­யம் அத்­திட்­டத்­திற்கு வழங்­கப்­படும்.

தொண்­டூ­ழி­யர்­க­ளு­டன் சேர்ந்து செயல்­பட்டு சமூ­கத் தேவை­க­ளைக் கண்­ட­றிந்து ஏற்­பு­டைய அமைப்­பு­க­ளு­டன் தொண்­டூ­ழி­யர்­களை மக்­கள் கழ­கம் சேர்க்­கும். சொந்­தத் திட்­டங்­க­ளைத் தொடங்க விரும்­பா­த­வர்­கள், நடப்­பில் இருக்­கும் தொண்­டூ­ழிய வாய்ப்­பு­களை மக்­கள் கழ­கம் மூலம் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம்.

'அவர் தெம்­ப­னிஸ் ஹப்' மையத்­தில் நேற்று நடந்த மக்­கள் கழக வரு­டாந்­திர சமூக ஆய்­வ­ரங்­கில் துணைப் பிர­த­மர் வோங் உரை­யாற்­றி­னார். சிங்­கப்­பூ­ரர்­களில் பல­ரும் சமூ­கத்­திற்­குத் தொண்­டாற்­று­வ­தில் ஆர்­வம் கொண்­டி­ருக்­கிறார்­கள். இருந்­தா­லும் சிலர் சாதா­ரண முறை­யில் தொண்டாற்ற விரும்­பு­கி­றார்­கள் என்று அவர் குறிப்­பிட்­டார்.

இத்­த­கைய உதவி மனப்­பான்­மை­யு­டன் கூடிய சிங்­கப்­பூ­ரர்­களில் மேலும் பல­ரைக் கவர்ந்து இழுத்து அவர்­களைச் சமூ­கத்­தில் ஈடு­பட வைக்க முடி­யும் என்று திரு வோங் குறிப்­பிட்­டார். அதற்கு வகை­செய்ய தற்­போை­தய அடித்­தள அமைப்­பு­களை­யும் தாண்டி மக்­கள் கழ­கம் பல்­வேறு தளங்­களை ஏற்­ப­டுத்­தித் தர­லாம் என்­றும் அவர் ெசான்­னார்.

இதற்­கி­டையே, அந்த ஆய்­வரங்­கில் பேசிய மக்­கள் கழக துணைத் தலை­வர் எட்­வின் டோங், புதிய மானி­யத் திட்­டம் மக்­கள் சமூ­கத்­திற்­குத் தொண்­டாற்­று­வ­தற்­கான வழி­க­ளைப் பெருக்­கும் என்று தெரி­வித்­தார். நடை­மு­றைச் செலவு­களை ஈடு­செய்ய 1,000 வெள்ளி வரை மதிப்­புள்ள புதிய மானி­யம் உத­வும் என்று கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­ச­ரு­மான திரு டோங் கூறி­னார்.

ஆய்­வ­ரங்­கை­யொட்டி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அமைச்­சர் டோங், புதிய தொண்­டூ­ழி­யத் திட்­டத்­திற்­கான மொத்த மானி­யத் தொகை பற்றி எதை­யும் குறிப்­பி­ட­வில்லை.

இருந்­தா­லும் மக்­க­ளுக்கு நன்மை ஏற்­படும் வகை­யில் பணம் செல­வி­டப்­படும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

தொண்­டூ­ழி­யத் திட்ட மானி­யத்­தைப் பெறு­வ­தற்­கான விண்­ணப்­பங்­கள் ஒன்­றன்பின் ஒன்­றாக அத­ன­தன் அடிப்­ப­டை­யில் மதிப்­பிடப்­படும். குடி­மக்­க­ளின் ஈடு­பாட்டை வலுப்­ப­டுத்­தும் பணியை நிறை­வேற்ற நல்ல நிலை­யில் மக்­கள் கழ­கம் இருக்­கிறது என்று துணைப் பிர­த­மர் வோங் கூறி­னார்.