மலேசியாவில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஜோகூரில் உள்ள ஹோட்டல் அறைகள் நிரம்பி வருகின்றன.
ஜோகூரில் உள்ள பெரும் பாலான ஹோட்டல்கள் நியமன நாள், வாக்களிப்பு நாளுக்கு ஆயத்தமாகி வருகின்றன. இந்த இரு நாள்களிலும் ஹோட்டல் அறைகள் நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 5ஆம் தேதி நியமன நாளாகும். நவம்பர் 19ஆம் தேதி வாக்களிப்பு நடைபெறுகிறது.
'லோட்டஸ் தேசாரு பீச் ரிசார்ட் அண்ட ஸ்பா'வின் தலைமை நிர்வாக அதிகாரியான இந்திரா காந்தி ரெங்கசாமி பிள்ளை, நியமன நாள், வாக்களிப்பு நாள் ஆகிய இரு நாள்களிலும் முன்பதிவு கூடி வரு வதாகக் கூறினார்.
இரு வார இறுதிகளிலும் குறைந்தது எழுபது விழுக்காடு அறைகள் நிரம்பிவிடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
"பல அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் அறைகளுக்கு முன்கூட்டியே பதிவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது," என்றார் அவர்.
'திசில் ஹோட்டல் ஜோகூர்பாரு' விலும் இதே நிலைமை நீடிக்கிறது.
நியமன நாளன்று ஏற்கெனவே முன்பதிவுகள் தொடங்கிவிட்டன என்று அந்த ஹோட்டலின் பொது மேலாளர் ராபர்ட் லீ கூறியதாக 'த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுத் தேர்தலுக்கு மட்டு மல்லாமல் பொழுதைக் கழிப்பதற் காக சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகளாலும் முன்பதிவு கூடி உள்ளது என்று அவர் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் வாக்களிப் பதை உறுதி செய்ய, உரிய ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.


