பிரதமர்: பொதுத்தேர்தலில் வலுவான ஆதரவு தேவை 'அதிக எதிர்த்தரப்பு எம்பிக்களோடு ஆற்றல்மிகு மசெக ஆட்சி சாத்தியமில்லை'

4 mins read
a230425c-efc2-4992-9b90-add0258a63dc
-

மக்­கள் செயல் கட்சி தொடர்ந்து ஆட்சி புரிய வேண்­டும். அதே­வே­ளை­யில், அரசாங்­கத்தை விடாமல் நெருக்கும் அள­விற்கு அதிக எண்­ணிக்­கை­யில் எதிர்த்­தரப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இருக்கவேண்­டும் என்ற ஒரு நிலை சிங்­கப்­பூ­ரர்களைப் பொறுத்தவரை சாத்தி­ய­மற்­றது என பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்து இருக்­கி­றார்.

"மசெக பல ஆண்­டு­க­ளாக ஆட்­சியில் இருந்து வரு­கிறது. அது நற்­பணி­யைச் செய்து வரு­கிறது. அதை­விட வேறு யாரும் சிறந்த முறை­யில் செயல்பட முடி­யாது என்­ப­தால் பல சிங்­கப்­பூ­ரர்­களும் அந்­தக் கட்­சியே தொடர்ந்து ஆட்சி புரிய வேண்­டும் என்று விரும்­பு­கி­றார்­கள்.

"தேர்­த­லில் வலு­வான அல்­லது பல­வீ­ன­மான ஆத­ர­வைப் பெற்­றா­லும் மசெக ஆட்­சி­யைப் பிடித்து ஆற்­ற­லு­டன் செயல்­படும் என்று முற்­றி­லும் எதிர்­பார்த்து சிங்­கப்­பூ­ரர்­கள் எதிர்த்­த­ரப்­புக்கு வாக்­களிக்­கி­றார்­கள்.

"ஆனால், இது இரண்­டுமே சாத்­தி­யப்­படாது. அர­சாங்­கத்­திற்கு வலு­வான ஆத­ரவு கிடைப்­ப­தற்­கும் பல­வீ­ன­மான ஆத­ரவு கிடைப்­ப­தற்­கும் பெரும் வேறுபாடு இருக்­கிறது," என திரு லீ விளக்­கி­னார்.

மக்­கள் செயல் கட்சி மாநாடு மற்­றும் விரு­து­ விழா 2022ல் கலந்­து­கொண்ட 3,000க்கும் மேற்­பட்ட கட்சி உறுப்­பினர்கள், செயல்­வீ­ரர்­க­ளி­டையே பிரதமர் உரை­யாற்­றி­னார்.

"பொதுத் தேர்­த­லில் வலு­வான ஆதரவு கிடைத்­தால் அர­சாங்­கத்­திற்குக் கடு­மை­யான முடி­வு­களை எடுப்­ப­தற்­கான ஆத­ரவும் நம்­பிக்­கை­யும் கிடைக்­கும்.

"அதன் மூலம் ஏற்ற, இறக்­கங்­க­ளைச் சமா­ளித்து சிங்­கப்­பூருக்கு வழி­காட்டி அதைப் பாது­காப்­பாக முன்­னேற்றிக் கொண்டுசெல்ல முடி­யும்," என்று மசெக வின் தலை­மைச் செய­லா­ள­ரு­மான திரு லீ குறிப்­பிட்­டார்.

கடந்த 2020 பொதுத் தேர்­த­லில் மசெக 61.2% வாக்­கு­க­ளைப் பெற்­றது. இதற்­குப் பதி­லாக அந்­தத் தேர்­த­லில் 51% வாக்­கு­க­ளு­டன் கட்சி நூலிழை பெரும்பான்மையில் வெற்றி பெற்­றி­ருந்­தால் அப்­போ­தும்­கூட மசெக அர­சாங்­கம்­தான் அமைந்­தி­ருக்­கும்.

சிங்­கப்­பூரை முடிந்த அள­வுக்­குச் சிறப்­பாக, செம்­மை­யாக கட்சி ஆட்சி புரிந்­தி­ருக்­கும். ஆனால், பல நல்ல நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளை­யும் அமைச்­சர்­களை­யும் கட்சி இழந்­தி­ருக்­கும். கட்­சி­யின் தலை­மைத்­துவக் குழு கணி­ச­மான அள­வுக்­குப் பல­வீ­னம் அடைந்­திருக்­கும் என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

ஒவ்­வொரு தேர்­த­லி­லும் எதிர்த்­த­ரப்பு அதிக இடங்­களில் வெற்றி பெறும் பட்­சத்­தில் எந்­தக் கட்சி அடுத்த அர­சாங்­கத்தை அமைக்­கும் என்­பதை தீர்­மா­னிக்­கக்­கூ­டிய நிலைக்­குப் பொதுத் தேர்தல் வந்துவிடும் என்­பதை அவர் சுட்­டி­னார். கடந்த பொதுத் தேர்­த­லில் பாட்­டாளிக் கட்சி 10 இடங்­களில் வென்­றதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

கடந்த பற்­பல ஆண்­டு­க­ளாக மசெக தன் கொள்கைகளை­யும் வாக்குறுதி­களை­யும் நிறை­வேற்றி வந்­தி­ருக்­கிறது. ஆனால், அது போதாது. தன்­ செயல்­திறனை வாக்­கு­களாக மாற்­று­வ­தற்­கான மக்­க­ளின் அங்­கீ­கா­ரத்தை அது பெற வேண்­டிய தேவை இருக்­கிறது என்­பதை திரு லீ வலி­யுறுத்­திக் கூறி­னார்.

