சமய நல்லிணக்கம்: இன்று முதல் கடும் சட்டம்; அந்நிய ஆதிக்கத்திற்கு எதிரான ஆற்றல் வலுவாகும்

சமய நல்லிணக்கம்: இன்று முதல் கடும் சட்டம்; அந்நிய ஆதிக்கத்திற்கு எதிரான ஆற்றல் வலுவாகும்

2 mins read

சிங்­கப்­பூ­ரில் சமய நல்­லி­ணக்­கத்­தைப் பாது­காப்­ப­தற்­கான சட்­டங்­கள் இன்று முதல் கடு­மை­யா­கின்­றன. அந்­தச் சட்­டங்கள் வெளி­நாட்டு ஆதிக்­கத்­திற்கு எதி­ரான சிங்­கப்­பூ­ரின் அர­ணை­யும் ஆற்­ற­லை­யும் பலப்­ப­டுத்­தும்.

இணை­யத்­தில் இடம்­பெ­றக்­கூ­டிய பாதக கருத்­து­களைக் கையா­ள்­வ­தற்­கான அர­சாங்­கத்­தின் ஆற்­ற­லும் மேம்­படும்.

சமய அமைப்­பு­க­ளின் தலை­மைத்­துவப் பத­வி­களை சிங்­கப்­பூர் குடி­மக்­கள் அல்லது நிரந்­த­ர­வா­சி­கள் வகிக்­கி­றார்­கள் என்­பதை இன்று முதல் சமய அமைப்­பு­கள் உறு­திப்­படுத்த வேண்­டும்.

வெளி­நாட்டு நபர்­க­ளு­டன் அல்­லது அமைப்­பு­க­ளு­டன் ஏதே­னும் தொடர்பு இருந்தால் அது பற்­றி­யும் அந்த அமைப்பு­கள் தெரி­யப்­ப­டுத்­த­வேண்­டும்.

சமய நல்­லி­ணக்­கத்­திற்கு மிரட்­ட­லாக விளங்­கக்­கூ­டிய எந்­த­வொரு நப­ருக்­கும் எதி­ராக அர­சாங்­கம் பிறப்­பிக்­கக்­கூ­டிய கட்­டுப்­பாட்டு உத்­த­ர­வு­களும் விரி­வு­ப­டுத்­தப்­படும். அந்த உத்­த­ர­வு­கள் இணை­யத் தக­வல் தொடர்­பு­க­ளை­யும் உள்­ள­டக்­கும் வகை­யில் விரி­வ­டை­யும்.

இத்­த­கைய உத்­த­ர­வு­கள் முன்பு நடப்பில் இருந்த 14 நாள் அறி­விப்புக் காலத்­திற்­குப் பதி­லாக உட­ன­டி­யா­கவே நடப்­புக்கு வரும்.

சமய நல்­லி­ணக்­கம் தொடர்­பி­லான இப்­போ­தைய தண்­டனை விதித்­தொ­குப்­பின்­கீழ் வரும் குற்­றச்­செ­யல்­கள், இனி­மேல் சமய நல்­லி­ணக்­கப் பரா­ம­ரிப்­புச் சட்­டத்­தின்­கீழ் வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

இன்று நடப்­புக்கு வரும் கடுமை­யான சட்­டங்­கள் சமய நல்­லி­ணக்­கத்­தைப் பராமரிப்­ப­தில் இடம்­பெறக்­கூ­டிய முயற்­சி­களைப் பலப்­ப­டுத்­தும்.

அத்­த­கைய முயற்­சி­களில் இன்­னும் சிறப்­பான ஒரு­மித்த கவ­னம் செலுத்­த­வும் அவை வழி­வ­குக்­கும் என்று உள்­துறை அமைச்சு தெரி­வித்து உள்­ளது.

சமய நல்­லி­ணக்­கப் பரா­ம­ரிப்­புச் சட்­டம் 2019ல் திருத்­தப்­பட்­டது.

அதே­வே­ளை­யில், சிங்­கப்­பூ­ரின் குற்­ற­வி­யல் சட்­டம் சென்ற ஆண்டு செப்­டம்­பரில் திருத்­தப்­பட்­டது.

சட்ட, உள்­துறை அமைச்­சர் கா சண்முகம், இந்­தச் சட்­டம் சம­யம் மற்­றும் சம­யம் சாராத அமைப்புகளைப் பாது­காப்­பதாகத் திரும்­பத் திரும்பத் தெரி­வித்து வந்­தி­ருக்­கிறார்.

ஒரு சமய அமைப்பு, சம­யத்­தைப் பயன்­படுத்தி சம­யம் சாராத ஓரினப் புணர்ச்­சி­யா­ளர்­கள், திரு­நங்­கை­கள் (எல்­ஜி­பிடி) அங்­கம் வகிக்­கும் அமைப்பை அல்­லது தனி­ந­பர்­க­ளைத் தாக்­கி­னால் சமய நல்­லிணக்­கப் பரா­ம­ரிப்­புச் சட்­டத்­தின்­கீழ் நட­வடிக்கை எடுக்க முடி­யும்.

அதுபோ­லவே, ஒரு சமய அமைப்பு அல்­லது அத­னு­டைய உறுப்­பி­னர் சம­யம் சாராத நப­ரால் அல்­லது அமைப்­பால் தாக்­கப்­படும்போது குற்­றம் செய்­வோ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க முடி­யும்.

இந்­தச் சட்­டம் பொது­வான ஒன்று என்று அமைச்­சர் விளக்­கம் அளித்துள்ளார்.

சிங்­கப்­பூ­ரின் சமய நல்­லி­ணக்­கத்­தைக் கீழ­றுத்து அமை­திக்கு மிரட்­டல் விடுக்­கும் வகை­யில் சமய அமைப்­பு­கள் அந்­நிய ஆதிக்­கத்­தின்­கீழ் வந்­தி­ருப்­ப­தா­கக் கரு­தப்­படும் பட்­சத்­தில், அந்த அமைப்­பு­களுக்கு எதி­ராக அர­சாங்­கம் கட்டுப்­பாட்டு உத்­தரவு­க­ளைப் பிறப்­பிக்க இன்று முதல் நடப்­புக்கு வரும் சட்­டம் வகைசெய்­கிறது.

ஒரு குற்­றச் செயல் சமய ரீதி­யில் அல்­லது தீவிர மனப்­போக்கு அடிப்­ப­டை­யில் நடந்­தி­ருக்­கு­மா­னால், குற்­ற­வா­ளிக்கு தண்டனையை இரண்டு மடங்கு வரை அதி­கரிக்­கும் அதி­கா­ரத்தை இன்று முதல் நடப்­புக்கு வரும் சட்­டம் நீதி­மன்­றங்­க­ளுக்கு வழங்­கும்.