4ஜி தலைவர்களின் தொகுதிச் சுற்றுலா தொடங்கியது

4ஜி தலைவர்களின் தொகுதிச் சுற்றுலா தொடங்கியது

2 mins read

நான்­காம் தலை­மு­றைத் தலை­வர்­களின் (4ஜி) அமைச்­சர்­நிலை தொகு­திச் சுற்­றுலா கொவிட்-19 கார­ண­மாக கடந்த இரண்­டாண்டு­களாக இடம்­பெ­ற­வில்லை. அது நேற்று மீண்­டும் தொடங்­கியது.

துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங், இயோ சூ காங்­கில் சுற்றுலா மேற்­கொண்­டார். "மக்­கள் செயல் கட்­சி­யின் 4ஜி தலை­வர்­கள் இரு வாரங்­க­ளுக்கு ஒருமுறை இடம்­பெறும் இந்­தச் சுற்­று­லாக்­களை வார முடிவு நாள்­களில் மேற்­கொள்­வர்.

"கூடு­மானவரை அவர்­கள் பல தொகு­தி­க­ளுக்­கும் செல்ல திட்­டம் இருக்­கிறது," என்று ஊட­கத்­தி­டம் பேசிய திரு வோங் குறிப்­பிட்­டார்.

இந்­தச் சுற்­று­லாக்­கள் 2023 செப்­டம்­பர் வரை இடம்­பெ­றும். வரும் டிசம்­ப­ரில் அவை இடம்­பெ­ற­மாட்­டா. பெரும்பாலான தொகுதி­களில் சுற்று­லாக்கள் இடம்­பெ­றும் என்று மக்கள் கழ­கம் கூறி­யது.

இருந்­தா­லும் தொகு­தி­க­ளைப் பற்­றியோ அவற்­றின் துல்­லி­ய­மான எண்­ணிக்­கை­யைப் பற்­றியோ அது விவ­ரங்­க­ளைத் தெரி­விக்­க­வில்லை.

அமைச்­சர்­நிலை தொகு­திச் சுற்று­லாக்­கள் எதிர்­த்த­ரப்பு வசம் உள்ள தொகு­தி­க­ளி­லும் இடம்­பெறும் என்று ஊட­கத்­தின் கேள்வி­க­ளுக்கு அளித்த பதி­லில் துணைப் பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

திரு வோங்­கு­டன் இயோ சூ காங் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் யிப் ஹான் வெங்­கும் நேற்­றைய சுற்­று­லா­வில் கலந்­து­கொண்­டார்.

"முதல் முறை­யாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு இருக்­கும் உறுப்­பி­னர்­களின் தொகு­தி­க­ளுக்கு அதிக முன்­னு­ரிமை கொடுக்­கப்­படும்.

"அடுத்த ஆண்டு செப்­டம்­பருக்கு பிற­கும் இந்­தச் சுற்­று­லாக்­களைத் தொடர திட்­டமுள்ளது," என்று துணைப் பிர­த­மர் கூறி­னார்.

இப்­போ­தைய சுற்­று­லாக்­கள், முந்­திய சுற்­று­லாக்­களில் இருந்து வேறு­பட்டு இருக்­கும். இப்­போ­தைய சுற்­று­லாக்­களில் முன்­னே­றும் சிங்­கப்­பூர் இயக்­கம் பற்றி குடி­யி­ருப்­பா­ளர்­க­ளி­டம் விவ­ரித்து கூறப்­பட்டு அவர்­க­ளின் யோச­னை­கள் நாடப்­படும் என்றும் அவர் தெரி­வித்­தார்.

முன்­னே­றும் சிங்­கப்­பூர் என்ற செயல்­திட்­டத்தைக் கடந்த ஜூன் மாதம் அர­சாங்­கம் தொடங்­கி­யது.

கூடு­மானவரை­ குடி­மக்­களை அதி­க­மாக ஈடு­ப­டுத்தி, அவர்­களுக்கு மிக­வும் நாட்­ட­மான பல­தரப்­பட்ட கொள்­கை­கள் தொடர்­பில் அவர்­க­ளு­டைய கருத்­து­க­ள், யோசனை­க­ளை­ப் பெறு­வதற்கு அதிக முயற்­சி­கள் இடம்­பெறும்.

புதிய சுற்­று­லாக்­கள் அடித்­தள அமைப்­பு­க­ளுக்கு அப்­பா­லும் விரி­வடைந்து சமூ­கப் பங்­காளி­களை­யும் மற்­ற­வர்­க­ளை­யும் ஈடு­படுத்­தும் என்­றும் அவர் கூறி­னார்.