அர­சி­யல் போரில் வெற்றி பெற­ கட்சி செய்ய வேண்­டிய மூன்று முக்­கிய காரி­யங்­களைத் திரு லீ குறிப்­பிட்­டார்.

மசெக தலை­வர்­கள், சிங்­கப்­பூருக்கு நீண்டகாலப் போக்கில் நன்மை பயக்­கும் என்று தாங்­கள் நம்­பும் கொள்­கை­க­ளை­யும் செயல்­திட்­டங்­க­ளை­யும் கைக்­கொள்­ளக்கூடிய திட்­ட­வட்­ட­மான, உறு­தி­யு­டன் கூடிய அர­சி­யல்­வா­தி­கள் என்­பதை மக்கள் உணர்ந்­து­கொள்­ளும் வகை­யில் கட்சியின் அர­சி­யல் தக­வல்­கள் இடம்­பெற வேண்­டும்;

எதிர்த்­த­ரப்பு முயற்­சி­களை முறி­ய­டித்து எதிர்த்­த­ர­ப்பு­க­ளின் பல­வீ­னங்­களை வாக்­கா­ளர்களுக்கு மசெக வெளிப்­ப­டுத்த வேண்­டும்;

மூன்­றா­வ­தாக, மசெக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கிளைச் செயல்­வீ­ரர்­களும் அடித்­தள நிலை­யில் பாடு­பட்டு குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­காக கட்சி எப்­படி எப்­ப­டி­யெல்­லாம் பாடு­ப­டு­கிறது என்­பதை விளக்க வேண்­டும் என்றார் திரு லீ.

சிங்­கப்­பூ­ரின் அர­சி­யல் தவ­றா­கப் போகு­மா­னால் அதன் ஆட்சிமுறை­யும் தவ­றா­கி­வி­டும். விளை­வாக சிங்­கப்­பூரர்­ அனை­வ­ரின் வாழ்­வும் பாதிக்­கப்­பட்­டு­வி­டும் என திரு லீ எச்­ச­ரித்­தார்.

கட்சி புதுப்­பிப்பு பற்றி கருத்துக் கூறிய திரு லீ, அடுத்த பொதுத் தேர்­த­லில் போட்­டி­யி­டக்­கூ­டிய ஆற்­றல்­மிக்க வேட்­பா­ளர்­கள் சிலரை கட்சி ஏற்­கெ­னவே அடை­யா­ளம் கண்­டு­கொண்­டுள்­ளது என்­றும் மேலும் பலர் அடை­யா­ளம் காணப்­பட்டு வரு­வ­தா­க­வும் கூறி­னார்.

"அடுத்த பொதுத் தேர்­த­லில் ஆற்­றல்­மிகு, பன்­ம­யம் மிகுந்த, பிர­தி­நி­தித்­து­வம் மிக்க வேட்­பா­ளர்­கள் குழுவை மீண்­டும் கள­மி­றக்க முடி­யும். அத்­த­கைய வேட்­பா­ளர்­களில் அனு­ப­வ­சா­லி­களும் புதியவர்­களும் இருப்­பார்­கள்.

"வாக்­கா­ளர்­க­ளு­டன் சேர்ந்து பாடு­பட்டு சிங்­கப்­பூரை முன்­னோக்கிக் கொண்டு­செல்ல அவர்­கள் ஆயத்­த­மாக இருப்­பார்­கள் என நம்­பு­கி­றேன்," என்­று பிர­த­மர் தமது உரையில் குறிப்பிட்டார்.

இத­னி­டையே, மசெக மாநாட்­டை­யொட்டி தமிழ் முர­சிடம் பேசிய போக்கு­வரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன், பொரு­ளி­யல், பண­வீக்­கம் அடிப்­ப­டை­யில் அடுத்த ஐந்து ஆண்­டு­கள் சவால்­மிக்க ஆண்­டு­க­ளாக இருக்­கும் என்­றார்.

மக்­க­ளுக்கு உதவ பல்­வேறு திட்­டங்­களை மசெக அர­சாங்­கம் செயல்­ப­டுத்தி உள்­ளது. தொடர்ந்து அதிக உத­வியை வழங்க அது தயா­ராக இருக்­கிறது என்றும் அவர் கூறி­னார்.

கூடுதல் செய்தி: இர்ஷாத் முகம்மது

மேலும் செய்தி பக்கம் 2ல்