தற்காப்புப் படை 2வது தலைவர் பிஜி கிர்பா ராம் விஜ் மரணம்

தற்காப்புப் படை 2வது தலைவர் பிஜி கிர்பா ராம் விஜ் மரணம்

1 mins read
63d2f4df-0c44-46fb-88fd-57a5296a2ca3
பிஜி கிர்பா ராம் விஜ், சிங்கப்பூர் தற்காப்புப் படை யின் தலைமை இயக்குநராகப் பதவி வகித்தவர். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படங்கள் -

சிங்­கப்­பூர் குடி­ய­ரசு தற்­காப்­புப் படை­யின் இரண்­டா­வது தலை­வ­ரா­கப் பொறுப்­பேற்­றி­ருந்த பிரி­கே­டி­யர் ஜென­ரல் (பிஜி) கிர்பா ராம் விஜ் கடந்த சனிக்­கி­ழமை தமது 87வது வய­தில் கால­மா­னார்.

சிங்­கப்­பூர் சுதந்­தி­ரம் அடைந்த பிறகு தொடக்க ஆண்­டு­களில் நாட்­டின் ராணு­வத்­தைக் கட்­ட­மைப்­பதில் இவர் முக்­கியப் பணி­யாற்­றி­னார். இவ­ருக்கு மனைவி, மூன்று பிள்­ளை­கள் இருக்­கி­றார்­கள்.

குடும்­பத்­தி­னர் சூழ்ந்­தி­ருக்க அமை­தி­யான முறை­யில் பிஜி கிர்பா மர­ண­ம­டைந்­த­தாக குடும்ப உறுப்­பி­னர்­கள் கூறினர்.

பிஜி கிர்பா சிங்­கப்­பூ­ரின் தற்­காப்­புப் படைத் தலைமை இயக்கு நராகப் பொறுப்பு வகித்­தார். இந்­தப் பதவி, இப்­போ­தைய தற்­காப்­புப் படைத் தலை­வர் பத­விக்கு ஏறக் குறைய ஒப்­பான முந்­தைய பதவி­யாகும்.

பிஜி கிர்பா 1970 முதல் 1974 வரை அந்­தப் பதவியை வகித்­தார். அவ­ருக்குமுன் அந்­தப் பத­வியை வகித்து வந்த பிஜி டி.ஜே.டி. கேம்ப்­பெல் 1989ல் மர­ண­ம­டைந்­தார்.

சிங்­கப்­பூ­ரின் ஆயு­தப் படை­யை உரு­வாக்­கு­வ­தில் தன்­ வாழ்­நா­ளில் பெரும்பகு­தியை அர்ப்­பணித்த பிஜி கிர்­பாவை இப்போதைய, முன்­னாள் தற்­காப்­புப் படைத் தலை­வர்­கள் பெரி­தும் பாராட்­டி­னர்.

பிரிட்­டிஷ் இந்­தி­யா­வில் 1935ல் பிறந்த பிஜி கிர்பா, இந்­தி­யா­வின் பிரி­வி­னை­யைத் தொடர்ந்து 1947க்கு பிறகு சிங்­கப்­பூ­ரில் குடி­யே­றி­னார்.

பிஜி கிர்­பா­வின் குடும்­பத்­திற்கு தற்­காப்பு அமைச்சு நேற்று தனது ஆழ்ந்த அனு­தா­பத்தைத் தெரி­வித்­தது. அவ­ரின் நல்­லு­டல் இன்று எரி­யூட்­டப்­படும்.