சிங்கப்பூர்-இந்தியா: விரைவில் பேநவ்-யுபிஐ பணப்பரிவர்த்தனை

சிங்கப்பூர்-இந்தியா: விரைவில் பேநவ்-யுபிஐ பணப்பரிவர்த்தனை

2 mins read

வேக­மான பணப் பரிவர்த்தனை களுக்கான தங்­க­ளு­டைய ஏற்­பா­டு­களை இணைப்­ப­தற்குத் தோதாக தொழில்­நுட்ப ஆயத்­தப் பணி­களை இந்­தி­யா­வும் சிங்­கப்­பூ­ரும் வெற்றி­க­ர­மாக முடித்­துள்­ளன.

இந்த ஏற்­பா­டு­கள் மூலம் யுபிஐ என்ற இந்­தி­யா­வின் பட்­டு­வாடா முறைக்­கும் பேநவ் என்ற சிங்­கப்­பூ­ரின் பட்­டு­வாடா முறைக்­கும் இடை­யில் பண­ப் ப­ரி­வர்த்­த­னை­களை உட­னுக்­கு­டன் கண் இமைக் கும் நேரத்­தில் மிக­வும் வசதி­யாக பாது­காப்­பாக நடத்தி முடிக்­க­லாம்.

இந்த இரண்டு பரி­வர்த்­தனை செய­லி­க­ளை­யும் இணைக்­கும் திட்­டத்தை இந்­தி­ய­ாவின் ரிசர்வ் வங்­கி­யும் சிங்­கப்­பூ­ரின் மத்­திய வங்­கி­யான சிங்­கப்­பூர் நாணய ஆணை ­ய­மும் உரு­வாக்கி வரு­கின்­றன. இது மிக விரை­வில் தொடங்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

"சிங்­கப்­பூர் தன்­னு­டைய பேநவ் முறையை இந்­தி­யா­வின் யுபிஐ முறை­யு­டன் இணைக்க விரும்­பு­கிறது. இந்­தத் திட்­டம் அடுத்த சில மாதங்­களில் பூர்த்­தி­யா­கும்.

"நடை­மு­றைக்கு வரும்­போது சிங்­கப்­பூ­ரில் இருக்­கும் யாரும் இந்­தி­யா­வில் இருக்­கும் தங்­க­ளு­டைய குடும்­பத்­துக்கு நேர­டி­யாக பணத்தை அனுப்ப முடி­யும்," என்று சிங்­கப்­பூருக்­கான இந்­தி­யத் தூதர் பி. கும­ரன் தெரி­வித்­தார்.

இந்­தத் திட்­டம் பற்றி இந்­தி­யப் பிர­த­மர் விரை­வில் அறி­விப்பு விடுக்­கும் வாய்ப்பு இருக்­கிறது என்று திரு கும­ரன் கூறி­ய­தாக ஏஎன்ஐ செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­துள்ளது.

சிங்­கப்­பூ­ரில் வேலை பார்க்­கும் ஊழி­யர்கள், சிறு தொகையை தன் குடும்­பத்­திற்கு அனுப்ப விரும்­பினா­லும் எந்­தச் செல­வு­மின்றி அதை வச­தி­யாக, பாது­காப்­பா­கச் செய்து­மு­டிக்க இந்த ஏற்­பாடு உத­வும் என்று அவர் கூறி­னார்.

யுபிஐ-பேநவ் இணைப்பு ஏற்­பாட்டின் மூலம் செலவு இராது என்­ப­தால் குறிப்­பாக இது வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு உத­வும்.

இந்­தி­யா­வுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடைப்­பட்ட உத்­தேச இணைப்­பின் வழி இந்­தி­யா­வில் இருந்து சிங்­கப்­பூ­ருக்கு கைப்­பே­சி­யைப் பயன்­ப­டுத்தி பணம் அனுப்­ப­லாம். அதே­போல, சிங்­கப்­பூ­ரில் இருந்து யுபிஐ செய­லி­யைப் பயன்­படுத்தி பணம் அனுப்­ப­லாம் எனத் தெரி கிறது. இந்தத் திட்­டம் பற்றி முதன்­மு­த­லாக 2021 செப்டம்பரில் அறி விக்கப்பட்டது.