தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாலத்தீவு தங்குவிடுதியில் தீ விபத்து; ஒன்பது இந்திய ஊழியர்கள் உயிரிழந்தனர்

1 mins read
0b0d9388-2eb8-4353-9119-8ecfd223eb51
தீ மூண்ட கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் வெளியே உட்கார வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அதிகாரிகள் மாற்று இடம் ஏற்பாடு செய்தனர். படம்: ஏஎஃப்பி -

மாலத் தீவில் நிகழ்ந்த மோச­மான தீ விபத்­தில் ஒன்­பது இந்­திய ஊழி­யர்­கள் உட்­பட 10 பேர் உயி­ரி­ழந்­த­னர். பலர் படு­கா­யங்­க­ளு­டன் மீட்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

விடு­முறை உல்­லா­சத் தள­மான தலை­ந­கர் மாலே­யில் வியா­ழன் இரவு வெளி­நாட்டு ஊழி­யர்­கள் நெரி­ச­லா­கத் தங்­கி­யி­ருந்த விடு­தி­யில் தீ மூண்­டது.

சேத­ம­டைந்த கட்­ட­டத்­தின் மேல் தளத்திலிருந்து பத்து சட­லங்­கள் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். கீழ்த்தளத்­தில் இருந்த வாகன பழு­து­பார்க்­கும் இடத்­தில் தீ மூண்­ட­தாக நம்­பப் படு­கிறது.

"இது­வரை பத்து உடல்­களை கண்­டு­பி­டித்­துள்­ளோம்," என்று தீ ­அணைப்­புச் சேவை­ அதி­காரி ஒரு­வர் நேற்று தெரி­வித்­தார்.

நான்கு மணி நேரம் போராடி தீ அணைக்­கப்­பட்­ட­தா­க­வும் அவர் கூறி­னார்.

இறந்­த­வர்­களில் ஒன்­பது பேர் இந்­தி­யர்­கள், மற்­ற­வர் பங்­ளா­தேஷ் நாட்­ட­வர்.

இதற்­கி­டையே வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் மோச­மான நிலையை மாலத்­தீ­வின் பல்­வேறு அர­சி­யல் கட்­சி­கள் குறைகூறியுள்ளன.

தலை­ந­கர் மாலே­யின் 250,000 மக்­கள் தொகை­யில் பாதி பேர் வெளி­நாட்­ட­வர்­கள் என நம்­பப்படு­கிறது.

இவர்­களில் பெரும்­பா­லோர் பங்­ளா­தேஷ், இந்­தியா, நேப்­பா­ளம், பாகிஸ்­தான், இலங்கை ஆகிய நாடு­களில் இருந்து வந்­த­வர்­கள்.

கொவிட்-19 தொற்று காலத்­தின்­போது அவர்­க­ளின் மோச­மான வாழ்க்­கைச் சூழல் வெளிச்­சத்­துக்கு வந்­தது.

அப்­போது, உள்­ளூர் மக்­க­ளை விட வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­டையே தொற்று மூன்று மடங்கு வேக­த்தில் பரவியது.